மேலும் அறிய

மணல் கொள்ளைக்காக திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது - சீமான் குற்றச்சாட்டு

ஆறுகளின் மணல் கொள்ளைக்காகவே திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம்சாட்டினார்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் ரூ.191 கோடி  திட்ட மதிப்பீட்டில் புறவழிச் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. மானாமதுரை - பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதியாக கண்டியூர், திருவையாறு, பெரும்புலியூர், கல்யாணபுரம் உள்ளிட்ட 6 கிராமங்களின் வழியே சுமார் 7 கிலோமீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

விளைநிலங்களை அழித்து இந்த புறவழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திருவையாறு அருகே கண்டியூரில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று சந்தித்து பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் விளைநிலங்களில் அமைக்கப்படும் சாலை பகுதிகளையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த பகுதியில் சாலை அமைப்பதாக கூறி பயிர்களை அழித்து படுகொலை செய்திருக்கிறது இந்த அரசு. இது சர்வாதிகாரம் கிடையாது. இது கொடுங்கோல் செயல். 40 நாட்கள் முதல் 50 நாளில் விளைந்த பயிர்களை, கர்ப்பிணி பெண்களைப் போல் உயிரோடு புதைத்துள்ளனர்.  தஞ்சாவூர் நன்றாக விளைந்தால் தமிழ்நாடு முழுவதும் சோறு போடலாம். தமிழ்நாடு முழுவதும் நல்லா விளைந்தால் உலகத்துக்கே சோறு போடலாம் என்பது முன்னோர் மொழி.


மணல் கொள்ளைக்காக திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது - சீமான் குற்றச்சாட்டு

நீங்க முன்னறிவிப்பு செய்யவில்லை. நடவுக்கு முன்பு அல்லது அறுவடை முடிந்த பிறகு விவசாயிகளை அழைத்து பேசி இந்த புறவழிச்சாலையின் அவசியம் குறித்து கூறி ஒரு உரிய தொகை, இழப்பீடு கிடையாது. உரிய தொகையை கொடுத்து விவசாயிகளின் ஒப்புதலோடு நிலத்தை பெற்று நீங்க சாலையை அமைத்து இருந்தால் அது வேறு மாதிரியான அணுகுமுறை.

அந்த தஞ்சாவூரை அழித்து இந்த சாலை போட அவசியம் என்ன. இதற்கு முதன்மை காரணம் காவிரி, கொள்ளிடம், குடமுருட்டி ஆறுகளில் இருந்து மண்ணை அள்ளிக் கொண்டு வசதியாக செல்ல அமைக்கப்படுகிறது. இந்த பகுதியில் முதன்மை சாலையில் லாரிகளில் மணலை கொண்டு போகும் போது விபத்துக்கள் ஏற்படுகிறது. அதனால் மக்கள் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்படுகிறது. எனவே இந்த புறவழிச்சாலை மூலம் மணலை திருடி கொண்டு செல்ல சாலை அமைக்கப்படுகிறது.


மணல் கொள்ளைக்காக திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது - சீமான் குற்றச்சாட்டு

இந்த சாலை அதிமுக ஆட்சியில் அமைத்திருந்தால், திமுகவினர் எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன பாடுபடுத்தி இருப்பீர்கள். விவசாயிகள் எளிய மக்கள், உழைக்கும் மக்கள், அரசியல் வலிமை, அதிகார வலிமை அற்ற மக்கள் என்பதால் என்னவெல்லாம் செய்யலாம் என்ற திமிரில் செய்கிறீர்களா, இதை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்.

இது கொலைகார செயல், கொடுங்கோல் செயல். ராஜபக்சேவை விட படுகொலையாளர்கள். விவசாயிகளின் போராட்டத்தையும் மீறி சாலை அமைக்கப்பட்டால் நான் வந்து தடுத்து நிறுத்துவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
நடுவழியில் அதிகரித்த பிரசவ வலி...  தஞ்சாவூர் அருகே 108 ஆம்புலன்சிலேயே குவா...குவா!!!
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
சர்வர் கோளாறு... ரேஷன் கடை எந்திரங்களை ஒப்படைத்து பணியாளர்கள் போராட்டம்: கும்பகோணத்தில் பெரும் பரபரப்பு
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்
விபத்து நடக்கும் முன் விழித்துக் கொள்ளுங்கள்! தஞ்சையில் ஆபத்தான மேன்ஹோல்களை சீரமைக்க வலியுறுத்தல்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget