மேலும் அறிய

தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

தமிழக அரசு இதனை இப்போராட்டத்தை பதிவு செய்து, டெல்லியிலுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்திற்கு இது பொருந்தாது, நெல்லை நேரடியாக கொள் முதல் செய்கின்றோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்ல வேண்டும்.

நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று தஞ்சையில்  எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

போராட்டத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய அரசு ஆன்-லைன் பதிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கலந்து கொண்டு கைதாகினர்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் நிருபர்களிடம் கூறுகையில்,இணையதளத்தில் முன் பதிவு செய்து,அவர்கள் குறிப்பிட கூடிய நாளில் அவர்கள் குறிப்பிடம் கொள் முதல் நிலையத்தில் நெல்லை விவசாயிகள் கொண்டு போய் விற்பனை செய்ய வேண்டும் என்று கொண்டு வந்திருக்கின்ற இந்த ஏற்பாடு, இந்திய அரசின் ஏற்பாடு, தமிழக அரசு அதனை செயல்படுத்துகின்றது. இது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருக்கின்றது.விவசாயிகள் இதற்கு அஞ்சி, தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்ககூடிய அவலம் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. கொள்முதலின் கொள்கையே தோற்று போய் விட்டது. இந்த கொள் முதல் கொள்கை தோற்கடித்தது ஆட்சியாளர்கள் தான்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

துன்பம் தாங்காமல் தனியாரிடம் விற்பனை செய்வது, அங்கு இங்கு கடன்களை வாங்கி விவசாயம் செய்து விஏஒவிடம் பதிவு செய்து, அவர்கள் சொன்ன தேதியில் போக முடியாவிட்டால், இந்த நெல்லை எங்கு வைத்திருக்க முடியும். உடனடியாக இணையதள பதிவு என்ற கொடூர விதிமுறைகளை நீக்கி, கடந்த காலங்களில் இருந்தது போல் நேரடி நெல் கொள் முதல் செய்ய வேண்டும். அதற்கு ஊழியர் பற்றாகுறை இருக்கின்றத என்றால், புதியதாக அதிக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நகலை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, தமிழக அரசு இதனை இப்போராட்டத்தை பதிவு செய்து, டெல்லியிலுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்திற்கு இது பொருந்தாது, நெல்லை நேரடியாக கொள் முதல் செய்கின்றோம்  என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்ல வேண்டும். அதனை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
தஞ்சை மாவட்டத்தில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்கள் ஏற்பு
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
கட்டுப்பாடற்ற இரத்த அழுத்தத்தால் விவசாயி அவதி... சிறப்பான உயர் சிகிச்சை அளித்து சரி செய்த தஞ்சை காமாட்சி மருத்துவமனை
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கான பாஜக வேட்பாளர் வேட்பு மனுதாக்கல்
மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
மேயர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர் சண்.ராமநாதன்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST
ஆதவ் கார் மோதி விபத்து! வலியால் துடித்த காவலர் உதவிய தவெக-வினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
Edappadi Palanisamy: ’’திமுகவுக்கு இது கடைசி தேர்தல்; அதிமுக ஆட்சில மூணே மாசத்துல கஞ்சாவ முழுசா ஒழிப்போம்’’ சூளுரைத்த ஈபிஎஸ்
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
TVK Vijay: ஸ்பீட் ஏத்தப்போகும் விஜய்! பரப்புரையில் ஃபயர் விட ரெடியாகும் தவெக!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
Udhayanidhi vs EPS: உதய் Vs ஈபிஎஸ்: அரசியல் நாகரிகம் அடியோடு அழிகிறதா? தனிமனித, தரம்தாழ்ந்த தாக்குதல்கள் தேவையா?
மனு நிராகரிப்பு... வேட்பாளர் சாலையில் உருண்டு போராட்டம்...
மனு நிராகரிப்பு... வேட்பாளர் சாலையில் உருண்டு போராட்டம்...
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
AIADMK: தென் தமிழகம் அதிமுக கோட்டையா? சூரியனை மறைக்குமா இலை? உண்மை இதுதான்!
TN Election 2026: தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
தமிழகத்தில் தேர்தல் நடத்த எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகுது? - தேர்தல் அதிகாரி வெளியிட்ட தகவல்
டீ போட்டுக் கொடுத்து கவனத்தை ஈர்த்த அப்சரா.. கடலூரில் வீதிவீதியாக அதிமுக பிரச்சாரம்
டீ போட்டுக் கொடுத்து கவனத்தை ஈர்த்த அப்சரா.. கடலூரில் வீதிவீதியாக அதிமுக பிரச்சாரம்
Embed widget