மேலும் அறிய

Mettur Dam: மேட்டூர் அணை திறப்பதற்குள் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

மேட்டூர் அணையைத் திறப்பதற்குள் தூர் வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர்: மேட்டூர் அணையைத் திறப்பதற்குள் தூர் வாரும் பணியை முழுமையாக முடிக்க வேண்டும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர். 

மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:

அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் கல்லணை, திருச்சென்னம்பூண்டி, மருவூர், சாத்தனூர், கோதங்குடி, கோவிந்தநாட்டுச்சேரி ஆகிய 6 இடங்களில் மணல் குவாரி திறக்கப்பட்டுள்ளது. 4 மணல் குவாரிகள் கல்லணை அருகிலேயே இயங்குவதால், கல்லணையின் கட்டுமானத்துக்கு பாதிப்பு ஏற்படும். இந்த மணல் குவாரிகளை ரத்து செய்ய வேண்டும். 

கலெக்டர்: தூர் வாரும் பணியில் மொத்தமுள்ள 1,068 கி.மீ.}இல், 891 கி.மீ. முடிவடைந்துள்ளது. மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக அனைத்து பணிகளும் முடிக்கப்படும்.

ஆம்பலாப்பட்டு ஆ. தங்கவேல்: நிலத்தின் தன்மை அறிந்து சாகுபடி செய்தால், நிறைய விளைச்சல் கிடைக்கும். அதற்கு ஏதுவாக மண் பரிசோதனை செய்யப்பட வேண்டும்.

வேளாண் துறை இணை இயக்குநர் நல்லமுத்து ராஜா: நடமாடும் மண் பரிசோதனை ஊர்திக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

திருவோணம் வி.கே. சின்னதுரை: மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், பல இடங்களில் இன்னும் தூர் வாரும் பணி முடிக்கப்படாமல் உள்ளது. இப்பணியை முழுமையாகச் செய்ய வேண்டும். 

சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் தேதி திறக்கப்படுவதற்கு முன்பாக வேளாண் துறை, கூட்டுறவுத் துறை, நீர்வளத் துறை ஆகியவற்றின் மாநில உயர் அலுவலர்கள், விவசாயிகள் அடங்கிய ஆலோசனைக் கூட்டம் தஞ்சாவூரில் நடத்தப்பட வேண்டும்.


Mettur Dam: மேட்டூர் அணை திறப்பதற்குள் தூர்வாரும் பணிகளை முழுமையாக முடிக்க வேண்டும் - குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்

பாபநாசம் கே.எஸ். முகமது இப்ராஹிம்: மேட்டூர் அணை திறப்பதற்கு முன்பாக கல்லணை, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் தூர் வாரும் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

நரியனூர் பி. செந்தில்குமார்: திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை விவகாரத்தில் விவசாயிகளின் பெயரில் ஆலை நிர்வாகம் மோசடியாகப் பெற்ற வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

கலெக்டர்: கடன் தள்ளுபடி தொடர்பாக மாநில அளவில் விரைவில் நடைபெறவுள்ள வங்கியாளர்கள் கூட்டத்தில் விவாதப் பொருள் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு விவாதங்கள் நடந்தது.

இதனிடையே, பயிர்க் கடனைத் திரும்பச் செலுத்தும் கால அவகாசத்தை ஓராண்டாக மாற்றி அமைக்க வேண்டும். தூர் வாரும் பணியை உரிய காலத்தில் முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பு) வடக்கு மாவட்டத் தலைவர் ஆர். செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் நெற்றியில் நாமமிட்டும், கையில் நெற்கதிர்களை ஏந்தியும் முழக்கங்கள் எழுப்பியவாறு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

மேலும், கடந்த 2011 முதல் 2018 ஆம் ஆண்டு வரை வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வங்கி, கூட்டுறவு கடன், கல்விக் கடனை தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும், தற்கொலையிலிருந்து காப்பாற்ற கோரியும் விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கத் துணைத் தலைவர் கக்கரை ஆர். சுகுமாரன் தலைமையில் விவசாயிகள் கழுத்தில் தூக்குக் கயிறு மாட்டிக் கொண்டு, முழக்கங்கள் எழுப்பியவாறு மனு அளித்தனர்.

தலைப்பு செய்திகள்

கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை
தெருநாய்களுக்கு வெறிநாய் கடி சிறப்பு தடுப்பூசி செலுத்தும் முகாம்: கும்பகோணத்தில் அதிரடி நடவடிக்கை

வீடியோ

இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE
கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்.. நாளை ரிலீசாகிறது SPIDER-MAN: BRAND NEW DAY - எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
மருத்துவ இடங்களைக் காற்றில் பறக்கவிட்ட தவெக அரசு; வாய்பொத்தி நின்ற அரசு வழக்கறிஞர்கள்- ஸ்டாலின் கடும் கண்டனம்
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Scorpio N vs XUV 7XO: மாஸாக வெளியாகும் மஹிந்திரா ஸ்கார்ப்பியோ Updated ஃபேஸ்லிஃப்ட்: 7XO-க்கு போட்டியா?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Upcoming Hyundai SUV: அலப்பறை கிளப்புறோம்.. வரப்போது ஹுண்டாயின் 3 புதிய எஸ்யூவி கார்கள் - என்னென்ன?
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Udhayanidhi Stalin: ரீல்ஸ் போராளிகளை கொண்டாடுகிறார்கள்.. உதயநிதி ஸ்டாலின் கடுமையான விமர்சனம்!
Embed widget