மேலும் அறிய

விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!

தஞ்சை அருகே காண்போரைக் கவர்ந்து இழுக்கும் வகையில் மிகவும் அரிதான ‘கூந்தல் பனை’ மரம் ஒன்று வான்முட்டப் பூத்துக் குலுங்குகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை மாரியம்மன்கோவில் அருகே பூத்துக் குலுங்கும் ‘கூந்தல் பனை’ மரத்தை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆச்சரியம் கலந்த வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர். இதனை தாலிப்பனை, குடைப்பனை, தேர் பனை என்று பல்வேறு பெயர்களிலும் அழைக்கின்றனர். ஆயுளில் ஒருமுறை மட்டுமே இந்த விசித்திரமான அதிசயம் நிகழும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சை அருகே பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலுக்கு அருகில் காண்போரைக் கவர்ந்து இழுக்கும் வகையில் மிகவும் அரிதான ‘கூந்தல் பனை’ மரம் ஒன்று வான்முட்டப் பூத்துக் குலுங்குகிறது. தாவரவியல் ரீதியாகப் பல்வேறு விசித்திரங்களைக் கொண்ட இம்மரத்தை, அப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.

பொதுவாகப் பனை குடும்பத்தைச் சேர்ந்த மரங்கள் பல ஆண்டுகள் வாழக்கூடியவை. ஆனால், இந்த ‘கூந்தல் பனை’ (Fishtail Palm) மரத்திற்கு என்று ஒரு தனித்துவமான குணம் உண்டு. இதன் இலைகளின் ஓரங்கள் மீனின் வால் வடிவிலும், இதன் பூங்குலைகள் பெண்களின் அடர்ந்த கூந்தல் அவிழ்ந்து தொங்குவது போலவும் காட்சியளிக்கும். இதனாலேயே இதற்கு ‘கூந்தல் பனை’ என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

இம்மரத்தின் மிக முக்கிய விசித்திரம் என்னவென்றால், இது தன் வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டுமே பூத்து குலுங்கும் தன்மையுடையது. மரத்தின் உச்சிப் பகுதியில் தொடங்கி, படிப்படியாகக் கீழ்நோக்கி ஒவ்வொரு கணுவாகப் பூங்குலைகள் வெளிவரும். கணு வரை பூத்து முடித்தவுடன், இம்மரம் தன் ஆயுளை முடித்துக் கொண்டு பட்டுப்போய்விடும். அதாவது இறந்துவிடும்.

தற்போது தஞ்சை மாரியம்மன் கோவில் பிரதான சாலையோரம் உள்ள இந்த மரத்தின் உச்சிப் பகுதியில், மஞ்சள் மற்றும் வெண்மை கலந்த நிறத்தில் பிரம்மாண்டமான பூங்குலை மலர்ந்து காட்சியளிக்கிறது. இது இம்மரத்தின் இறுதிப் பருவத்தின் தொடக்கத்தைக் காட்டுகிறது.

மாரியம்மன் கோயில் போன்ற ஆன்மீகத் தலங்களுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், சாலையோரம் கம்பீரமாகத் தலைநிமிர்ந்து பூத்து நிற்கும் இந்த மரத்தின் அழகும், அதன் பின்னணியில் உள்ள தாவரவியல் ரகசியமும் பலரையும் ஈர்த்துள்ளது.

"சாலையைக் கடந்து செல்லும் போது விசித்திரமான பூவோடு இந்த மரம் நிற்பதைப் பார்த்தோம். இதன் ஆயுட்காலத்தில் ஒரே ஒருமுறைதான் இப்படிப் பூக்கும் என்றும், அதன் பிறகு மரம் அழிந்துவிடும் என்றும் அறிந்தபோது இயற்கையின் படைப்பு வியப்பாக இருந்தது" என பக்தர்கள் தெரிவித்தனர்.

இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சியாளர்கள் மத்தியிலும், இந்த கூந்தல் பனையின் அரிதான இறுதிப் பருவ மலர்ச்சி தற்போது பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Embed widget