மேலும் அறிய

காதை கிழிக்கும் ஏர்ஹாரன்... கண் இமைக்கும் நேரத்தில் பாயும் பேருந்துகள்: தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் உடனடியாக விதிகளை மீறும் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மேரீஸ் கார்னர் பகுதியில் தனியார் பேருந்துகளின் அதீத வேகம் மற்றும் ஏர்ஹாரன்களை அதிக சத்தத்தில் ஒலிக்க விட்டு செல்வதால் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தஞ்சை மாநகரின் மிக முக்கிய சந்திப்புகளில் ஒன்றான மேரீஸ்கார்னர் பகுதியில், தனியார் பேருந்துகள் அதிவேகமாகவும், காதை பிளக்கும் அதிக ஒலியுடனும் இயக்கப்படுவதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். பெரிய அளவில் விபத்துகள் ஏற்பட்டு உயிர் சேதம் நிகழும் முன் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


காதை கிழிக்கும் ஏர்ஹாரன்... கண் இமைக்கும் நேரத்தில் பாயும் பேருந்துகள்: தஞ்சையில் பரபரப்பு!

தஞ்சாவூர் நகரின் இதயமாக விளங்கும் மேரிஸ் கார்னர் பகுதியில் வணிக நிறுவனங்கள், உணவகங்கள், வங்கிகள், பள்ளிகள் இயங்கி வருகிறது. நகரின் பல்வேறு முக்கிய இடங்களை இணைக்கும் ஒரு பிரதான வழித்தடமாக மேரீஸ்கார்னர் பகுதி உள்ளது. புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலையம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் பட்டுக்கோட்டை, மன்னார்குடி, திருவாரூர், நாகை போன்ற பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்தச் சந்திப்பைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

இதனால், பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மட்டுமன்றி, நாள் முழுவதும் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக இருப்பது வழக்கம். இத்தகைய மிக முக்கியமான மற்றும் நெரிசல் மிகுந்த மேரீஸ் கார்னர் பகுதியில், ஒரு சில தனியார் பேருந்துகள் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு மிக அதிவேகமாக இயக்கப்படுவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும், அதிக பயணிகளை ஏற்றி செல்ல வேண்டும் என்ற நோக்கில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியிலும் பேருந்துகள் அதிக வேகத்தில் இயக்கப்படுகின்றன. தடை செய்யப்பட்ட, அதிக ஒலியெழுப்பும் 'ஏர்-ஹாரன்'களைப் பயன்படுத்தி, முன்னால் செல்லும் இருசக்கர வாகன ஓட்டுனர்களை அதிர வைக்கின்றனர். இதனால் அவர்கள் நிலைதடுமாறி கீழே விழும் அபாயமும் ஏற்படுகிறது. மேலும் முதியவர்கள் இந்த அதிக சத்தத்தில் எழும் ஏர்ஹாரன்களால் அதிர்ச்சியடைந்து வாகனத்தை தடுமாறி ஓட்டிச் சென்று கீழே விழுந்த சம்பவங்களும் நடந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், "மேரீஸ் கார்னர் பகுதியை கடப்பதே ஒரு பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக தனியார் பேருந்துகள் பின்னால் வரும்போது எழுப்பும் அதிகப்படியான சத்தம், முதியவர்களையும், பெண்களையும் பயமுறுத்துகிறது. அதிக வேகத்தால் எப்போது என்ன நடக்குமோ என்ற அச்சத்திலேயே செல்ல வேண்டியுள்ளது"

எனவே, மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து போலீசாரும் உடனடியாக விதிகளை மீறும் தனியார் பேருந்துகளின் ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் இதேபோல் தொடர்ந்து செயல்பட்டு வந்தால் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட ஹாரன்களைப் பறிமுதல் செய்ய வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

முக்கியமாக மினி பேருந்துகளால் வாகன ஓட்டுனர்கள் படும் அவதியும் சொல்லி மாளமுடியாத ஒன்றாகும். மிகவும் வேகமாகவும், கட்டுபாடுகள் இல்லாமல் ஓட்டப்படும் மினிபஸ்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. மிகுந்த வேகம், அதிகளவு ஒலி எழுப்புதல் போன்றவற்றை செய்து வரும் மினி பஸ் டிரைவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்கள் மக்களின் வேதனைகளை புரிந்து கொள்வார்கள் என்றும் சமூக நல ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். 

Advertisement

தலைப்பு செய்திகள்

காதை கிழிக்கும் ஏர்ஹாரன்... கண் இமைக்கும் நேரத்தில் பாயும் பேருந்துகள்: தஞ்சையில் பரபரப்பு!
காதை கிழிக்கும் ஏர்ஹாரன்... கண் இமைக்கும் நேரத்தில் பாயும் பேருந்துகள்: தஞ்சையில் பரபரப்பு!
ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் தந்த சோகம்: சென்டர் மீடியனில் மோதி வேன் கவிழ்ந்த விபத்தில் பெண் பலி
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
விழி கவரும் இயற்கை விசித்திரம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் 'கூந்தல் பனை'!
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
எங்கள் உயிரை கூட விடுவோம்...மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம்: நலிவுற்ற விவசாயிகள் சங்கம் திட்டவட்டம்
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
Annamalai: 18 மாதமாக பாஜகவில் பிரச்னை.. புது கட்சி தொடங்கப்போவதாக அண்ணாமலை அறிவிப்பு!
TVK Vijay: தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? பாமக கூட்டத்தில் தவெக பேச்சு
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு - பட்ஜெட் உரையிலேயே அறிவிப்பு? PMK கூட்டத்தில் TVK பேச்சு
Annamalai: தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பாஜக பேசவில்லை - அண்ணாமலை ராஜினாமா கடித விவரங்கள்
Annamalai: விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
கட்சியில் இருந்து விலகினார் அண்ணாமலை.! பாஜக தேசிய தலைமை அதிகாரப்பூர்வ அறிவிப்பு- இது தான் காரணமா.?
Annamalai: அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
அமித் ஷா அனுமதி, மோடி ஆசீர்வாதம், புதிய அரசியல் முகமூடியில் அண்ணாமலை - காங்கிரஸ் விளாசல்
CPM SHANMUGAM :
"அதிக பிரசங்கித்தனம்".. உங்களுக்கு எப்ப நாங்க ஆதரவு கொடுத்தோம்.? பிரவீன் சக்கரவர்த்தியை வெளுத்தெடுத்த சிபிஎம்
Tamilnadu Assembly : ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
ஆளுநரை சமாளிப்பாரா விஜய்.! ஜூன் 18 ஆம் தேதி காத்திருக்கும் சவால்- சட்டப்பேரவையில் என்ன நடக்கும்.?
‘காதல், சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு சிக்கல்’ பெற்றோரின் அனுமதியை கேட்கும் பதிவுத்துறை – நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் விஜய்..?
’காதல் திருமணத்திற்கு NO?' பதிவுத்துறை மீது மணமக்கள் அதிருப்தி!
Embed widget