மேலும் அறிய

தஞ்சை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் - எச்சரித்த கோட்டாட்சியர்

''பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது''

தஞ்சாவூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர் நாள் கூட்டம் நடைபெற்றது. கோட்டாட்சியர் மு. ரஞ்சித் தலைமையிலும், துணை ஆட்சியர் (பயிற்சி) ஜஸ்வந்த்  கண்ணன் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயி தோழகிரிப்பட்டி பி. கோவிந்தராஜ் பேசுகையில், குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலையிலுள்ள மின்மாற்றி பழுதாகிவிட்டது. இதைச் சீரமைக்க இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததால், கரும்பு அரைவைப் பணி தொடங்குவது தாமதமாகும் சூழ்நிலை உள்ளது. இதை உடனடியாகச் சீரமைக்க நடவடிக்கை வேண்டும் என்றார்.

விவசாயி ராயமுண்டான்பட்டி என்.வி. கண்ணன் பேசுகையில், மழையால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து அரசு முறையாகக் கணக்கெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30,000 நிவாரணம் அறிவிக்க வேண்டும். கடந்த ஆண்டு காப்பீடுக்கான இழப்பீட்டுத் தொகை இன்னும் நிறைய பேருக்குக் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாயி அம்மையகரம் ஏ.கே.ஆர். ரவிச்சந்தர் பேசுகையில், அம்மையகரம் கிராமத்தில் நடவு செய்து சில நாள்களே ஆன நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. ஒவ்வொருவரும் ஏக்கருக்கு 12,000 முதல் 14,000 வரை செலவு செய்துள்ளோம். எனவே, ஏக்கருக்கு ரூ. 10,000 நிவாரணம் வழங்க வேண்டும். நீரில் மூழ்கிய பயிர்களைக் காப்பாற்ற தெளிக்க வேண்டிய ஜிங் சல்பேட் எங்குமே கிடைக்கவில்லை. இதை விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தஞ்சை: விவசாயிகள் குறைதீர் கூட்டத்திற்கு வராத அதிகாரிகள் - எச்சரித்த கோட்டாட்சியர்

விவசாயி திருவோணம் வி.கே. சின்னதுரை பேசுகையில், திருவோணம் பகுதியில் கார்த்திகை பட்டத்தில் நிலக்கடலை பயிரிடுவது வழக்கம். ஆனால், விதை கிடைக்கவில்லை. கடந்த ஆண்டுகளில் கார்த்திகை பட்டத்துக்கு மார்கழியில்தான் விதை வழங்கப்பட்டது. அதனால், எந்தப் பயனும் இல்லை. எனவே, உடனடியாக விதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். யூரியா தட்டுப்பாடு அதிகமாக இருக்கிறது. எனவே, யூரியா, ஜிங் சல்பேட், டிஏபி உரங்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் சின்னதுரை. முன்னதாக, 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக பிரதமர் அறிவித்ததையொட்டி, விவசாயிகள் இனிப்புகள் வழங்கினர். மேலும், ஆம்பலாப்பட்டு அ. தங்கவேல் கூறியதன் அடிப்படையில், இப்போராட்டத்தில் பங்கேற்று உயிர் தியாகம் செய்த 600 க்கும் அதிகமான விவசாயிகளுக்கு ஒரு நிமிடம் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, கோட்டாட்சியர் ரஞ்சித் பேசுகையில், இக்கூட்டத்தில் விவசாயிகள் முன் வைத்த கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க வேண்டிய பல்வேறு துறைகளின் உயர் அலுவலர்கள் கலந்து கொள்ளவில்லை. சில துறைகளில் உயர் அலுவலர்கள் பங்கேற்காமல் இளநிலை அலுவலர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதனால், விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த முறை அனைத்து துறைகளிலும் உயர் அலுவலர்கள் கண்டிப்பாகப் பங்கேற்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆட்சியரிடம் புகார் செய்யப்படும் என எச்சரிக்கை செய்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Sengottaiyan : ’த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி பற்றி செங்கோட்டையனிடம் பேசினேனா?’ திருநாவுக்கரசர் Exclusive..!
Parliament Winter Session : ’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
’அவையை நடத்தப்போகும் சிபி ராதாகிருஷ்ணன்’ தமிழ்நாட்டிற்காக சீறும் திமுக எம்.பிக்கள்..!
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
மழை மேகங்களை உருவாக்கிய டிட்வா.. சென்னையில் வெளுத்து வாங்கும் மழை- டெல்டா வெதர்மேன் அலர்ட்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Parliament Winter Session: நாடாளுமன்ற கூட்டத்தொடர் - உயர்கல்வி ஆணையம், மத்திய அரசின் 14 புதிய மசோதாக்கள்
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Whats app , Telegram பயனர்களுக்கு அதிர்ச்சி !! மத்திய அரசின் புதிய கட்டுப்பாடு !!
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை,  மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: சென்னையில் தொடரும் மழை, மோடி அட்வைஸ், கோலி சாதனை - 11 மணி வரை இன்று
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget