ஆதாரங்களுடன் மக்கள் கோரிக்கை அனுப்பலாம்... அமைச்சர் வினோத் ரவி அழைப்பு எதற்காக?
: தமிழக சட்டமன்றத்தில் விரைவில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகளுக்கான புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

கும்பகோணம்: கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதிகளில் உள்ள கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திருப்பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகள் தொடர்பான கோரிக்கைகளை பொதுமக்கள் ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சர் வினோத் ரவி தெரிவித்துள்ளார். வரும் தமிழக பட்ஜெட்டில் இந்த கோரிக்கைகள் இடம்பெற வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
பட்ஜெட்டை முன்னிட்டு முக்கிய அறிவிப்பு
இதுகுறித்து அமைச்சர் வினோத் ரவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டமன்றத்தில் விரைவில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதில் பல்வேறு துறைகளுக்கான புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.
கும்பகோணம், "கோவில் நகரம்" என்ற பெருமை பெற்றுள்ளதால், அப்பகுதியில் உள்ள பழமையான கோவில்களின் வளர்ச்சிக்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
என்னென்ன கோரிக்கைகள் அனுப்பலாம்?
கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் தொகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்கள் பகுதியில் உள்ள கோவில்கள் தொடர்பாக பின்வரும் விவரங்களை ஆதாரங்களுடன் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள்
அவசரமாக மேற்கொள்ள வேண்டிய திருப்பணிகள்
சிதிலமடைந்த கோவில் கட்டிடங்கள்
சீரமைப்பு தேவைப்படும் கோவில் குளங்கள்
கோவில் தொடர்பான பிற முக்கிய தேவைகள் மற்றும் பிரச்சினைகள்
ஒவ்வொரு கோரிக்கையுடனும் புகைப்படங்கள் மற்றும் தேவையான ஆதாரங்களை இணைத்தால், அவற்றை பரிசீலிக்க வசதியாக இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜூலை 15-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்
பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை வருகிற ஜூலை 15-ஆம் தேதிக்குள் புகைப்படங்கள் மற்றும் தேவையான விவரங்களுடன் கும்பகோணம் எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்பு
மக்களிடமிருந்து பெறப்படும் கோரிக்கைகள் மற்றும் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான கோரிக்கைகள் விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள தமிழக பட்ஜெட்டில் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் வினோத் ரவி தெரிவித்துள்ளார். கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் பகுதிகளில் உள்ள பாரம்பரிய கோவில்களின் பாதுகாப்பு, சீரமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கும்பகோணம் மக்களின் எதிர்பார்ப்பும், கோரிக்கைகளும்
அமைச்சரின் அறிவிப்பு குறித்து சமூகஆர்வலர்கள் தரப்பில் கூறுரைகயில், கும்பகோணம் மக்களின் மிக முக்கிய கோரிக்கைகள்: கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய தனி மாவட்டம் உருவாக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் மிக நீண்ட காலக் கோரிக்கையாகும். நெல் மற்றும் கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களையும் (DPC), விளைபொருட்களைப் பாதுகாக்க நவீன குளிர்பதனக் கிடங்குகளையும் அமைக்க வேண்டும். கும்பகோணம் நகருக்குள் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, புறவழிச்சாலைத் திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
திருவிடைமருதூர் தொகுதிக்கு உட்பட்ட வேப்பத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்களின் போக்குவரத்து வசதிக்காக ஆற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும்.திருவிடைமருதூர் மற்றும் கும்பகோணம் சுற்றியுள்ள கடைமடைப் பகுதிகளுக்கு காவிரி நீர் தடையின்றிச் சென்றடைய, பாசனக் கால்வாய்களை உடனடியாக தூர்வார வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் மிக முக்கியமானவை ஆகும். இதுகுறித்து பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு என்றனர்.
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















