மேலும் அறிய

வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ராஹத் முதலீட்டாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

ராஹத் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஹத் முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இந்த வழக்கை துரிதப்படுத்தி தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தஞ்சாவூர்: ராஹத் தனியார் பஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வழக்கை விரைந்து விசாரித்து தீர்வு ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி 500க்கும் அதிகமானோர் தஞ்சை பெசண்ட் அரங்கம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை பகுதியில் ராஹத் தனியார் பஸ் நிறுவனம் இயங்கி வந்தது. இதன் உரிமையாளர் கமாலுதீன் என்பவர் தங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் லாபத்தில் பங்கு தருவதாக அறிவித்தார். இதையடுத்து தஞ்சாவூர் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இஸ்லாமியர்கள் ராஹத் பஸ் நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை முதலீடு செய்தனர்.

ஆரம்ப காலக்கட்டத்தில் முதலீடு செய்தவர்களுக்கு மாதம் ரூ.10,500 வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. இதை தெரிந்து மேலும் பலர் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தனர். இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு ராஹத் நிறுவன உரிமையாளர் கமாலுதீன் இறந்து விட்டார். பின்னர் முதலீட்டாளர்களுக்கு பங்கு தொகை வழங்கப்படவில்லை.


வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தி ராஹத் முதலீட்டாளர்கள் தஞ்சையில் ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் பஸ் நிறுவன உரிமையாளரின் மனைவி மற்றும் மகன்களிடம் தங்களின் முதலீட்டுத் தொகையை திரும்ப தருமாறு வலியுறுத்தினர். ஆனால் ராஹத் பஸ் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்று கமாலுதீன் மனைவி மற்றும் உறவினர்கள் தெரிவித்து விட்டனர். இதனால் ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தங்களின் பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று கோரி தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் எஸ்.பி., அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட 1000க்கும் அதிகமானோர் புகார் மனுவை அளித்தனர்.

இதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு நீதி வேண்டும், துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை பெசண்ட் அரங்கம் எதிரில் ராஹத் முதலீட்டாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

இதற்கு ஜபருல்லா தலைமை வகித்தார். ஜலால்ஷேக் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் ராஹத்தில் முதலீடு செய்தவர்கள் தங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர். இதில் ராஹத் வழக்கை துரிதப்படுத்த வேண்டும். ராஹத் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், ராஹத் முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், இந்த வழக்கை துரிதப்படுத்தி தீர்வு கிடைக்கச் செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் குழந்தைகள் உட்பட 500க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் கூறுகையில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். இதனை துரிதப்படுத்த வேண்டும். முதலீடு செய்து ஏமாந்து நிற்கிறோம். இதனால் மிகவும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையில் உள்ளோம். எனவே அரசு இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கிடைக்க செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget