தேர்தல்களில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியமைக்காக தஞ்சை கலெக்டருக்கு விருது வழங்கல்
“என் இந்தியா, என் வாக்கு – இந்திய ஜனநாயகத்தின் இதயம் குடிமகன்” என்ற கருப்பொருளுடன், 16வது தேசிய வாக்காளர் தினம் டில்லியில் நடந்தது.

தஞ்சாவூர்: தேர்தல்களில் தொழில்நுட்பத்தை சிறப்பாக பயன்படுத்தியதற்காக தஞ்சை கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு டெல்லியில் நடந்த விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்கி பாராட்டுக்கள் தெரிவித்தார்.
தேர்தல்களில் தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்திய, தஞ்சாவூர் மாவட்டத்திற்கான தேர்தல் ஆணையம் மூலம் வழங்கும் தேசிய அளவிலான விருதினை இன்று ஜனாதிபதி திரெளபதி முர்மு, தஞ்சாவூர் கலெக்டருக்கு வழங்கிய பாராட்டினார்.
இந்திய தேர்தல் ஆணையத்தால், ஆண்டுதோறும் ஜன.25ம் தேதி, தேசிய வாக்காளர் நாள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, “என் இந்தியா, என் வாக்கு – இந்திய ஜனநாயகத்தின் இதயம் குடிமகன்” என்ற கருப்பொருளுடன், 16வது தேசிய வாக்காளர் தினம் டில்லியில் நடந்தது.
இவ்விழாவில், ஜனாதிபதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தேர்தல் பணிகளை சிறப்பாக செய்த, 14 மாவட்டங்கள் மற்றும் அதிகாரிகளுக்கான விருதினை வழங்கினார். இதில், தேர்தல்களில் தொழில்நுட்பத்தைத் திறம்பட பயன்படுத்துதல், பிரிவில், 2025 ஆண்டுக்கான சிறந்த மாவட்டத்துக்கான விருதுக்கு, பிகாரில் உள்ள கிழக்கு சாம்பரான் மாவட்டம், கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம், தமிழகத்தில், தஞ்சாவூர் மாவட்டம் இடம் பெற்று இருந்தன.
தஞ்சாவூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்தி, இணையவழியில் வாக்காளர்களின் விபரங்களை பதிவேற்றம் செய்தமைக்காக, தஞ்சாவூர் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திற்கு, ஜனாதிபதி திரெளபதி முர்மு விருதை வழங்கி பாராட்டினர்.
இவ்விழாவில், சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், முதன்மைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் டாக்டர் சுக்பீர் சிங் சந்து மற்றும் டாக்டர் விவேக் ஜோஷி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















