மேலும் அறிய

ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

’’ராஜேந்திர சோழனின் காலத்தில் வெற்றி பெற்ற  இடங்கள், கோயிலின் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கல்வெட்டுக்களாக வைத்திருந்தனர்’’

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம்  தாலுக்கா, உடையார்கோவிலில் தர்மவல்லி சமேத கரவந்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில்,  கி.பி., 10 ஆம் நுாற்றாண்டில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டது. ராஜேந்திரச் சோழன், போருக்கு செல்லும் வழியில், களாச்செடிகள் நிறைந்த காடுகளில், தன்னுடைய ஆயுதங்களை மறைவாக வைத்தார். அப்போது, ஒரு சிவலிங்கம் அவரது கண்ணில் தென்பட்டது. மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், நான்கு புறமும் தீர்த்தம் அமைந்து, அதன் நடுவில் இந்த சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து கோயில் எழுப்பி வழிபட்டால் சகல பாவம் போகும் என கூறினார்.


ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

பின்னர் ராஜேந்திரசோழன்,  திரிபுவன மாதேவிப்பேரேரி என்னும் பெரிய குளத்தை நான்கு புறமும் அமைந்தாற்போல் வெட்டி, தண்ணீர் நிற்பது போல் ஏற்படுத்தினான். அதன் நடுவில் கோயிலை அமைத்து, சிவபெருமான் சொன்ன சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். களாச்செடிகளுக்கு இடையே இருந்து கிடைத்ததால் இத்தலத்தில் உள்ள சிவபெருமான் கரவிந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, படகில் சுவாமியும், பக்தர்களும் வந்த போது, படகு கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து கோவிலுக்கு செல்ல பாதை அமைக்கப்பட்டது.

வேறு எங்கும் இல்லாத அளவிற்கு, மிகவும் பழமையான ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட குளத்தின் நடுவில்  உள்ள கோயில் மிகவும் சிறப்பு பெற்றதாகும். இத்தகையை சிறப்பு மிக்க கோயிலில் உள்ள பழமையான  கல்வெட்டில், குலோத்துங்க சோழனின் 18-வது ஆட்சி ஆண்டில், பழுதடைந்த லிங்கத்தின் பீடத்தை அமைக்க புதுக்கோட்டை மாவட்டம் கிள்ளியூர் மலை பகுதியில் வெட்டி எடுத்து வரப்பட்டதாகவும், பல்வேறு கோவிலுக்கு தேவையான கற்களும் கொண்டு வரப்பட்டதாகவும்,  தஞ்சை சரஸ்வதி மஹால் நூலக குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க ஆயிரம் ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் 2013 ஆம் ஆண்டு திருப்பணி முடிந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில், கோயிலின் திருப்பணியின் போது, சுற்று சுவரில் உள்ள கல்வெட்டுகள் மீது  சிமெண்ட் மற்றும் வர்ணம் பூசி மறைத்து விட்டனர். இதனால் கோயிலின் உள்ள விலை உயர்ந்த பொருட்கள்,  அசையும், அசையா சொத்துக்கள் உள்ள கல்வெட்டை மறைத்திருப்பதால், கல்வெட்டு ஆய்வாளர்கள் மட்டுமின்றி அப்பகுதி கிராம மக்கள் வேதனையை தெரிவிக்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம், இந்திய தொல்லியியல் துறை மூலம் கோயிலின் சுவற்றிலுள்ள சிமெண்ட் மற்றும் வர்ணம் பூசி மறைத்திருப்பதை, மீண்டும் பழைய படி, மீட்டு படிமம் எடுத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.


ராஜேந்திரசோழனின் கல்வெட்டு மீது பெயிண்ட் பூசி மறைப்பு - கல்வெட்டு ஆய்வாளர்கள் அதிர்ச்சி

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குணா என்பவர் கூறுகையில், இக்கோவிலில் தொல்லியல் ஆய்வு செய்யக் கூடிய அளவிற்கு பழமையான செய்திகள் அடங்கக் கூடிய கல்வெட்டுகள் அமைந்துள்ளது. ராஜேந்திர சோழனின் காலத்தில் வெற்றி பெற்ற  இடங்கள், கோயிலின் சொத்துக்கள் உள்ளிட்டவைகளை பற்றி கல்வெட்டுக்களாக வைத்துள்ளார். ஆனால் அதிலுள்ள பெருமைகளை பற்றி தெரியாமல், கோயில் திருப்பணி செய்யும் போது, மறைத்து விட்டார்கள்.  அதனை அகற்றி தொல்லியல் ஆய்வு செய்து, படிமம் எடுத்து பாதுகாப்பதோடு மட்டுமில்லாமல்,  இக்கோவிலின் பெருமையை வெளி உலகத்திற்கு தமிழக அரசு கொண்டுவர வேண்டும். இது போல தஞ்சை மாவட்டத்தில் பழமையான பல்வேறு கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் அதிகாரிகளின் அலட்சியதால் சிதைந்து வருகிறது என்றனர்.

தலைப்பு செய்திகள்

ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
ஏமாற்றத்தை அளிக்கும் தமிழக பட்ஜெட்... வரி ஆலோசகர்கள் கூட்டமைப்பு தலைவர் கடும் கண்டனம்
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
அடுத்த கட்ட தீவிர போராட்ட அறிவிப்பு வெளியிடப்படும்... செவிலியர்கள் எச்சரிக்கை
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
சக்கராப்பள்ளியில் 12-ல் மக்கள் நேர்காணல் முகாம்! முன்கூட்டியே மனு அளிக்க கலெக்டர் ரேவதி அழைப்பு
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?
மக்களே 10ம் தேதி முக்கியமான நாள்... தஞ்சை கலெக்டர் அறிவிப்பு எதற்காக?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 8-ம் தேதி சனிக்கிழமை எங்கெங்க மின்சாரத் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? லிஸ்ட் இதோ
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
Embed widget