மேலும் அறிய

அரசு கொள்முதல் செய்தவதால் கரும்பின் விலை கிடுகிடு உயர்வு - 10 கரும்புகள் 300 ரூபாய்க்கு விற்பனை

’’கரும்பை விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரிடையாக கொள் முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் கொள் முதல் செய்வதால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு’’

தமிழகத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில், போலியான நகைகள் உள்ள நிலையில், இதே போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களிலும் போலியான, தரமற்ற உணவு பொருட்களை வைத்து கொடுக்கவும் வாய்ப்புள்ளது தைப்பொங்கல்  விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு வீடுகளில் வர்ணம் அடித்து, மண் அடுப்பு கட்டி, புத்தரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பின்னர் குடும்பத்துடன் கரும்புகளை சாப்பிடுவார்கள். சிறப்பு  பெற்ற பொங்கல் விழாவிற்கு பிரதானமான கரும்பு கும்பகோணத்தை அடுத்த அணக்கரை, கடிச்சம்பாடி, நீரத்தநல்லுார், சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம், திருவையாறு உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது விழா காலம் தொடங்கவுள்ள நிலையில் கரும்புகளை வெட்டி,  விற்பனை செய்வதற்காக திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சை பகுதியில் குவித்து வைத்துள்ளனர். பொங்கல்  விழாவிற்காக கடந்த ஏப்ரல் மாதம் விதைத்து, பின் 8 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்து,  சுத்தம் செய்து விற்பனைக்காக கொண்டு வந்து வைத்துள்ளனர். கடந்தாண்டுகளில் 10 எண்ணிக்கையை  கொண்ட கரும்பு கட்டின் விலை ரூ. 150 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 10 எண்ணிக்கையை  கொண்ட கரும்பு கட்டின் விலை ரூ.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


அரசு கொள்முதல் செய்தவதால் கரும்பின் விலை கிடுகிடு உயர்வு - 10 கரும்புகள் 300 ரூபாய்க்கு விற்பனை

இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் தொகுப்பு பொது மக்கள் வழங்கும் போது, கரும்பு வழங்கிறார்கள். அதனால் இப்போதைய கரும்பு சாகுபடி செய்துள்ள பகுதியில் அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் மூலம் விலை பேசி வருகின்றார்கள். இதனால் கடந்தாண்டுகளை விட இந்தாண்டு கரும்பு கட்டின் விலை கிடு கிடு என உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு பேசி. கூடுதலாக விலை நிர்ணயம் செய்வதால், அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு கரும்பு கட்டுக்களை, விவசாயிகளிடம் லாபம் தரும் வகையில் விலையை நிர்ணயித்து, அதனை வாங்கி பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள்  கூறுகையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து பொது மக்கள் விரும்பி கரும்பு சாப்பிடுவார்கள். தமிழக அரசு  சுமார் ஓன்றே கால் கோடி மக்களுக்கு இலவசமாக  கரும்பு  துண்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர். பொங்கல் கரும்பை விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரிடையாக கொள் முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் கொள் முதல் செய்வதால், அதிக விலைக்கு வாங்க நிலை ஏற்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது பொங்கல் விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கரும்புகளை, இடைத்தரகர்களிடம் மூலம் பேசி விலை நிர்ணயித்துள்ளனர். இதனால் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக்கு கரும்புகளை வாங்கும் போது, 10 எண்ணிக்கையிலான கரும்பு கட்டின் விலை ரூ. 300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால், வரும் பொங்கல் தினத்தன்று கட்டின் விலை ரூ. 500 க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படும். மேலும், தரமில்லாத கரும்புகளை தமிழக அரசு வாங்குவதால், கரும்பை எந்த மக்களும் விரும்பி வாங்குவதில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் கடமைக்காக பொங்கல் கரும்புகளை  தந்து விட்டு சென்று விடுவார்கள்.   இது வரைக்கும் கரும்பு வாங்குவது குறித்தும்  கொள் முதல் செய்வதும் குறித்தும் கணக்குகள் காட்டுகிறார்களா என தெரிய வில்லை.


அரசு கொள்முதல் செய்தவதால் கரும்பின் விலை கிடுகிடு உயர்வு - 10 கரும்புகள் 300 ரூபாய்க்கு விற்பனை

வெல்லத்தை, வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்களிடமிருந்து நேரிடையாக வாங்க வேண்டும், ஆனால் கமிஷனுக்காக ஜீனியை வழங்குகிறார்கள். தமிழகத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில், போலியான நகைகள் உள்ள நிலையில், இதே போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களிலும் போலியான, தரமற்ற உணவு பொருட்களை வைத்து கொடுக்கவும் வாய்ப்புள்ளது. இதில், பல கோடி ரூபாய் வரை, அமைச்சர்கள், தலைமை செயலாளர் முல் தரை மட்டம் அலுவலர்கள் வரை கமிஷன் செல்லுவது, கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்ததை, இந்தாண்டு நடைபெறாமல் இருக்க முதல்வர் கவனத்தில் எடுத்து, அரசுக்கு நஷ்டம் ஏற்படாமலிருக்க நடவடிக்கை வேண்டும்  என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
ABP Premium

வீடியோ

Congress VS DMK | பங்கு கேட்ட மாணிக்கம் தாகூர்
Minister Moorthy Issue | அமைச்சர் மூர்த்தியைசுத்துப்போட்ட மக்கள்!மதுரையில் பரபரப்பு
DMK MLA Lakshmanan Kabbadi | ’’கபடி..கபடி..’’ கில்லி விஜய் ஆக மாறிய MLA.. வியந்து பார்த்த திமுகவினர்
Pongal Gift 2026 | பொங்கல் பரிசு ரூ.3000 !முதல்வர் அதிரடி அறிவிப்பு யாருக்கெல்லாம் கிடைக்கும்?
MP Jothimani angry | ”காங்கிரஸ் அழிஞ்சுட்டு இருக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi Karunanidhi : ’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
’சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கனிமொழி?’ இறுதி பட்டியலில் 3 தொகுதிகள்..!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
UKS: எம்கேஎஸ் கொண்டுவரும் யுகேஎஸ்; தமிழக அமைச்சரவை முக்கிய முடிவு- உங்கள் கனவுகளை நனவாக்க புதிய திட்டம்!
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather: 5 மாவட்டங்களில் மிக கனமழை எச்சரிக்கை.. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
Christmas New Year Bumper Lottery: அம்மாடியோவ்..ரூ.93 கோடிக்கு கேரளா புத்தாண்டு பம்பர் லாட்டரி..முதல் பரிசே 20 கோடி- முழு பரிசு விவரம் இதோ!
iPhone 16 Discount: ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
ஐபோன் 16 பிரியர்களே முந்துங்க.! சலுகைகள் மூலமா ரூ.55,000-க்கு கிடைக்குது; வாங்குவது எப்படி.?
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
எங்க தயவுல தானே ஜெயிச்சீங்க.. தனியா போட்டி போட்டு பலத்த காட்டுங்க தலைவா.? மாணிக்கம் தாகூரை சீண்டும் திமுகவினர்
Most Cheapest Cars India: சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
சராசரி மக்கள் வாங்குவதற்கு மலிவான கார் எது.? குறைந்த விலையில் கிடைக்கும் டாப் 5 கார்கள் லிஸ்ட்
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
அமித்ஷா போட்ட ஸ்கெட்ச்.! திமுக அமைச்சர்களை தூக்க லிஸ்ட் போட்ட எடப்பாடி- நடப்பது என்ன.?
Embed widget