![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மயிலாடுதுறைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை - பாதுகாப்பு பணியில் 600 காவலர்கள்
மயிலாடுதுறையில் இன்று தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழா நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்புக்காக 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
![மயிலாடுதுறைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை - பாதுகாப்பு பணியில் 600 காவலர்கள் Tamil Nadu Chief Minister MkStalin visit to Mayiladuthurai the police are concentrated TNN மயிலாடுதுறைக்கு முதல்வர் ஸ்டாலின் வருகை - பாதுகாப்பு பணியில் 600 காவலர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/50550ef935666b256f7f0f172dfeefdc1692862202262733_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறையில் இன்று தருமபுர ஆதீன கலைக்கல்லூரி பவளவிழா நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்க உள்ள நிலையில் பாதுகாப்புக்காக 600க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் சைவத்தையும் தமிழையும் பரப்பும் தொன்மை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் அமைந்துள்ளது. இவ்வாதீனத்தால் 1946 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட கலைக்கல்லூரி தருமபுரம் ஆதீனத்திற்கு எதிரே செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரி தமிழ் கல்லூரியாக தொடங்கப்பட்டு 1988 -ஆம் ஆண்டு கலைக்கல்லூரியாக வளர்ச்சி பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது கல்லூரியின் 75-ம் ஆண்டு பவள விழா ஆண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது.
பவளவிழாவை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 3000 பேர் அமரும் வகையில் 80 அடி அகலமும் 220 அடி நீளமும் கொண்ட பிரமாண்ட கலையரங்கம் கட்டப்பட்டு 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 12 அடி நீளம் கொண்ட 5 ராட்சச மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த கலையரங்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 6 மணியளவில் நேரில் திறந்து வைக்க உள்ளார். மேலும், தருமையாதீன தொலைக்காட்சி, வானொளி பதிவகத்தை திறந்து வைத்தும் பவளவிழா மலர் மற்றும் திருக்குறள் ஆதீன உரை விளக்க நூல்களை வெளியிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்ற உள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளதால் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதல்வர் வருகையை முன்னிட்டு மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் 6 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 9 காவல் துணை கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் ஆய்வாளர்கள் உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)