மேலும் அறிய

கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பெண் கவுன்சிலரின் கணவர் கைது

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகராட்சி பெண் கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த வழக்கில் தலைமறைவாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகராட்சி பெண் கவுன்சிலரின் கணவரை போலீசார் கைது செய்தனர்.

சோதனை நடத்த கோர்ட் அனுமதி

கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (41). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர். இவரது மனைவி ரூபின்ஷா. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர். கும்பகோணம் மாநகராட்சி 24-வது வார்டு கவுன்சிலர். இந்நிலையில் அலெக்ஸ் வீட்டில் கத்தி, அரிவாள் உட்பட பல பயங்கர ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக கும்பகோணம் மேற்கு போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்நிலையில் அலெக்சின் மனைவி மாநகராட்சி கவுன்சிலர் என்பதால் அவரது வீட்டில் சோதனை செய்ய அனுமதி கோரி கும்பகோணம் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். சோதனை நடத்த கோர்ட் அனுமதி அளித்தது.

கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்தவர்கள்

இதையடுத்து கும்பகோணம் மேற்கு போலீசார் அலெக்ஸ் வீட்டில் திடீரென சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் ஒரு அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் 4 பேர் பதுங்கி இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். பின்னர் அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த கெயில் ஆண்டனி(22), அர்னால்டு ஆண்டனி(23), அருண்குமார்(21), பால்சாமி(23) என்பதும், கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த நிலையில் அவர்கள் இங்கு பதுங்கி இருப்பதும் தெரியவந்தது.


கொலை வழக்கில் தொடர்புடையவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த பெண் கவுன்சிலரின் கணவர் கைது

ஆயுதங்களும் பறிமுதல்

இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். மேலும் கட்டிலுக்கு அடியில் சோதனை செய்த போது, அங்கு 10-க்கும் மேற்பட்ட கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்தவர்களுக்கு வீட்டில் அடைக்கலம் கொடுத்ததாலும் அலெக்ஸ் மீது பல்வேறு வழக்குகளும் உள்ளதால் போலீசார் அவரை கைது செய்ய தேடிவந்தனர். தலைமறைவாக இருந்த அலெக்சை பிடிக்க சிறப்பு தனிப்படை அமைத்து மாவட்ட எஸ்.பி., ஆசிஷ் ராவத் உத்தரவிட்டார். 

தலைமறைவான கவுன்சிலரின் கணவர் கைது

தொடர்ந்து டிஎஸ்பி., கீர்த்திவாசன் தலைமையில், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் அலெக்ஸ் உறவினர்கள் மற்றும் நண்பர்களை கண்காணித்து வந்தனர். அப்போது கும்பகோணம் உழவர் சந்தை அருகே ஓர் இடத்தில் அலெக்ஸ் பதுங்கி இருப்பதாக  தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அலெக்சை கைது செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja vs TVK Vijay |”பாட்டு பாடுனீங்களே விஜய்..உங்க மகனுக்கு ஒரு நியாயமா?”விஜய் மீது H.ராஜா அட்டாக் | New Education PolicyPonmudi Vs MK Stalin | பறிபோன விழுப்புரம்! அப்செட்டில் பொன்முடி! காலரை தூக்கும் மஸ்தான் | DMKEPS Son Politics Entry | அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் அரசியலுக்கு வரும் EPS மகன்?உதயநிதி, விஜய்க்கு ஸ்கெட்ச்Durai murugan Hospitalized | துரைமுருகனுக்கு தீவிர சிகிச்சை?HOSPITAL  விரையும் உதயநிதி மருத்துவர்கள் சொல்வது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
மார்ச் 14ஆம் தேதி தமிழக பட்ஜெட் தாக்கல் – அறிவிப்பை வெளியிட்ட சபாநாயகர் அப்பாவு
தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி !
ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சை நீதிமன்றம் கண்டிக்கும் என நான் நம்புகிறேன் - அமைச்சர் பி.டி.ஆர் பேட்டி!
CBI on 2G Case: 2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
2G வழக்கில் ஆ. ராசா, கனிமொழிக்கு மீண்டும் சிக்கல்.? ஆட்டத்தை தொடங்கிய சிபிஐ...
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
ADMK BJP: எடப்பாடியை சுத்து போடும் பாஜக - கூட்டணியில் சிக்கும் அதிமுக? ராஜேந்திர பாலாஜி மீது சிபிஐ வழக்கு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
TN Govt: ரைட்ரா..! சான்று ரத்தோடு, இனி ஆசிரியர் பணிக்கு போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம் - தமிழ்நாடு அரசு உத்தரவு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
Top 10 News: டெல்லி முதல்வர் யார்? புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் நாளை பதவியேற்பு
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
மின்சார பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு.. இதான் சான்ஸ். விட்டு விடாதீர்கள்...!
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Trichy Tidel Park: திருச்சின்னா சும்மாவா..! வந்தது புதிய ஐடி கட்டிடம், 5 ஆயிரம் பேருக்கு ஈசியா வேலை, இவ்வளவு வசதிகள் இருக்கா?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.