மேலும் அறிய

தஞ்சாவூரில் பறக்கும்படை அதிரடி: மூட்டை மூட்டையாக சிக்கிய எவர்சில்வர் டப்பாக்கள்! தேர்தல் நேரத்தில் பரபரப்பு

தஞ்சை வ.உ.சி.நகரில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் சென்டரில் விற்பனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சில மூட்டைகள் இருந்தன.

தஞ்சாவூர்: மூட்டை மூட்டையாக சிக்கிய எவர்சில்வர் டப்பாக்களை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அவற்றை திருப்பி அளித்தனர்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்தமாதம்(ஏப்ரல்) 23-ந் தேதி நடக்கிறது. வாக்காளர்களை கவரும் வகையில் பணம் அல்லது பரிசுப்பொருட்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும்படையினரும், நிலையான கண்காணிப்புக்குழுவினரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  தஞ்சை மாவட்டத்தில் 72 பறக்கும்படையினரும், 72 நிலையான கண்காணிப்புக்குழுவினரும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சை வ.உ.சி.நகரில் உள்ள ஒரு பார்சல் சர்வீஸ் சென்டரில் விற்பனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது அங்கு சில மூட்டைகள் இருந்தன. அந்த மூட்டைகளில் என்ன இருக்கிறது? என அதிகாரிகள் கேட்டபோது, எவர்சில்வர் டப்பாக்கள்(சம்படம்) இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு உரிய ஆவணங்கள் இருக்கிறதா? என கேட்டபோது, சரியான பதில் இல்லை. இதனால் இது குறித்து பறக்கும்படையினருக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.

உடன் பள்ளி கல்வித்துறை ஆய்வாளர் ஜேக்கப் வினோத் தலைமையிலான பறக்கும்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் வைக்கப்பட்டு இருந்த எவர்சில்வர் டப்பாக்களை பறிமுதல் செய்து மினிலாரியில் ஏற்றி கொண்டு தஞ்சை தாலுகா அலுவலகத்திற்கு வந்தனர்.

பின்னர் அந்த எவர்சில்வர் டப்பாக்கள் எல்லாம் தலைமையிடத்து துணை தாசில்தார் சரவணன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் வினோத் ஆகியோரிடம் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர். மொத்தம் 1,000 எவர்சில்வர் டப்பாக்கள் ஒப்படைக்கப்பட்டன. இந்த சில்வர் டப்பாக்கள் அடங்கிய மூட்டைகளை மினிலாரியில் இருந்து தாசில்தார் அலுவலகத்தில் இறக்கி வைக்கப்பட்டது. இதற்கிடையில் எவர்சில்வர் டப்பாக்களுக்கான உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட நபர்கள் கொண்டு வந்து அதிகாரிகளிடம் காண்பித்தனர். இதையடுத்து அந்த எவர்சில்வர் டப்பாக்கள் சம்பந்தப்பட்ட நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.60 ஆயிரம் பறிமுதல்

தஞ்சை அம்மன்பேட்டை பைபாஸ் சாலையில் ஜாய் செபஸ்டின் மேரி தலைமையிலான நிலையான கண்காணிப்புக்குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வியாபாரி ஒருவரை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் ரூ.60 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த பணம் பழைய இரும்பு கடைக்கு எடுத்து செல்வதாக அந்த வியாபாரி கூறினார். ஆனால் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் ரூ.60 ஆயிரத்தை வியாபாரியிடம் இருந்து நிலையான கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இந்த பணம் தஞ்சை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. தமிழக சட்டசபை தேர்தல் தேதியானது கடந்த 15-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது. 

இதனால் அன்று மாலை முதல் தேர்தல் நடத்தை வழிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. இதையடுத்து 15-ந் தேதி மாலை முதல் தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, இதுவரை தஞ்சை சட்டசபை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.13 லட்சத்து 99 ஆயிரத்து 226 உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்திற்கு உரிய ஆவணங்களை காண்பித்தால் உரியவரிடம் திரும்ப ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளின் அலட்சியம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை
அதிகாரிகளின் அலட்சியம்: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய பூதலூர் கோவில்பத்து பேருந்து நிழற்குடை
5 கி.மீ நடக்கும் அவலம்: பேருந்து நிற்க மறுப்பதால் கொந்தளிக்கும் சம்பைபட்டினம் மக்கள்
5 கி.மீ நடக்கும் அவலம்: பேருந்து நிற்க மறுப்பதால் கொந்தளிக்கும் சம்பைபட்டினம் மக்கள்
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
வரும் 12ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்... யார் நடத்தப்போறாங்க? எதுக்காக தெரியுங்களா?
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!
மதநல்லிணக்கத்தின் மகுடம்! தஞ்சை அருகே 300 ஆண்டுகால பாரம்பரியம்: மொஹரம் பண்டிகையில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய இந்துக்கள்!

வீடியோ

CV Shanmugam Next Move | பதவி கொடுக்காத EPS அப்செட்டில் சி.வி.சண்முகம் அடுத்தது என்ன?
Mumbai Local Train Murder ஓடும் ரயிலில் கொடூர கொலை வேடிக்கை பார்த்த பயணிகள் வெளியான அதிர்ச்சி வீடியோ
CM Vijay |
Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko: குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
குதிரை பேரத்தில் ஈடுபட்டாரா முதலமைச்சர் விஜய்.? வைகோ சொன்ன அதிர்ச்சித் தகவல்
Manickam Tagore: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரானார் மாணிக்கம் தாகூர்; தேசிய தலைமை அறிவிப்பு
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
மாணவர்கள் அடையாள அட்டையில் சாதிச் சான்றிதழ்? தேசிய கல்விக்கொள்கை திட்டமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்
US Iran Tension: மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்.! ஈரானிய ஏவுகணை தளங்கள் மீது அமெரிக்கா அட்டாக்.! நடப்பது என்ன.?
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Bhagyaraj Death: சிரிச்சுக்கிட்டே இருந்தார்… பாக்யராஜ் திடீரென உயிரிழந்தது எப்படி? வெளியான பகீர் தகவல்
Brezza Vs Victoris CNG: புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
புதிய மாருதி பிரெஸ்ஸாவா.? விக்டோரிஸ் CNG-ஆ.? அதிக இடவசதியோட உங்க பணத்துக்கு வொர்த்தான கார் எது.?
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
யாராலும் நம்பமுடியாது; உதவிப் பேராசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டில் முறைகேடு? பூஜ்ய மதிப்பெண் மர்மம்!
Renault Kwid Facelift: மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
மயக்க வரும் அழகான குட்டிப் பையன்.! க்விட்-ஐ அப்கிரேட் செய்த ரெனால்ட்; வெளியான Facelift லாஞ்ச் தேதி
Embed widget