மேலும் அறிய

தஞ்சையில்ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.14 லட்சம் பறிமுதல்!

அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த ரூ.54 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சையில் பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஆவணமின்றி எடுத்து செல்லப்பட்ட ரூ.2.14 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழக சட்டசபை தேர்தல் தேதியானது கடந்த 15ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. இதனால் அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து 15ம் தேதி மாலை முதல் தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரிகள் தொடர்ந்து 24 மணிநேரமும் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். 

ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு அதிகாரி ராஜேந்திரன் தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக நான்கு சக்கர வாகனத்தில் வந்த கரூர் மாவட்டத்தை சேர்ந்த பூண்டு வியாபரி மோகன்ராஜ் என்பவர் வாகனத்தை தடுத்து சோதனை செய்தனர்.

இதில் அவர் உரிய ஆவணமின்றி ரூ.54 ஆயிரம் வைத்து இருந்தது தெரியவந்தது. அப்போது அவர் அதிகாரிகளிடம் மார்க்கெட்டுக்கு பூண்டு வாங்க செல்வதாக தெரிவித்துள்ளார். அவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் அந்த ரூ.54 ஆயிரம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

இதேபோல் தஞ்சை பட்டுக்கோட்டை பைப்பாஸ் சாலையில் ராகினி தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்ததில் உரிய ஆவணம் இல்லாமல் ரூ.1 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தஞ்சை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் திருத்துறைப்பூண்டி பகுதியை சேர்ந்த பாரூக் என்பவர் காய்கறி வாங்குவதற்காக திருச்சி மார்க்கெட்டுக்கு எடுத்து சென்றதாகவும், உரிய ஆவணம் இல்லாததால் அதனை பறிமுதல் செய்ததவும் தெரிய வந்தது. 

இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், இதுவரை தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.34 லட்சத்து 53 ஆயிரத்து 486 உரிய ஆவணங்கள் இல்லாததால் 24 நபர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதில் 4 பேர்கள் மட்டும் உரிய ஆவணம் செலுத்தி பணத்தை மீட்டு சென்றுள்ளனர். இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் உரியவர்களிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் வல்லத்தில் உள்ள தனியார் கல்லூரி அருகில் நிலையான கண்காணிப்பு குழு அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சுரேந்தர் பைக்கை சோதனையிட்டனர். இதில் ஆவணங்கள் இல்லாமல் ரூ.60 ஆயிரத்து 800 ரூபாய் எடுத்துச் செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து  அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு தாசில்தார் சிவக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
தானியங்கள் சேமிப்பில் தகுந்த பாதுகாப்பு முறைகள்: வேளாண் துறை அட்வைஸ்
ஜி.எஸ்.டி விலக்கு... பங்குச்சந்தை அபாயமும் இல்லை! தபால் காப்பீடு எடுக்க ஜூன் 25 வரை நல்ல வாய்ப்பு
ஜி.எஸ்.டி விலக்கு... பங்குச்சந்தை அபாயமும் இல்லை! தபால் காப்பீடு எடுக்க ஜூன் 25 வரை நல்ல வாய்ப்பு
பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!
பார்க்கிங் ஒழுங்கின்மை: பெரம்பலூர் போக்குவரத்திற்கு பெரும் தலைவலி!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
Priya vs Pallavi: அசிங்கப்படுத்திய மேயர் பிரியா; பதிலடி கொடுத்த எம்எல்ஏ பல்லவி- பள்ளிகளில் அடுத்தடுத்து பரபரப்பு!
TN Govt MoU: அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
அட்ரா சக்க..! முதல் கையெழுத்திலேயே ரூ.18,600 கோடி முதலீடு, சிஎம் விஜய் போட்ட தொழில் ஒப்பந்தங்கள்
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Priya vs Pallavi: ’’ஆணவத்திலும் திமிர்லயும் இருக்கீங்க’’ பள்ளி வளாகத்தில் மேயர் பிரியா- எம்எல்ஏ பல்லவி ஷாக் மோதல்!
Peddi Twitter Review: ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
ராம் சரண் ஜான்வி கபூர் காம்போ..! ஆல்ரவுண்டராக பெத்தி படம் பிளாஸ்டா? ஃபிளாப்பா? திரைப்பட விமர்சனம்
Alisa Abdullah: பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேச்சு - திருச்சி சூர்யா கைது, தலைமறைவான முக்தாருக்கு வலைவீச்சு
TVK Vijay: காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
காங்கிரசுக்கு தூக்கிக் கொடுத்தது ஏன்? திமுக இருக்கக் கூடாது, டார்கெட் 2029? தவெகவின் திட்டம் என்ன?
Tamilnadu Round Up: நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
நாளை அமைச்சரவை கூட்டம், அரசுக்கு எதிராக வழக்கு,சிறுமிக்கு பாலியல் தொல்லை - தமிழ்நாட்டில் இதுவரை
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
TNEB-யில் திருடப்பட்ட 18 ஹார்ட் டிஸ்குகள் - டெண்டர், கொள்முதல், விசாரணை ஆவணங்கள் எங்கே? சிக்குவது யார்?
Embed widget