மேலும் அறிய

துள்ளித் துள்ளி ஓடும் மானே...! தஞ்சை மாவட்டம் வடக்கூர் கிராமத்தில் வலம் வரும் கலைமான்

பார்த்தியா என்னமா துள்ளிச்சு... மின்னலாட்டம் ஓடிச்சு என்று வடக்கூர் முழுவதும் ஒரே பேச்சுதான். அந்த பேச்சு அந்த கிராமத்தை வலம் வந்த கலைமான் பற்றியதுதான்.

தஞ்சாவூர்: பார்த்தியா என்னமா துள்ளிச்சு... மின்னலாட்டம் ஓடிச்சு என்று வடக்கூர் முழுவதும் ஒரே பேச்சுதான். அந்த பேச்சு அந்த கிராமத்தை வலம் வந்த கலைமான் பற்றியதுதான். தஞ்சை மாவட்டம் வடக்கூர் கிராமத்தில் கலைமான் ஒன்று கிராமத்தின் தெருக்களில் புகுந்து ஓடியுள்ளது. மேலும் இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பாமாயில் மர தோப்புப்பகுதியில் இந்த கலைமான் நின்றதை பார்த்த கிராம இளைஞர்கள் சில அதை வீடியோவாக எடுத்துள்ளனர். 

புள்ளி மான்கள் உலா வந்ததாக பேச்சு

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே  பாச்சூர் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புள்ளிமான் ஓடியதை பொதுமக்கள் சிலர் பார்த்துள்ளனர். ஒன்றல்ல இன்னும் சில மான்கள் ஓடின என்றும் அப்போது மக்கள் பரவலாக பேசிக் கொண்டனர். இது வதந்தியா என்றும் சிலர் சந்தேக கேள்வி எழுப்பினர். ஒரத்தநாடு அருகே திருவோணம், ரெகுநாதபுரம் அமைந்துள்ளது. இது புதுக்கோட்டை பகுதிக்கு மிக அருகில் உள்ள பகுதிகளாகும். இங்கு காப்புக்காடுகள் உள்ளன. இதில் காட்டுப்பூனை, முயல் உட்பட சிறிய விலங்கினங்கள் உள்ளன.

உணவு, தண்ணீர் தேடி நகர் பகுதிக்கு வரும் விலங்கினங்கள்

ஆனால் மான் உட்பட பெரிய  விலங்கினங்கள் இப்பகுதியில் தென்பட்டதில்லை. தற்போது காலநிலை மாறுபாட்டால் தண்ணீர், உணவு தேடி காட்டு விலங்குகள் நகர் பகுதிக்குள் வருவது சர்வசாதாரணமாக மாறிவிட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது தெரிய வந்து பொதுமக்கள் அச்சம் அடைந்ததும் குறிப்பிடத்தக்கது. 


துள்ளித் துள்ளி ஓடும் மானே...! தஞ்சை மாவட்டம் வடக்கூர் கிராமத்தில் வலம் வரும் கலைமான்

கொம்புகளுடன் கூடிய மான் துள்ளியோடியது

இந்நிலையில் பாச்சூர் அருகே உள்ள வடக்கூர் கிராமத்தில் இன்று காலை கொம்புகளுடன் கூடிய மான் ஒன்று தெருக்களிலும், விவசாய நிலத்திலும், பாமாயில் தோப்பு பகுதியும் உலா வந்துள்ளது. வயல்களில் துள்ளிக் குதித்து மின்னல் வேகத்தில் ஓடியுள்ளது. இது பாமாயின் தோப்பு பகுதியில் உலா வந்ததை பார்த்த கிராம இளைஞர்கள் சிலர் இதை செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளனர். அருகில் செல்ல முடியாத நிலையில் தூரத்தில் இருந்து இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 

கொம்புகளுடனும், உடலில் புள்ளிகளுடனும் காணப்படும் இந்த மானை பார்த்தவர்கள் இது கலைமான் காட்டுப்பகுதியில்தான் இருக்கும். தண்ணீர் மற்றும் உணவு தேடி இப்படி நகர் பகுதியிலும், கிராம பகுதியிலும் வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

காப்புக்காடுகள் பகுதியில் இருந்து வந்து இருக்கலாம்

இதுகுறித்து கிராம மக்கள் தரப்பில் கூறுகையில், எங்கள் கிராமத்தை சுற்றியும் விவசாய நிலங்கள் மட்டுமல்லாமல் தரிசு நிலப் பகுதியில் மண்டி கிடக்கும் மரம், செடி, கொடிகள் மற்றும் கோரைப் புற்கள் அதிகம் உள்ளது. இதனால் கிராமத்தை சுற்றி காடு போல இவை  காட்சியளிக்கின்றன. இந்த மான் எங்கிருந்து வந்தது என்பது தெரியவில்லை. இதற்கு முன்னர் எங்கள் கிராமத்தில் இது போன்ற நிகழ்வும் நடந்ததில்லை. தற்போது கடந்த சில நாட்களாக இந்த புள்ளிமான் கிராமத்தைச் சுற்றிலும் வலம் வருகிறது. புதுக்கோட்டை காப்புக் காடுகள் பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வந்து இருக்கலாம். இந்த மான் தெரு நாய்களிடம் சிக்கிக் கொள்ள கூடாது. 

எனவே வனத்துறையினர் இந்த மானை பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

OPERATION தென் மாவட்டம் ஆட்டத்தை ஆரம்பித்த ஸ்டாலின் மரண பீதியில் அதிமுக,பாஜக! DMK Master Plan“அரிசி திருடி விக்குறீங்களா” ரவுண்டு கட்டிய இளைஞர் திணறிய ரேஷன் கடை ஊழியர்கள் Ration Shop ScamTirupathur | “நாயா அலையவிடுறாங்க” போலி ஆதார் கார்டில் பத்திரப்பதிவு பாஜக நிர்வாகி அட்டூழியம்!TVK Vijay Madurai Meeting  | 100 வேட்பாளர்கள் ரெடி? மதுரையில் அறிவிப்பு! விஜயின் பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
''Who is Ratheesh?'': யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
யார் இந்த ரத்தீஷ்.? கேள்வி எழுப்பும் அதிமுக; சூடுபிடிக்கும் டாஸ்மாக் முறைகேடு விவாகரம்
Ramadoss Vs Anbumani Vs Sowmiya: அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
அப்பா மகன் சண்டையா, மாமனார் மருமகள் போரா.? பாமக-வில் நடப்பது என்ன.?
"நாச்சியப்பன் பாத்திரக் கடை கோப்பையோடு வந்த நபருடன் போட்டோ ஷூட்" கலாய்த்த இபிஎஸ்
'Thug Life' Trailer on 17th: எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
எகிறும் எதிர்பார்ப்பு; நாளை வெளியாகும் ‘தக் லைஃப்‘ படத்தின் ட்ரெய்லர்
"காங்கிரஸ்க்கு எதிர்காலம் இல்ல.. இது, ராகுல் காந்தி உடன் இருப்பவர்களுக்கே தெரியும்" சிதம்பரம் நறுக்
Dindigul-Sabarimala Train: சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
சாமியே சரணம் ஐயப்பா; திண்டுக்கல் - சபரிமலை இடையே புதிய ரயில் பாதை, 3 மாவட்ட மக்கள் மகிழ்ச்சி
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
40 ஆண்டாக இதே நிலை; கல்வியில் விடியல் எப்போது? 10, 11 பொதுத்தேர்வில் வட மாவட்டங்களே கடைசி- அன்புமணி வேதனை!
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
Embed widget