மேலும் அறிய

Ration Shops : 6503 ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை அளிக்கப்படுகிறதா? எப்போது?

கடந்த ஆண்டு 14.50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ 10, 292 கோடி கூட்டுறவு கடன் வழங்கி சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது இதுவரை ரூ 6372 கோடி பயிர் கடன் 8 லட்சத்து 48 ஆயிரத்து 76 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

6503 ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை ஜனவரி முதல் வாரத்தில் வழங்கப்படும். தமிழக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பேட்டி. 

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கங்களின் 15-வது  மாநில பேரவை திருவாரூரில் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பேரவையில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அகவிலைப்படி உயர்வு செய்திடல் வேண்டும் என்பன உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பேரவை கூட்டத்துக்கு பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “கடந்த ஆண்டு சுமார் 14.50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ 10, 292 கோடி கூட்டுறவு கடன் வழங்கி சாதனை நிகழ்த்தப்பட்டது. தற்போது இதுவரை ரூ 6372 கோடி பயிர் கடன் 8 லட்சத்து 48 ஆயிரத்து 76 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுதவிர  விவசாயிகள் மாற்றுத் தொழிலை மேற்கொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் விவசாயம் சார்ந்த தொழிலான கால்நடை வளர்ப்புக்கு வட்டி இல்லா கடனாக ஒரு லட்சத்து 69 ஆயிரத்து 52 விவசாயிகளுக்கு ரூ 770.86 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர கோழி வளர்ப்பு மீன் வளர்ப்புக்கும் கடன் வழங்கப்படுகிறது.


Ration Shops : 6503 ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை அளிக்கப்படுகிறதா? எப்போது?

அதேபோன்று கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் கணவனை இழந்த பெண்களுக்கு 5 சதவீத குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. இந்தியாவிலேயே அதிக அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் பணியை கூட்டுறவுத்துறை கடந்த நான்காண்டுகளாக செய்து வருகிறது என்றார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த பதிவாளர், “தமிழகம் முழுவதும் மொத்தம் உள்ள 35 ஆயிரம் ரேஷன் கடைகளில், 33,400 ரேஷன் கடைகள் கூட்டுறவுத் துறை மூலம் இயங்குகின்றன இவற்றில் 23 ஆயிரம் பேர் பணியாற்றுகிறார்கள் தற்போது விற்பனையாளர் மற்றும் உதவியாளர் காலி பணியிடங்கள் 6503 உள்ளன. இதற்கான தேர்வுக்கு இரண்டரை லட்சம் விண்ணப்பங்கள் வரப்பட்டுள்ளது.

ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு நடைபெறுவதால் நியாயமான முறையில் பணி நியமனம் நடைபெறும். வரும் நவம்பர் 14ம் தேதி வரை மேற்கண்ட காலி பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம். டிசம்பர் 15ஆம் தேதி முதல் 31ம் தேதி வரை தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஜனவரி முதல் வாரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பணி ஆணை வழங்கப்படும்” என்றார்.


Ration Shops : 6503 ரேஷன் கடை காலி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணை அளிக்கப்படுகிறதா? எப்போது?

மேலும், அமுதம் அங்காடிகளில் பணியாற்றுபவர்களுக்கு இணையாக ஊதியம் வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருவது தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த கூட்டுறவுத்துறை பதிவாளர், ”அமுதம் அங்காடி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் டிகிரி முடித்தவர்கள். கூட்டுறவு துறையில் 12 ம் வகுப்பு உள்ளிட்ட பள்ளி வகுப்பு முடித்தவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள். எனவே அமுதம் அங்காடி ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குவது இயலாது. இது ஊழியர்களுக்கும் புரியும்” என்றார்.

தலைப்பு செய்திகள்

பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
பேராவூரணியில் போலீசார்  அதிரடி: விதிமீறல் வாகனங்களுக்கு அபராதம் 
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
Thanjavur District power cut 7.7.26: சார்ஜர் தேடுறவங்க இப்பவே தேடுங்க, தண்ணீர் டேங்கையும் நிரப்பிடுங்க: மிக்ஸி, டிவி நாளை ஒரு நாள் 'ஹாலிடே மோடு'!
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்த தீ! நரகமாக மாறிய குடியிருப்பு பகுதிகள்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்
கும்பகோணத்தில் 44 பேருக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் வழங்கல்: அமைச்சர் வினோத்ரவி பெருமிதம்

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Teacher Eligibility Test : டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
டஃப் ஆக இருந்த ஆசிரியர் தகுதி தேர்வு.! கூடுதல் மதிப்பெண் வழங்கப்படுமா.? TRB முக்கிய அறிவிப்பு
EPS ADMK : ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
ஆடு திருடி சிறை சென்றவர்களையும் அரசு வழக்கறிஞர்களாக்கிய தவெக அரசு.! வெளுத்து வாங்கும் இபிஎஸ்
Online Property Registration : பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
பத்திர பதிவிற்கு நேரில் வர தேவையில்லை.! வீட்டில் இருந்து பதிவு செய்யலாம்- புதிய வழிமுறை இதோ..
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
TNPSC Notification: வாவ்… ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு; 839 காலி இடங்கள்- டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
பூட்டிய காருக்குள் மரணம்: ஏசி போட்டாலும் ஆபத்து- மருத்துவர் சொன்ன ஷாக் உண்மைகள்!
TASMAC SALARY HIKE : டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குஷி.! அதிரடியாக உயர்ந்த சம்பளம்.! இத்தனை சதவிகிதமா.? அசத்திய சிஎம் விஜய்
Holiday Special Bus : 2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
2 நாள் விடுமுறை... டூர் செல்ல திட்டமா.? காத்திருந்த மக்களுக்கு குட் நியூஸ் சென்ன போக்குவரத்து கழகம்
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Minister Keerthana: அமைச்சர் கீர்த்தனா அரசுப்பள்ளி மாணவியே அல்ல; வீடியோ எடுத்தது யார்- வெளியான உண்மை!
Embed widget