மேலும் அறிய

தஞ்சை: 250 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்! மூவர் கைது..!

காரில் மொத்தம் 250 கிலோ போதைப்பொருட்கள் கடத்தி வந்துள்ளனர். இது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டவை என்றும் தெரிய வந்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர். இளைய தலைமுறையினர் மத்தியில் போதை பழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட எஸ்.பி.ரவளிப்பிரியா உத்தரவின் பேரில் போதைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

போதைப் பழக்கத்தினால் ஏற்படும் பாதிப்புகள்:

இளம் வயதில் பழகிக் கொள்ளும் போதைப் பழக்கங்கள் மெல்ல மெல்ல அடிமையாக்கி விடுகிறது. போதைப் பழக்கத்தினால் முதலில் பாதிப்படைவது மனிதனின் நரம்பு மண்டலம். மூளைக்குச் செல்லும் நரம்புகளைப் பாதித்து நினைவாற்றலை குறைக்கச் செய்கின்றது. இதன் காரணமாக சீரான இதயத்துடிப்பு பாதிக்கப்பட்டு இரத்த அழுத்தம் அதிகரிக்கின்றது. உடலில் ஏற்படும் இத்தகைய மாற்றங்களினால் இதை உட்கொண்டவர்கள் மனதளவில் தன்னம்பிக்கை இழக்கிறார்கள். போதைப் பொருட்களினால் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், சமுதாயம் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் பாதிப்புகள் என பலவகையான தீமைகளை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.

தஞ்சையில் தீவிர சோதனை:

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு இருந்தனர். சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் போலீசார் திருவிடைமருதூர்  சரகம் ஐந்து தலைப்பு வாய்க்கால் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியே வந்த கார்கள் மற்றும் சரக்கு வாகனங்கள், லாரிகள் என அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்தனர்.அப்போது கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற இரண்டு கார்களை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது  ஒவ்வொரு காரிலும் 22 சாக்கு பைகள் இருந்தது. அதை பிரித்து பார்த்தபோது அதில் ஹான்ஸ் புகையிலை உட்பட பல போதைப்பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


தஞ்சை: 250 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்! மூவர் கைது..!

இதையடுத்து திருவிடைமருதூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு இரண்டு கார்கள் மற்றும் அதில் வந்தவர்களை போலீசார் பிடித்து கொண்டு சென்றனர். பின்னர் கார்களில் வந்தவர்களிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அவர்கள் திருவிடைமருதூர் கரிக்குளம் குமரன் தெருவை கந்தசாமி என்பவரின் மகன் துரைசாமி (42), கும்பகோணம், துவரங்குறிச்சி புது தெருவை சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்பவரின் மகன் தட்சிணாமூர்த்தி (32),  கடிச்சம்பாடி கீழத்தெருவை சேர்ந்த ஞானசுந்தரம் மகன் ரஞ்சித் (25)  என்பது தெரிய வந்தது.

250 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்:


தஞ்சை: 250 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்! மூவர் கைது..!

காரில் மொத்தம் 250 கிலோ போதைப்பொருட்கள் கடத்தி வந்துள்ளனர். இது கும்பகோணம் மற்றும் மயிலாடுதுறை பகுதிகளில் உள்ள கடைகளுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட்டவை என்றும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து திருவிடைமருதூர் போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் போதைப்பொருட்கள் கடத்த பயன்படுத்தப்பட்ட கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரின் இந்த அதிரடி வாகனச்சோதனையில் போதைப்பொருட்கள் கைப்பபற்றப்பட்டுள்ளதற்கு பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Thoothukudi district Holiday : நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான முக்கிய அறிவிப்பு
நாளை முதல் பள்ளி, கல்லூரி, அரசு ஊழியர்களுக்கு 3 நாள் தொடர் விடுமுறை.! வெளியான அரசாணை
Embed widget