மேலும் அறிய

தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கடலோரப் பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

தமிழகத்தில் கடல் வழியாக தீவிரவாதிகள் அந்நியர்கள் ஊடுருவலை தடுப்பதற்காக பாதுகாப்பு படையினர் ஆண்டுதோறும் பல்வேறு ஒத்திகை நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.  அதன்படி, கடற்படையினர், கடலோர பாதுகாப்பு குழும காவல்துறையினர் மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் இணைந்து, சாகர் கவாச் எனப்படும் பாதுகாப்பு ஒத்திகை பயிற்சியை மேற்கொண்டனர். 

அதன்படி தஞ்சாவூர் மாவட்ட எல்லையான தம்பிக்கோட்டை வடகாடு தொடங்கி, புதுக்கோட்டை மாவட்ட எல்லையான கட்டுமாவடி வரை உள்ள அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம் உள்ளிட்ட கடலோர கிராமங்களில் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்கள் இந்த பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.


தஞ்சை மாவட்ட கடலோர பகுதிகளில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

கடலோர பாதுகாப்பு குழும காவல் துணை கண்காணிப்பாளர் முருகன் தலைமையில், பட்டுக்கோட்டை கடலோர காவல் குழும ஆய்வாளர் மஞ்சுளா, உதவி ஆய்வாளர்கள் சுப்பிரமணியன் (சேதுபாவாசத்திரம்), ஜீவானந்தம் (அதிராம்பட்டினம்) மற்றும் காவலர்கள் இணைந்து படகு மூலம் கடலுக்குள் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். 

அப்போது தீவிரவாதிகள் ஊடுருவல் தொடர்பாக கடலுக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், கடலுக்குள் அந்நியர் நடமாட்டம், சந்தேகத்திற்குரிய படகுகள் நடமாட்டம், சட்ட விரோத செயல்பாடுகள் காணப்பட்டால், உடனடியாக காவல்துறை, கடலோர காவல் படைக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தினர். 

தொடர்ந்து கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களிடம் அடையாள அட்டை, படகின் ஆவணங்கள் ஆகியவற்றை வாங்கி சோதனையிட்டனர். மேலும், மீன்பிடித்து விட்டு கடற்கரைக்கு திரும்பிய மீனவர்களிடமும் சோதனை நடத்தினர். மேலும், கடற்கரை கிராமங்களில் பொதுமக்களிடமும்  பயங்கரவாத தடுப்பு நடவடிக்கையாக, பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இதேபோல், கட்டுமாவடி முதல் தம்பிக்கோட்டை வடகாடு வரை சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ஆங்காங்கே தடுப்பு அமைத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
Cyclone Ditwah: தமிழகத்தை நெருங்கிய டிட்வா புயல்.. சிக்கிய 6 மாவட்டங்கள்.. கனமழை எச்சரிக்கை!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
கனமழை எச்சரிக்கை: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு என்ன நடக்கும்? IMD தகவல்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
Cyclone Ditwah: டிட்வா புயல்.. சென்னை பெய்ய தொடங்கிய மழை.. மக்களே உஷார்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
கார்த்திகை தீபம்: திருவண்ணாமலைக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஆட்சியர்!
Aadhaar Mobile No.: அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
அப்பாடா, பெரிய தலைவலி தீரப் போகுது.! இனி வீட்டில் இருந்தே ஆதார் மொபைல் எண்ணை அப்டேட் செய்யலாம்
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
தமிழ்நாட்டில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை என வெளியான அறிவிப்பு; பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
Embed widget