மேலும் அறிய

’வீட்டு மனை கேட்டு வீடியோ’ 24 மணி நேரத்தில் வந்தது பட்டா..!

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. அதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறார்

தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சித்தலைவர்களை தமிழ்நாடு அரசு நியமித்து வருகிறது. அதனையொட்டி தஞ்சாவூர் மாவட்டத்திற்கு தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்று வருகிறார். இடப்பிரச்சினை காரணமாக வீடு கட்ட உறவினர்கள் தடுத்ததால், பாதிக்கப்பட்ட பெண் கண்ணீருடன் வாட்ஸ் அப் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்த நிலையில், அவரது குடும்பச் சூழல் குறித்து கேட்டறிந்து, 24 மணி நேரத்தில் அவரது புகார் மீது நடவடிக்கை எடுத்த, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவரது வீட்டிற்கு நேரடியாகச் சென்று வீட்டு மனை பட்டாவை வழங்கி அந்த பெண்ணை இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கினார். 

’வீட்டு மனை கேட்டு வீடியோ’ 24 மணி நேரத்தில் வந்தது பட்டா..!
 
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சொர்ணக்காடு ஊராட்சி, பட்டத்தூரணி வடக்கு கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கரன் மனைவி மணியம்மை, குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இவர் தனது வசித்து வரும் வீட்டினை புதுப்பித்துக் கட்ட முடிவு செய்தார். ஆனால், அந்த இடம் சம்பந்தமாக, உறவினர்கள் சிலர் இடையூறு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த இரு தினங்களுக்கு முன்பு மணியம்மை, கண்ணீருடன் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், அனைத்து பிரச்சனைகளையும் விரிவாகப் பேசி, மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் பாலசந்தர், இதுகுறித்து உடனடியாக மாவட்ட ஆட்சியரின் கவனத்திற்கு கொண்டு சென்றார். 
 
இதையடுத்து ஆட்சியரின் உத்தரவின்பேரில், பேராவூரணி வட்டாட்சியர் ஜெயலெட்சுமி, பட்டத்தூரணி கிராமத்திற்கு, நேரடியாகச் சென்று ஆய்வு செய்ததில், அந்த நிலம் புஞ்சை தரிசு வகைப்பாடு கொண்டது எனவும், அவர் அந்தப் பகுதியில் தொடர்ந்து வசித்து வருவதாகவும், அவருக்கு வீட்டுமனை பட்டா வழங்கலாம் என ஆட்சியரிடம் தாசில்தார் தெரிவித்துள்ளார். அதனையடுத்து வீட்டு மனைப் பட்டா வழங்க ஏதுவானது எனவும் தெரியவந்தது. மேற்படி கிராம புஞ்சை தரிசு வீட்டு மனைப் பட்டா வழங்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு 24 மணி நேரத்திற்குள் அவர் கோரிக்கையை ஏற்று, வீட்டுமனைப் பட்டாவினை, சனிக்கிழமை மாலை சொர்ணக்காடு கிராமத்திற்கு, நேரடியாகச் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வழங்கினார். வீட்டுமனைப் பட்டாவினை பெற்றுக்கொண்ட மணியம்மை, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் நன்றியினை தெரிவித்தார்.
 
பொதுமக்களுக்கு எந்த பிரச்னை என்றாலும் தன்னை உடனடியாக தொடர்புகொள்ளலாம் என்றும்,  மாவட்ட மக்களின் நலனில் அக்கறை செலுத்துவதே தனி முதல் பணி என ஆட்சியர் கூறியுள்ளார்

தலைப்பு செய்திகள்

பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி செப்.29-ல் போராட்டம்: தஞ்சையில் 28 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
பருவகால பணியாளர்கள் பணி நிரந்தரம் கோரி செப்.29-ல் போராட்டம்: தஞ்சையில் 28 மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை
சம்பா இலக்கு என்ன? கடைமடைக்கு தண்ணீர் எப்போது? – செய்தியாளர்களின் தொடர் கேள்விகளை தவிர்த்த அமைச்சர் வினோத்
சம்பா இலக்கு என்ன? கடைமடைக்கு தண்ணீர் எப்போது? – செய்தியாளர்களின் தொடர் கேள்விகளை தவிர்த்த அமைச்சர் வினோத்
அதிகாலையில் அம்மாப்பேட்டை மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: என்ன தெரியுங்களா?
அதிகாலையில் அம்மாப்பேட்டை மக்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: என்ன தெரியுங்களா?
போதை ஒழிப்பு விழிப்புணர்வு... 48 நிமிடத்தில் ரோலர் ஸ்கேட்டிங்கில் 12 கி.மீ கடந்து 6 வயது சிறுமி சாதனை
போதை ஒழிப்பு விழிப்புணர்வு... 48 நிமிடத்தில் ரோலர் ஸ்கேட்டிங்கில் 12 கி.மீ கடந்து 6 வயது சிறுமி சாதனை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Speech:
"ஃப்ராடு, கரூர் கேங், ABUSE" திமுகவை வெளுத்து வாங்கிய விஜய் - வேடிக்கை பார்த்த உதயநிதி ஸ்டாலின்
Udhayanidhi Stalin: ”கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
கொடநாட்டில் வாட்ச்மேன் வேலை பார்த்த CM விஜய்” கடுப்பாகி பேசிய உதயநிதி ஸ்டாலின்
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
ரூ. 6 லட்சத்தில் 5 ஸ்டார் பாதுகாப்பு! புது செடான் மாடலை களமிறக்கும் டாடா- என்னென்ன வசதிகள்?
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
டக்கர் மோடில் டாடா; EV, CNG வாகன விற்பனையில் இமாலய சாதனை! நாட்டின் Top Selling கார் இதுதான்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
CM Vijay: பேசி பழகிய பொய்.. வாங்கிப்பழகிய கை.. உங்களுக்கு அரசியல் தேவையா? - திமுகவை அலறவிட்ட விஜய்!
Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: புருஷனைத் திட்டித் தீர்த்த சாமுண்டீஸ்வரி.. ஏத்திவிட்டு வேடிக்கைப் பார்த்த சந்திரகலா - கார்த்திகை தீபத்தில் இன்று
New 7 Seater SUV EV: இந்தியா வரும் ஃபாரின் 7 சீட்டர் EV - AWD வசதி, 594KM ரேஞ்ச் - அம்சங்கள் எப்படி? பட்ஜெட் தாங்குமா?
இந்தியா வரும் ஃபாரின் 7 சீட்டர் EV - AWD வசதி, 594KM ரேஞ்ச் - அம்சங்கள் எப்படி? பட்ஜெட் தாங்குமா?
Udhayanidhi Stalin : ‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ உதயநிதிக்கு போன் போட்ட மு.க.ஸ்டாலின்..!
Embed widget