மேலும் அறிய

ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

’’ராஜேந்திர சோழனின் காலத்தில் வெற்றி பெற்ற  இடங்கள், கோயிலின் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கல்வெட்டுக்களாக வைத்திருந்தனர்’’

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  தாலுக்கா, உடையார்கோவிலில் தர்மவல்லி சமேத கரவந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்,  கி.பி., 10 ஆம் நுாற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திரச் சோழன், போருக்கு செல்லும் வழியில், களாச்செடிகள் நிறைந்த காடுகளில், தன்னுடைய ஆயுதங்களை மறைவாக வைத்தார். அப்போது, ஒரு சிவலிங்கம் அவரது கண்ணில் தென்பட்டது. மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், நான்கு புறமும் தீர்த்தம் அமைந்து, அதன் நடுவில் இந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி வழிபட்டால் சகல பாவம் போகும் என கூறினார்.


ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

பின்னர் ராஜேந்திரசோழன்,  திரிபுவன மாதேவிப்பேரேரி என்னும் பெரிய குளத்தை நான்கு புறமும் அமைந்தாற்போல் வெட்டி, தண்ணீர் நிற்பது போல் ஏற்படுத்தினான். அதன் நடுவில் கோயிலை அமைத்து, சிவபெருமான் சொன்ன சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். களாச்செடிகளுக்கு இடையே இருந்து கிடைத்ததால் இத்தலத்தில் உள்ள சிவபெருமான் கரவிந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, படகில் சுவாமியும், பக்தர்களும் வந்த போது, படகு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு செல்ல பாதை அமைக்கப்பட்டது.

வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, மிகவும் பழமையான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட குளத்தின் நடுவில்  உள்ள கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இத்தகையை சிறப்பு மிக்க கோயிலில் உள்ள பழமையான  கல்வெட்டில், குலோத்துங்க சோழனின் 18-வது ஆட்சி ஆண்டில், பழுதடைந்த லிங்கத்தின் பீடத்தை அமைக்க புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளியூர் மலை பகுதியில் வெட்டி எடுத்து வரப்பட்டதாகவும், பல்வேறு கோவிலுக்கு தேவையான கற்களும் கொண்டு வரப்பட்டதாகவும்,  தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் 2013 ஆம் ஆண்டு திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், கோயிலின் திருப்பணியின் போது, சுற்று சுவரில் உள்ள கல்வெட்டுகள் மீது  சிமெண்ட் மற்றும் வர்ணம் பூசி மறைத்து விட்டனர். இதனால் கோயிலின் உள்ள விலை உயர்ந்த பொருட்கள்,  அசையும், அசையா சொத்துக்கள் உள்ள கல்வெட்டை மறைத்திருப்பதால், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டுமின்றி அப்பகுதி கிராம மக்கள் வேதனையை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், இந்திய தொல்லியியல் துறை மூலம் கோயிலின் சுவற்றிலுள்ள சிமெண்ட் மற்றும் வர்ணம் பூசி மறைத்திருப்பதை, மீண்டும் பழைய படி, மீட்டு படிமம் எடுத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குணா என்பவர் கூறுகையில், இக்கோவிலில் தொல்லியல் ஆய்வு செய்யக் கூடிய அளவிற்கு பழமையான செய்திகள் அடங்கக் கூடிய கல்வெட்டுகள் அமைந்துள்ளது. ராஜேந்திர சோழனின் காலத்தில் வெற்றி பெற்ற  இடங்கள், கோயிலின் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கல்வெட்டுக்களாக வைத்துள்ளார். ஆனால் அதிலுள்ள பெருமைகளை பற்றி தெரியாமல், கோயில் திருப்பணி செய்யும் போது, மறைத்து விட்டார்கள்.  அதனை அகற்றி தொல்லியல் ஆய்வு செய்து, படிமம் எடுத்து பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல்,  இக்கோவிலின் பெருமையை வெளி உலகத்திற்கு தமிழக அரசு கொண்டுவர வேண்டும். இது போல தஞ்சை மாவட்டத்தில் பழமையான பல்வேறு கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் அதிகாரிகளின் அலட்சியதால் சிதைந்து வருகிறது என்றனர்.

தலைப்பு செய்திகள்

திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவையாறு அருகே குளம் அமைக்க பள்ளம் தோண்டியபோது அதிர்ச்சி: 2 கற்சிலைகள் கண்டெடுப்பு
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
60 ஆண்டுகளுக்கு பிறகு லண்டனில் இருந்து கும்பகோணம் வந்த திருமங்கை ஆழ்வார் சிலை
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு
இலுப்பையடி விநாயகர் கோயிலுக்கு சொந்தமான ரூ.2 கோடி மதிப்பு சொத்து மீட்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget