மேலும் அறிய

கையை சாயத்தில் நனைத்து மூவர்ண தேசிய கொடியை ஓவியம் வரைந்து மாணவர் சாதனை!

மயிலாடுதுறையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர் 600 சதுரஅடி அளவில் தன் கைப்பதிபால் மூவர்ண தேசிய கொடியை ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.  

நாடு முழுவதும் 75ஆவது சுதந்திர தின விழா நாளை வெகு விமரிசையாக கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் மறையூரில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும்  5ஆம் வகுப்பு பயிலும் மாணவர் ஹர்ஷித், 75 வது சுதந்திர தினத்தில் சாதனை படைக்க வேண்டுமென்ற நோக்கில் வெர்ட்ச்யூ புக் ஆப் வேல்டு ரேக்கார்டு அமைப்பினர் முன்னிலையில் 600 சதுர அடி பரப்பளவு உள்ள திரையில் இந்திய நாட்டின் தேசிய மூவர்ணக்கொடியை கைபதிப்பு ஓவியமாக வரைந்து சாதனை படைத்துள்ளார். 


கையை சாயத்தில் நனைத்து மூவர்ண தேசிய கொடியை ஓவியம் வரைந்து மாணவர் சாதனை!

அக்ரலிக் பெயிண்டால், 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில்  4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின்  மூலம் மூன்று வர்ணங்களில் தேசிய கொடியை வரைந்து சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்திய மாணவருக்கு வேல்டு ரேக்கார்டு அமைப்பின் இயக்குனர் சுரேஷ்குமார் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கி பாராட்டினர். பள்ளியில் சேர்ந்தபோது மாணவனின் பெற்றோர் மூவர்ணக்கொடியை நெற்றியில் திலகமிட்டுள்ளனர். சுதந்திர தினத்தை பற்றி தெரிந்து கொண்ட மாணவன் அன்று முதல் மூவர்ண தேசிய கொடியை தினந்தோறும் நெற்றியில் திலகமிட்டு வருவதாகவும், சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த சாதணை முயற்சியை மேற்கொண்டதாகவும் தனக்கு பாரதபிரதமர் ஆக வேண்டும் என்பதே என் லட்சியம் என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

சுதந்திரம் பெற்றவுடன், டெல்லி செங்கோட்டையில் பட்டொளி வீசி பறந்த முதல் தேசிய கொடி வேலுார் மாவட்டம், குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டது. இந்தியா சுதந்திர தினவிழா கொண்டாட்டங்களுக்கு, தேசிய கொடியை ஏற்ற அதிகளவிலான கொடடிகள் தேவைப்பட்டது. இதனால் பல்வேறு நிறுவனங்களில், தேசிய கொடி தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. வேலுார் மாவட்டம், குடியாத்தம் அடுத்த பிச்சனுாரை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர், இந்துஸ்தான் லுங்கி கம்பெனி நடத்தி வந்தார்.


கையை சாயத்தில் நனைத்து மூவர்ண தேசிய கொடியை ஓவியம் வரைந்து மாணவர் சாதனை!

அவரும், அவரது மனைவி முனிரத்தினம் அம்மாளும் இணைந்து, இரண்டு கோடி கொடியை கைத்தறியில் நெசவு செய்து டில்லிக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் தயாரித்து அனுப்பிய கொடிதான், சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் ஏற்ற அதிகாரிகளால் தேர்வு செய்யப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15 ம் தேதி சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையில் முதல் தேசிய கொடியாக அது ஏற்றப்பட்டது. கொடியை சிறப்பாக தயாரித்ததற்காக, அப்போதைய பிரதமர் நேரு பாராட்டி கடிதம் ஒன்றை அனுப்பினார். அக்கடிதத்தை, அவரது குடும்பத்தினர் இன்றளவும் பொக்கிஷம் போல பாதுகாத்து வருகின்றனர். இத்தகைய பெருமைமிக்க தேசிய பாட்டு வழக்கும் தேசிய கொடியின் மூலம் சாதனை படைக்க விரும்பும் இச்சிறுவன் இந்த ஓவிய சாதனையை வெகுவாக பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
ஊட்டச்சத்து நிறைந்த சிறு தானியங்களை பயிரிடுவோம்... பயனடைவோம்: விவசாயிகளுக்கு அழைப்பு
"விவசாயிகளை வஞ்சிக்கிறது அரசு" – தஞ்சாவூரில் சீறிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
மகாமக விழாவுக்காக தனி அலுவலர் நியமனம்... கும்பகோணத்தில் பணிகள் தீவிரம்: அமைச்சர் வினோத்ரவி தகவல்
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு
அட்டகாச ஆஃபரு... ஒரு ரூபாய்க்கு சிம்மு! அதிரடிக்குது பிஎஸ்என்எல்லு சுதந்திர தின ஆஃபர்... ஒரு மாத ரீசார்ஜ் உடன் புதிய சலுகைகள் அறிவிப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget