மேலும் அறிய

அரசு கொள்முதல் செய்தவதால் கரும்பின் விலை கிடுகிடு உயர்வு - 10 கரும்புகள் 300 ரூபாய்க்கு விற்பனை

’’கரும்பை விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரிடையாக கொள் முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் கொள் முதல் செய்வதால் அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்பு’’

தமிழகத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில், போலியான நகைகள் உள்ள நிலையில், இதே போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களிலும் போலியான, தரமற்ற உணவு பொருட்களை வைத்து கொடுக்கவும் வாய்ப்புள்ளது தைப்பொங்கல்  விழா வரும் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதனை முன்னிட்டு வீடுகளில் வர்ணம் அடித்து, மண் அடுப்பு கட்டி, புத்தரிசியில் பொங்கல் வைத்து கொண்டாடுவார்கள். பின்னர் குடும்பத்துடன் கரும்புகளை சாப்பிடுவார்கள். சிறப்பு  பெற்ற பொங்கல் விழாவிற்கு பிரதானமான கரும்பு கும்பகோணத்தை அடுத்த அணக்கரை, கடிச்சம்பாடி, நீரத்தநல்லுார், சுவாமிமலை, உமையாள்புரம், கபிஸ்தலம், திருவையாறு உள்ளிட்ட சுற்றுப்பகுதியில் சாகுபடி செய்துள்ளனர்.

தற்போது விழா காலம் தொடங்கவுள்ள நிலையில் கரும்புகளை வெட்டி,  விற்பனை செய்வதற்காக திருக்காட்டுப்பள்ளியிலிருந்து தஞ்சை பகுதியில் குவித்து வைத்துள்ளனர். பொங்கல்  விழாவிற்காக கடந்த ஏப்ரல் மாதம் விதைத்து, பின் 8 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்து,  சுத்தம் செய்து விற்பனைக்காக கொண்டு வந்து வைத்துள்ளனர். கடந்தாண்டுகளில் 10 எண்ணிக்கையை  கொண்ட கரும்பு கட்டின் விலை ரூ. 150 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது 10 எண்ணிக்கையை  கொண்ட கரும்பு கட்டின் விலை ரூ.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.


அரசு கொள்முதல் செய்தவதால் கரும்பின் விலை கிடுகிடு உயர்வு - 10 கரும்புகள் 300 ரூபாய்க்கு விற்பனை

இந்நிலையில், தமிழக அரசு பொங்கல் தொகுப்பு பொது மக்கள் வழங்கும் போது, கரும்பு வழங்கிறார்கள். அதனால் இப்போதைய கரும்பு சாகுபடி செய்துள்ள பகுதியில் அரசு அதிகாரிகள், இடைத்தரகர்கள் மூலம் விலை பேசி வருகின்றார்கள். இதனால் கடந்தாண்டுகளை விட இந்தாண்டு கரும்பு கட்டின் விலை கிடு கிடு என உயரும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அதிகாரிகள் கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளிடம், குறைந்த விலைக்கு பேசி. கூடுதலாக விலை நிர்ணயம் செய்வதால், அரசுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு கரும்பு கட்டுக்களை, விவசாயிகளிடம் லாபம் தரும் வகையில் விலையை நிர்ணயித்து, அதனை வாங்கி பொது மக்களுக்கு வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது குறித்து விவசாயிகள்  கூறுகையில், பொங்கல் விழாவை முன்னிட்டு அனைத்து பொது மக்கள் விரும்பி கரும்பு சாப்பிடுவார்கள். தமிழக அரசு  சுமார் ஓன்றே கால் கோடி மக்களுக்கு இலவசமாக  கரும்பு  துண்டுகளை வழங்குவதாக அறிவித்துள்ளனர். பொங்கல் கரும்பை விவசாயிகளிடம் அதிகாரிகள் நேரிடையாக கொள் முதல் செய்யாமல், இடைத்தரகர்கள் மூலம் கொள் முதல் செய்வதால், அதிக விலைக்கு வாங்க நிலை ஏற்படுகிறது. இதனால் தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது.

தற்போது பொங்கல் விழாவிற்கு இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்துள்ள கரும்புகளை, இடைத்தரகர்களிடம் மூலம் பேசி விலை நிர்ணயித்துள்ளனர். இதனால் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக்கு கரும்புகளை வாங்கும் போது, 10 எண்ணிக்கையிலான கரும்பு கட்டின் விலை ரூ. 300 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே நிலை நீடித்தால், வரும் பொங்கல் தினத்தன்று கட்டின் விலை ரூ. 500 க்கு விற்பனை செய்யும் நிலை ஏற்படும். மேலும், தரமில்லாத கரும்புகளை தமிழக அரசு வாங்குவதால், கரும்பை எந்த மக்களும் விரும்பி வாங்குவதில்லை. அமைச்சர்கள், அதிகாரிகள் கடமைக்காக பொங்கல் கரும்புகளை  தந்து விட்டு சென்று விடுவார்கள்.   இது வரைக்கும் கரும்பு வாங்குவது குறித்தும்  கொள் முதல் செய்வதும் குறித்தும் கணக்குகள் காட்டுகிறார்களா என தெரிய வில்லை.


அரசு கொள்முதல் செய்தவதால் கரும்பின் விலை கிடுகிடு உயர்வு - 10 கரும்புகள் 300 ரூபாய்க்கு விற்பனை

வெல்லத்தை, வெல்லம் தயாரிக்கும் தொழிலாளர்களிடமிருந்து நேரிடையாக வாங்க வேண்டும், ஆனால் கமிஷனுக்காக ஜீனியை வழங்குகிறார்கள். தமிழகத்திலுள்ள பெரும்பாலான கூட்டுறவு வங்கிகளில், போலியான நகைகள் உள்ள நிலையில், இதே போல் பொங்கல் சிறப்பு தொகுப்பு பொருட்களிலும் போலியான, தரமற்ற உணவு பொருட்களை வைத்து கொடுக்கவும் வாய்ப்புள்ளது. இதில், பல கோடி ரூபாய் வரை, அமைச்சர்கள், தலைமை செயலாளர் முல் தரை மட்டம் அலுவலர்கள் வரை கமிஷன் செல்லுவது, கடந்த 10 ஆண்டுகளாக இருந்து வந்ததை, இந்தாண்டு நடைபெறாமல் இருக்க முதல்வர் கவனத்தில் எடுத்து, அரசுக்கு நஷ்டம் ஏற்படாமலிருக்க நடவடிக்கை வேண்டும்  என்றார்.

தலைப்பு செய்திகள்

பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
பாசன வாய்க்கால் பால இரும்பு பாதுகாப்பு தடுப்பு சேதம்... பொதுமக்கள் அச்சம்
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
புதிய உறுப்பினர் சேர்க்கை சிறப்பு முகாம்... எதற்காக தெரியுங்களா?
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget