மேலும் அறிய

ஒரத்தநாடு அருகே அய்யனார் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை சிலைகள் பிரதிஷ்டை

’’200 ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள சுற்றுப்பகுதிகளில் உடல் உபாதைகளால் பலர் இறந்ததால் ஊர்பெரியவர்கள் புதுாரில் அய்யனாரை வைத்து வழிபாடு செய்தனர்’’

ஒரத்தநாடு அருகே புதூர் கிராமத்தில், யானை மேல் அழகர் அய்யனார் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை கற்சிலைகள் நேற்று பிரதிஷ்டை செய்யப்பட்டது.  இதில் பக்தர்கள் கலந்துக்கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர்  மாவட்டம் ஒரத்தநாடு புதூர் கிராமத்தில், யானைமேல் அழகர் அய்யனார் கோயில் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டு பழமையான இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் பல ஆண்டுகளுக்கு முன்பு அங்குள்ள சுற்றுப்பகுதிகளில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட்டு, ஏராளமானோர் இறந்தும், அவதிக்குள்ளானார்கள். இதனையடுத்து அப்போதுள்ள ஊர்பெரியவர்கள், புதுாரில் அய்யனாரை வைத்து வழிபாடு செய்தனர். அதன் பிறகு உடல்உபாதையின் தாக்கம் குறைந்தது. அய்யனாரை வழிபட்டதால், தான் குணமானது என்ற நம்பிக்கையில், அந்த அய்யனாருக்கு பெருமை சேர்க்க வேண்டும், கௌரவப்படுத்தும் வேண்டும் என்ற எண்ணத்தில், யானை மேல் வைத்து அய்யனாரை ஊர் முழுவதும் ஊர்வலமாக அழைத்து வந்தனர். பின்னர் அந்த அய்யனாருக்கு யானை மேல் அய்யனார் என்ற பெயர் பெற்றது.


ஒரத்தநாடு அருகே அய்யனார் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை சிலைகள் பிரதிஷ்டை

இக்கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்த நிலையில் இருந்ததால், கிராம மக்கள் சார்பில், கடந்த 2017 ஆம் ஆண்டு கும்பாபிஷேக திருப்பணிகளை துவக்கினர். இதில் 29 லட்சம் அறநிலையத்துறை சார்பிலும், மீதம் தொகை கிராம பொதுமக்கள் சார்பிலும் நிதிதிரட்டி சுமார் 3 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இக்கோயில்  முழுவதும் கருங்கற்களை கொண்டு திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 70 அடி நீளமும், 36 அடி அகலமும், 13 அடி உயரமும் கொண்ட மகா மண்டபத்தில், கலை நுட்பத்துடன் கூடிய 32 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் கடந்த ஆறு மாத காலமாக 27 லட்சம் மதிப்பீட்டில், கோயில் மகாமண்டப முகப்பில் இருபுறம் வைக்க, 50 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில், 23 டன் அளவுக்கு யானை சிலை, 11 அடி உயரத்திலும், 13 அடி நீளத்திலும் வடிவமைக்கப்பட்டது. அதே போல், 30 டன் எடை அளவு உள்ள ஒரே கல்லில்,  12 டன் அளவில் குதிரை  சிலையும், 11 அடி உயரமும், 13 அடி நீளத்திலும் வடிமைக்கப்பட்டது.


ஒரத்தநாடு அருகே அய்யனார் கோயிலில் 35 டன் எடையுள்ள யானை, குதிரை சிலைகள் பிரதிஷ்டை

மேலும், கோயில் சுற்றுச்சுவரில் பக்தர்களை வரவேற்கும் வகையில் 6.5 அடி உயரத்தில் இரண்டு விளக்குடன் கூடிய பாவை கற்சிலையும், இதே போல் நான்கு அடி உயரத்தில் யானை பாகன் சிலையும்  வடிவமைக்கப்பட்டது. இந்த  சிலைகளை, திருப்பூரில் இருந்து பெரிய லாரியில்  கடந்த மூன்று நாட்களுக்கு முன் புறப்பட்டு ஒரத்தநாட்டுக்கு  கொண்டு வரப்பட்டது. பின்னர்  மேள, தாளம் வானவேடிக்கையுடன், கடைவீதியில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தர்கள் பலரும் வழியில் சிலைகளுக்கு மலர் தூவி வரவேற்று வழிபட்டனர்.

தொடர்ந்து  காலை, கோயில் முகப்பில் அமைக்கப்பட்ட மேடையில், கிரேன் மூலம் இருச்சிலைகளும் பீடத்தில் பொறுத்தப்பட்டது. தொடர்ந்து இருச்சிலைகளுக்கும் பட்டு துணி அணிவித்து, மஞ்சள், குங்குமம் கொண்டு அபிஷேகம் நடத்தி தீபாரதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டனர். தொடர்ந்து சிலைகளை வடித்த சிற்பி மணி அவரது சகோதர்கள், புதுக்கோட்டை நமணசமுத்திரத்தைச் சேர்ந்த சிற்பி ஆ.முத்து  ஆகியோருக்கு கோயில் நிர்வாகம் சார்பில், பாராட்டி சிறப்பு செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
TVK Vijay: திமுக வழியில் நடிகர் விஜய்! நீட் விவகாரத்தில் கொந்தளித்த தளபதி!
Vijay Speech: ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
ஜாலியா படிங்க, ஸ்ட்ரெஸ் ஆகாதீங்க; கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்- விஜய் அட்வைஸ்!
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
’என்னை மன்னித்து விடுங்கள் ஒரு மாதத்தில் திருப்பி தந்துவிடுகிறேன்’ - திருடனின் உருக்கமான கடிதம்
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Group 1 Exam Hall Ticket: டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு; பெறுவது எப்படி?
Breaking News LIVE: பிரதமருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்
Breaking News LIVE: பிரதமருக்கு எதிராக மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம்
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
Gautam Gambhir: 1 ரன்னில் தோற்ற இந்தியா! இரவு முழுவதும் கதறி அழுத கவுதம் கம்பீர்!
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
TVK Vijay: நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Embed widget