மேலும் அறிய

தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

தமிழக அரசு இதனை இப்போராட்டத்தை பதிவு செய்து, டெல்லியிலுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்திற்கு இது பொருந்தாது, நெல்லை நேரடியாக கொள் முதல் செய்கின்றோம் என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்ல வேண்டும்.

நெல் கொள்முதலில் விவசாயிகளை பாதிக்கும் ஆன்லைன் பதிவை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை காவிரி உரிமை மீட்புக் குழுவினர் இன்று தஞ்சையில்  எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர் .தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமை வகித்தார்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

போராட்டத்தின் போது, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலம் செயல்படும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விளைவித்த நெல்லை விற்பனை செய்ய அரசு ஆன்-லைன் பதிவை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் விவசாயிகள் உரிய நேரத்தில் நெல்லை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக காவிரி உரிமை மீட்புக் குழுவினர் ஆன்-லைன் பதிவு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் அரசாணை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், காவிரி உரிமை மீட்புக் குழுவினர் கலந்து கொண்டு கைதாகினர்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

காவிரி உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் நிருபர்களிடம் கூறுகையில்,இணையதளத்தில் முன் பதிவு செய்து,அவர்கள் குறிப்பிட கூடிய நாளில் அவர்கள் குறிப்பிடம் கொள் முதல் நிலையத்தில் நெல்லை விவசாயிகள் கொண்டு போய் விற்பனை செய்ய வேண்டும் என்று கொண்டு வந்திருக்கின்ற இந்த ஏற்பாடு, இந்திய அரசின் ஏற்பாடு, தமிழக அரசு அதனை செயல்படுத்துகின்றது. இது விவசாயிகளுக்கு பெரும் சுமையாக இருக்கின்றது.விவசாயிகள் இதற்கு அஞ்சி, தனியாரிடம் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்ககூடிய அவலம் அன்றாடம் நடந்து கொண்டிருக்கின்றது. கொள்முதலின் கொள்கையே தோற்று போய் விட்டது. இந்த கொள் முதல் கொள்கை தோற்கடித்தது ஆட்சியாளர்கள் தான்.


தஞ்சையில் நெல் கொள்முதலில் ஆன்லைன் முறையை ரத்து செய்ய வலியுறுத்தி அதன் நகல் எரிப்பு போராட்டம்

துன்பம் தாங்காமல் தனியாரிடம் விற்பனை செய்வது, அங்கு இங்கு கடன்களை வாங்கி விவசாயம் செய்து விஏஒவிடம் பதிவு செய்து, அவர்கள் சொன்ன தேதியில் போக முடியாவிட்டால், இந்த நெல்லை எங்கு வைத்திருக்க முடியும். உடனடியாக இணையதள பதிவு என்ற கொடூர விதிமுறைகளை நீக்கி, கடந்த காலங்களில் இருந்தது போல் நேரடி நெல் கொள் முதல் செய்ய வேண்டும். அதற்கு ஊழியர் பற்றாகுறை இருக்கின்றத என்றால், புதியதாக அதிக ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி நகலை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். எனவே, தமிழக அரசு இதனை இப்போராட்டத்தை பதிவு செய்து, டெல்லியிலுள்ள மத்திய அரசுக்கு, தமிழகத்திற்கு இது பொருந்தாது, நெல்லை நேரடியாக கொள் முதல் செய்கின்றோம்  என தமிழக முதல்வர் ஸ்டாலின் சொல்ல வேண்டும். அதனை தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
வெயிலுக்கு 'பிரேக்' போட்ட மழை... குளிர்ந்த காற்றில் ஹேப்பி மோடில் தஞ்சாவூர் மக்கள்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூர் இன்றைய வானிலை: மேகமூட்டமும் மதிய மழைக்கான வாய்ப்பும்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
தஞ்சாவூரில் இன்று மழை பெய்யுமா? வெளியான லேட்டஸ்ட் வானிலை அப்டேட்!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!
11 ஆண்டுகளாக தவிப்பு: இன்சூரன்ஸ் நிறுவன வாசலில் அமர்ந்து விவசாயி போராட்டம்... தஞ்சையில் பரபரப்பு!

வீடியோ

Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Tindivanam ADMK Issue:”எடப்பாடி கிட்டயே கேக்குறேன்!CVS இல்லாம அரசியலா”திண்டிவனம் அதிமுகவில் பரபரப்பு
TVK MLA Saravanan : ”வந்த வேலையை மட்டும் பாருங்க”ஆய்வுக்கு சென்ற தவெக எம்.எல்.ஏ!மிரட்டிய லாரி மேனேஜர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
விஜய் பேச்சை நேரலை செய்த அரசுப்பள்ளி; தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் - அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
38 ஆயிரம் கோடி முதலீடு ஆந்திராவுக்கு போயிடுமோ? தவெக அரசுக்கு இபிஎஸ் வார்னிங்
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
பள்ளியில் விஜய் பேச்சு நேரலை; அறிவை வளர்க்கவா? அரசியல் புகழ் பாடவா? தவெக அரசை விளாசிய திமுக
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
தனி விமானம் பிடித்து ஓடியது யார்? என் கரூர் மக்களுக்கு தெரியும்- செந்தில் பாலாஜி ஆவேசம்!
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
ஒரே சார்ஜில் 165 கி.மீட்டர் மைலேஜ்.. Vida இ ஸ்கூட்டர்கள் என்னென்ன? விலை, தரம் எப்படி?
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
“அடுத்த 30 வருஷத்துக்கும் சிஎம் விஜய்தான்” - தமிழக அரசியலில் அதிரடியைக் கிளப்பிய அமைச்சர்
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
இந்தியாவில் தினமும் 13 பள்ளிகள் மூடல்: இந்த மாநிலத்தில் பாதிக்கும் மேல்- வெளியான அதிர்ச்சி அறிக்கை!
Tamil Nadu By Election : தமிழகத்தில் 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை.! நீதிமன்றம் அதிரடி- இது தான் காரணமா.?
தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த தடை.! இது தான் காரணமா.?
Embed widget