மேலும் அறிய

பறிக்க முடியாத தர்பூசணிகள்: கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

கொரோனா ஊரடங்கு உத்தரவால் வியாபாரிகளின் கொள்முதல் செய்ய வராததால், தர்பூசணி பழங்கள் வயலில் அழுகி பாழாகி வருகிறது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த மங்கைமடம், திருவாலி, சூரக்காடு, உள்ளிட்ட கிராமங்களில் ஏராளமான ஏக்கர் நிலத்தில் தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த சாகுபடி செய்யப்பட்ட தர்பூசணி அறுவடை சமயமான இந்த வேளையில் கொரோனா ஊரடங்கால் தர்பூசணியை விற்பனை செய்ய முடியாமல் வயலிலேயே அழுகிக் கிடக்கின்றன. மேலும் மீதம் உள்ள பழங்களை கால்நடைகளை மேயவிட்டுள்ள விவசாயிகள், சாகுபடி செய்த முதலீட்டை கூட பெற முடியாமல்  வேதனை அடைந்துள்ளனர்.


பறிக்க முடியாத தர்பூசணிகள்: கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

கோடைக்கால பயிரான தர்பூசணி உடல் வெப்பத்தை தணிக்ககூடியது. மேலும் கோடையில் அனைவரும் விரும்பி உண்ணும் பழம் என்பதால் கோடைக்காலத்தில் இவை அதிகம் விற்பனை ஆகும். குறைந்த செலவில் அதிக லாபமும் தரக்கூடியது என்பதால், இதை மயிலாடுதுறை மாவட்டம் விவசாயிகள் பலர் தங்கள் நிலங்களில் பயிரிடுவர். இங்கு விளையக்கூடிய தர்பூசணி பழங்கள் சென்னை, திருச்சி, மதுரை,கோவை போன்ற வெளி மாவட்டங்களுக்கு அதிக அளிவில் அனுப்பி விற்பனை செய்யப்படுகிறது. பல்வேறு பகுதிகளிலும் இருந்து  வியாபாரிகள் வந்து பழங்களை மொத்தமாக வாங்கிச் செல்வார்கள். 


பறிக்க முடியாத தர்பூசணிகள்: கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

தர்பூசணி பழங்கள் ஒவ்வொன்றும் 3 கிலோ முதல் 10 கிலோ வரை எடை கொண்டதாகவும் ஒரு கிலோ தர்பூசணி 15 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை விலை போகும் என்றும் பழத்தின் எடைக்கேற்ற விலை நிர்ணயம் இருக்கும். இங்கு விளையும் தர்பூசணி பழங்கள் மிகுந்த இனிப்பு சுவை உடையதால், வெளியூர்களிலிருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்வார்கள். ஆனால் கோடை காலமான மார்ச்,ஏப்ரல்,மே, ஜுன் மாதங்களை நம்பி பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி, தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த 3 மாதங்களாக வெளியூர்களிலிருந்து வியாபாரிகள் வந்து கொள்முதல் செய்யாததால் பழங்கள் வயல் வெளியில் தேக்கம் அடைத்து அழுக தொடங்கி முழுவதும் அழுகி விணாகிக் கிடக்கின்றது.


பறிக்க முடியாத தர்பூசணிகள்: கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்


இதுகுறித்து  தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் கூறுகையில், தாங்கள் தர்பூசணி சாகுபடிதான் பிரதானமாக செய்து வருகிறோம். இந்த மூன்று மாதத்தில் வரக்கூடிய வருமானத்தை வைத்துக்கொண்டுதான் ஆண்டு முழுவதும் எங்கள் வாழ்வாதாரம் இருக்கும். இதேபோன்றுதான் கடந்த ஆண்டும் பயிரிட்ட தர்பூசணிகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவால் முழுவதும் அழுகி பாழானது.




பறிக்க முடியாத தர்பூசணிகள்: கால்நடைகளுக்கு உணவாகும் அவலம்

கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தை இந்த ஆண்டு ஈடு செய்து விடலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் வட்டிக்கு கடன் பெற்று தர்பூசணியை பயிர் செய்தோம். ஆனால், சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் தர்பூசணி பழங்களை வாங்க வியாபாரிகள் யாரும் வரவில்லை. இதனால் பழங்களை அறுவடை செய்ய முடியாமல் வயலிலேயே விட்டுவிட்டோம், வீணாக வயலில் அழுகிய தர்பூசணி பழங்களை தற்போது கால்நடைகளுக்காவது உணவாகட்டும் என ஆடு மாடுகளை வயலில் மேய விட்டு விட்டு எவ்வாறு வாழ்வது என வழி தெரியாமல் நிற்பதாக வேதனையுடன் கண்ணீர் மல்க கூறினார்.

தலைப்பு செய்திகள்

தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
தென் மாவட்ட ரயில்களில் பாதுகாப்பு குறைவு? அச்சத்துடன் பயணிப்பதாக குற்றச்சாட்டு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
ஜூலை 31-க்குள் பயிர் காப்பீடு செய்யுங்கள்.. விவசாயிகளுக்கு தஞ்சை கலெக்டர் அழைப்பு
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
குடிநீர் இணைப்பில் மோட்டார்... தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ரேவதியின் கடும் எச்சரிக்கை
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்
பலருக்கு மறுவாழ்வு அளித்த சுரேந்தரின் மனிதநேயம்: மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானம்

வீடியோ

Sonam Wangchuk : பணிந்த மத்திய அரசு! நேரில் வந்த நட்டா26 நாள் உண்ணாவிரதத்தை முடித்த சோனம் வாங்சுக்
CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
''இதான் ஆரம்பம்; இன்னும் 3 முக்கிய கோரிக்கை''- அமைச்சர் ராஜினாமாவை அடுத்து CJP முழக்கம்!
Dharmendra Pradhan Resign: மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா; மாணவர்களின் தொடர் போராட்டத்தையடுத்து முடிவு
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
TVK Budget: ஒவ்வொரு அமைச்சருடனும் 3 மணி நேர ஆலோசனை.. எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள விஜய் அரசின் முதல் பட்ஜெட்!
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: நாட்டின் அதிமுக்கிய தேர்வு முகமை; என்டிஏவில் வெறும் 24 ஊழியர்கள்- முறைகேடுகளுக்கு இதுதான் காரணமா?
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
NTA: உள்ளேயே கறுப்பு ஆடுகள்; நீட் வினாத்தாள் கசிவு- 47 என்டிஏ அதிகாரிகள் அதிரடி டிஸ்மிஸ்!
Long Range Electric Bikes: ஒரு தடவை சார்ஜ் போட்டுட்டு போய்ட்டே இருக்கணுமா.? இந்தாங்க, அதிக ரேஞ்ச் கொடுக்கும் EV பைக்குகள் லிஸ்ட்
ஒரு தடவை சார்ஜ் போட்டுட்டு போய்ட்டே இருக்கணுமா.? இந்தாங்க, அதிக ரேஞ்ச் கொடுக்கும் EV பைக்குகள் லிஸ்ட்
Best 125cc Bikes in India: சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
சக்திக்கு சக்தி.. மைலேஜுக்கு மைலேஜ்..விலையும் குறைவு.! நாட்டின் பெஸ்ட் 125சிசி பைக்குகள் எவை.?
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Tata Tiago EMI: வெறும் ரூ.50 ஆயிரம் போதும்; டாடா டியாகோ பட்ஜெட் காரை சொந்தமாக்கலாம்! 4 ஆண்டு லோன்- இதோ EMI!
Embed widget