மேலும் அறிய

தஞ்சையில்ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.14 லட்சம் பறிமுதல்!

அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த ரூ.54 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதியானது கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனால் அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து 15ம் தேதி மாலை முதல் தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தொடர்ந்து 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த பூண்டு வியாபரி மோகன்ராஜ் என்பவர் வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர்.

இதில் அவர் உரிய ஆவணமின்றி ரூ.54 ஆயிரம் வைத்து இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் அதிகாரிகளிடம் மார்க்கெட்டுக்கு பூண்டு வாங்க செல்வதாக தெரிவித்துள்ளார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த ரூ.54 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் தஞ்சை பட்டுக்கோட்டை பைப்பாஸ் சாலையில் ராகினி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த பாரூக் என்பவர் காய்கறி வாங்குவதற்காக திருச்சி மார்க்கெட்டுக்கு எடுத்து சென்றதாகவும், உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்ததவும் தெரிய வந்தது. 

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இதுவரை தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.34 லட்சத்து 53 ஆயிரத்து 486 உரிய ஆவணங்கள் இல்லாததால் 24 நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் 4 பேர்கள் மட்டும் உரிய ஆவணம் செலுத்தி பணத்தை மீட்டு சென்றுள்ளனர். இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சுரேந்தர் பைக்கை சோதனையிட்டனர். இதில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.60 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து  அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Imran Khan News: இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
இம்ரான் கான் இறந்துவிட்டாரா.?! உண்மை என்ன.? பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்ட முக்கிய அறிக்கை
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Honda Rebel 300 Vs RE Goan Classic 350: பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பாபர் பைக் பிரிவில் புதிய போட்டி.! என்ஃபீல்ட் கோவன் கிளாசிக் 350 உடன் மோதும் ஹோண்டா ரெபெல் 300
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Embed widget