மேலும் அறிய

மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 3 ஆண்டு சிறை

தன் கையில் வைத்திருந்த பேனாவை வேண்டுமென்றே கீழே போட்டு சிறுமி ஒருவரை குனிந்து எடுக்க சொல்லி பாலியல் நோக்கத்தோடு பாலசுப்பிரமணியம் பார்த்தார்.

தஞ்சாவூர்: பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 15 வயது சிறுமி 9-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ந் தேதி வகுப்பறைக்கு சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்த நாகை மாவட்டம் ஆலத்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (46) என்பவர் சென்றார். 

அப்போது 2 சிறுமிகள் நோட்டில் ஆசிரியரிடம் கையெழுத்து வாங்குவதற்காக சென்றபோது தனது அருகில் இருவரையும் வர சொல்லி, தன் கையில் வைத்திருந்த பேனாவை வேண்டுமென்றே கீழே போட்டு சிறுமி ஒருவரை குனிந்து எடுக்க சொல்லி பாலியல் நோக்கத்தோடு பாலசுப்பிரமணியம் பார்த்தார். மேலும் சிறுமிகள் இருவரையும் வகுப்பறையில் வைத்து கதவை சாத்தியதால் அதிர்ச்சி அடைந்த சிறுமிகள் சத்தம்போட்டனர்.

இதனால் கதவை திறந்துவிட்டதுடன், அந்த வழியாக சென்ற சிறுவனை அழைத்து, சிறுமிகள் இருவரையும் காட்டி பாலியல் நோக்கத்தோடு பேசி மனஉளைச்சலை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் இதுகுறித்து தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் பாபநாசம் போலீஸ் நிலையத்தில் இதுகுறித்து புகார் செய்தார்.

இந்த புகாரின் பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் பகவதி சரணம் போக்சோ வழக்கில் பாலசுப்பிரமணியத்தை கைது செய்து தஞ்சை போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினார். இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு பாலசுப்பிரமணியம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி தமிழரசி விசாரணை செய்து பாலசுப்பிரமணியத்திற்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் சசிரேகா ஆஜராகி வாதாடினார். இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்த அரசு வக்கீல் மற்றும் தற்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா, கோர்ட் ஏட்டு இளையராணி ஆகியோரை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் பாராட்டினார்

வாலிபர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

தஞ்சை வடக்குவாசல் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ஜெயபால்(வயது36). இவர் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5-ந் தேதி காவேரி சிறப்பு அங்காடி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது தஞ்சை சீனிவாசபுரத்தை சேர்ந்த தொழிலாளியான முனியாண்டி(42) என்பவர் குடிபோதையில் வந்தார். பின்னர் இவர் ஜெயபாலிடம் பணம் கடனாக கேட்டார். ஆனால் அதற்கு பணம் கொடுக்க ஜெயபால் மறுத்துவிட்டார்.

இதனால் இருவருக்கும் மத்தியில் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முனியாண்டி சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தான் கையில் வைத்து இருந்த பீர்பாட்டிலால் ஜெயபாலின் தலையில் பலமாக தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஜெயபாலை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது தொடர்பாக ஜெயபால் மகள் முனிஸ்வரி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். இதற்கிடையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த ஜெயபால் 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ந் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் போலீசார் கொலை வழக்காக மாற்றம் செய்து முனியாண்டியை கைது செய்தனர். பின்னர் அவரை தஞ்சை முதலாவது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் விசாரணை முடிக்கப்பட்டு 2019-ம் ஆண்டு மே மாதம் 6-ந் தேதி கோர்ட்டில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை நீதிபதி குமரேசன் விசாரணை செய்து முனியாண்டிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதத்தொகையும், அபராதம் கட்ட தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் திறம்பட பணிபுரிந்த டிஎஸ்பி சோமசுந்தரம், கோர்ட் போலீஸ் ஏட்டு செந்தில்குமார் ஆகியோரை மாவட்ட எஸ்.பி., ராஜாராம் பாராட்டினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

திருப்பழனம் கோயில் சிலைகள்: வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐம்பொன் சிலைகளை மீட்க முன்னாள் காவல் துறை தலைவர் வலியுறுத்தல்
திருப்பழனம் கோயில் சிலைகள்: வெளிநாடுகளில் சிக்கியுள்ள ஐம்பொன் சிலைகளை மீட்க முன்னாள் காவல் துறை தலைவர் வலியுறுத்தல்
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
திருவையாறு அருகே மக்கள் அதிர்ச்சி: ஜெனரேட்டர் இன்ஜினில் தலைமுடி சிக்கி மாணவி பலி
தஞ்சாவூர் அருகே பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால அருளிக்கம் திருப்பயணம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
தஞ்சாவூர் அருகே பூண்டிமாதா பேராலயத்தில் தவக்கால அருளிக்கம் திருப்பயணம்: நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
நாச்சியார்கோவில் கல் கருட சேவை: மர்மம் நிறைந்த 4 டன் கருடன்... அதிகரிக்கும் எடை, ஆச்சரியத்தில் பக்தர்கள்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | Monday

ABP Premium

வீடியோ

Anna University Issue | ’’நள்ளிரவில் ஆபாச SMS’’பேராசிரியரின் லீலைகள்அண்ணா பல்கலை. மாணவி பகீர்!
PTR Palanivel Thiagarajan | புதிய நீதிக்கட்சிக்கு மதுரை மத்திய தொகுதி ஒதுக்கிய ADMK? PTR-க்கு யார் போட்டி?
Mayor Priya election | மேயர் பிரியாவுக்கு சீட்? திருவிக நகரில் போட்டியா! திமுக தலைமை MASTERPLAN
Gold Price Drop|பவுனுக்கு ரூ. 25,000 சரிவு! தங்கம் வாங்க இது சரியான நேரமா? நிபுணர்கள் சொல்வது என்ன?
Donald Trump Warns Iran | ’’2 நாள் தான் TIME அடிச்சு நொறுக்கிடுவேன்’’ஈரானுக்கு டிரம்ப் மிரட்டல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? கைமாறும் தி.நகர்?
TN Election 2026: சென்னையின் 16 தொகுதிகள் - திமுக Vs அதிமுக களமிறக்கிய வேட்பாளர்கள் யார்? கைமாறும் தி.நகர்?
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
IPL 2026 RCB vs SRH: வெற்றியுடன் தொடங்கிய RCB! கோலி, படிக்கல், ரஜத் ஃபயர் பேட்டிங்!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
MDMK Candidate: மதிமுக-வின் வேட்பாளர்கள் யார்? யார்? பட்டியலை வெளியிட்டார் வைகோ!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMK Candidate List: போஸ் வெங்கட் முதல் ராஜீவ் காந்தி வரை... திமுக வேட்பாளர் பட்டியலில் மிஸ்ஸான முக்கிய பெயர்கள்!
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
DMDK Candidate List: தேமுதிக வேட்பாளர்கள் பட்டியல் ரிலீஸ்! பிரேமலதா, விஜயபிரபாகர் எங்கு போட்டி?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
RCB vs SRH: டாஸ் வென்ற ஆர்சிபி... பேட்டிங் செய்யும் காவ்யா பாய்ஸ்.. முதல் போட்டியில் 300 வருமா?
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Kasi Profile: எடப்பாடி பழனிசாமியை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளர்: யார் இந்த காசி? ஆச்சர்யப் பின்னணி!
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
Panguni Uthiram: பங்குனி உத்திரம்! வழிபட வேண்டிய நேரம் எது? எப்படி வழிபட வேண்டும்?
Embed widget