மேலும் அறிய

Mettur Dam: மேட்டூர் அணை திறப்பதற்குள் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மேட்டூர் அணையைத் திறப்பதற்குள் தூர் வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்: மேட்டூர் அணையைத் திறப்பதற்குள் தூர் வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 

மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கல்லணை, திருச்சென்னம்பூண்டி, மருவூர், சாத்தனூர், கோதங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி ஆகிய 6 இடங்களில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. 4 மணல் குவாரிகள் கல்லணை அருகிலேயே இயங்குவதால், கல்லணையின் கட்டுமானத்துக்கு பாதிப்பு ஏற்படும். இந்த மணல் குவாரிகளை ரத்து செய்ய வேண்டும். 

கலெக்டர்: தூர் வாரும் பணியில் மொத்தமுள்ள 1,068 கி.மீ.}இல், 891 கி.மீ. முடிவடைந்துள்ளது. மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

ஆம்பலாப்பட்டு ஆ. தங்கவேல்: நிலத்தின் தன்மை அறிந்து சாகுபடி செய்தால், நிறைய விளைச்சல் கிடைக்கும். அதற்கு ஏதுவாக மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

வேளாண் துறை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா: நடமாடும் மண் பரிசோதனை ஊர்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருவோணம் வி.கே. சின்னதுரை: மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், பல இடங்களில் இன்னும் தூர் வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளது. இப்பணியை முழுமையாகச் செய்ய வேண்டும். 

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவதற்கு முன்பாக வேளாண் துறை, கூட்டுறவுத் துறை, நீர்வளத் துறை ஆகியவற்றின் மாநில உயர் அலுவலர்கள், விவசாயிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடத்தப்பட வேண்டும்.


Mettur Dam: மேட்டூர் அணை திறப்பதற்குள் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பாபநாசம் கே.எஸ். முகமது இப்ராஹிம்: மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக கல்லணை, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் தூர் வாரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

நரியனூர் பி. செந்தில்குமார்: திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் விவசாயிகளின் பெயரில் ஆலை நிர்வாகம் மோசடியாகப் பெற்ற வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கலெக்டர்: கடன் தள்ளுபடி தொடர்பாக மாநில அளவில் விரைவில் நடைபெறவுள்ள வங்கியாளர்கள் கூட்டத்தில் விவாதப் பொருள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

இதனிடையே, பயிர்க் கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாசத்தை ஓராண்டாக மாற்றி அமைக்க வேண்டும். தூர் வாரும் பணியை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வடக்கு மாவட்டத் தலைவர் ஆர். செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் நெற்றியில் நாமமிட்டும், கையில் நெற்கதிர்களை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மேலும், கடந்த 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி, கூட்டுறவு கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தற்கொலையிலிருந்து காப்பாற்ற கோரியும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு, முழக்கங்கள் எழுப்பியவாறு மனு அளித்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN GOVT Announcements : 20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
20 லட்சம் பேருக்கு வீட்டுமனைப்பட்டா.! சட்டமன்றத்தில் கொத்து கொத்தாக அறிவிப்பு- வருவாய்துறை அசத்தல்
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
தமிழகத்தில் போதைப்பொருள் கோரத்தாண்டவம்: 24 மணி நேரத்தில் 5 படுகொலைகள்!- புது ஆட்சியிலும் இதே நிலையா?அன்புமணி
Crop Loan Waivers : தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
தவெகவின் 100 நாள் ஆட்சியில் விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! 110 விதியில் CM விஜய் அசத்தல் அறிவிப்பு
TVK vs DMK:
TVK vs DMK: "உதயநிதிக்கு கண்ணியத்தை கற்றுக்கொடுங்கள்.." ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமைச்சர் ரமேஷ் அட்வைஸ்
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
வெட்கக்கேடு, மோசம்; திருப்புகழ் குழு அறிக்கையை தமிழக அரசு ஒளித்து வைத்திருப்பது ஏன்? பாமக கேள்வி
Udhayanidhi: உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
உதயநிதிக்கு சவால் விட்ட அமைச்சர் கில்லி சரத்..! போதைப்பொருள் விவகாரம் - கடுப்பான கே.என். நேரு
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
சட்டசபையில் உதயநிதி- ஆதவ் நேருக்கு நேர் கடும் வாக்குவாதம்.! மோதிக்கொண்ட திமுக- தவெக.! நடந்தது என்ன.?
VinFast VF5: சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
சிங்கிள் சார்ஜில் 326 கிமீ மைலேஜ்.? நெக்ஸானுக்கு நெருக்கடி கொடுக்குமா வின்ஃபாஸ்ட் EV.? விலை என்ன.?
Embed widget