மேலும் அறிய

ஒரு நாட்டின் பிரதமர் பெரும் முதலாளிக்கு ஏஜெண்டாக இருப்பது பெரும் அநீதி - முத்தரசன்

மோடி ஆட்சிக் காலத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்களை அதானி போன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக முத்தரசன் விமர்சனம் செய்துள்ளார்.

மயிலாடுதுறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி நிதி வழங்கும் மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் கலந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முத்தரசன் கூறியதாவது:- இந்தியா விடுதலைக்கு பிறகு நமது நாடு வரலாற்றில் என்றும் கண்டிறாத மிகமோசமான சூழல் நிலவுகிறது. எழுதப்படாத சட்டத்தை மோடி தலைமையிலான ஆட்சி செயல்படுத்துகிறது. உண்மையை சொல்லாதே, உண்மையை சொன்னால் நாங்கள் அதனை ஏற்கமாட்டோம். நடவடிக்கை எடுப்போம். கைது செய்வோம், சிறையில் அடைப்போம் என்று மோடி தலைமையிலான மத்திய ஆட்சி மேற்கொண்டு வருகிறது. 


ஒரு நாட்டின் பிரதமர் பெரும் முதலாளிக்கு ஏஜெண்டாக இருப்பது பெரும் அநீதி - முத்தரசன்

அவர்கள் தேர்தல் நேரத்தில் அளித்த தமிழக மீனவர் பிரச்னைக்கு தீர்வு, விலைவாசி உயர்வு கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பு, கருப்புபணம் மீட்புபோன்ற வாக்குறுதிகளை நினைவுபடுத்தக்கூடாது. அதனை கேட்டதன் எதிரொலிதான் 2019-ம் ஆண்டு லோகச்பா தேர்தல் பரப்புரையின் போது ராகுல்காந்தி பேசியதற்கு தற்போது தண்டனை வழங்கப்பட்டு பதவி பறிக்கப்பட்டுள்ளது. லோக்சபாவில் அதானிக்கும், மோடிக்கும் உறவு என்ன, எவ்வளவு வெளிநாட்டு முதலீடுகள் ஈர்க்கப்பட்டு தொழில் தொடங்கப்பட்டது? என்று அடுக்கடுக்கான கேள்விகளை ராகுல் எழுப்பினார். ஜவகர்லால்நேரு முதல் மன்மோகன்சிங் வரை எல்லா பிரதமரும் தொழில் அதிபர்களோடு உறவாகத்தான் இருப்பார்கள். மாநில முதல்வர்களும் உறவாகத்தான் இருப்பார்கள். தொழில்முதலீட்டு மாநாடு நடத்துவார்கள். 


ஒரு நாட்டின் பிரதமர் பெரும் முதலாளிக்கு ஏஜெண்டாக இருப்பது பெரும் அநீதி - முத்தரசன்

ஒரு நாட்டின் பிரதமர் ஒரு பெரும் முதலாளிக்கு ஏஜெண்டாக இருப்பது பெரும் அநீதி. அதானி என்கின்ற ஒற்றை நபருக்கு ஏஜெண்டாக செயல்பட்டு நாட்டை அடகு வைத்துவிட்டார். பல ஆயிரம்கோடி கொள்ளை அடித்தது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரிக்க வேண்டுமென்று விசாரிக்க வலியுறுத்தினார். அதில் என்ன தவறு. ஒரு நபரை காப்பாற்ற நாடாளுமன்றத்தை நடக்கவிடாமல் மோடி செயல்படுகிறார். மோடி பாசிச பாதையில் செல்கிறார். பாசிச பாதையில் சென்றவர்கள் தோற்றுபோனார்கள், அந்த நிலையைத்தான் மோடி மேற்கொண்டிருக்கிறார். இதுமிக மிக ஆபத்தானது, தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம் மேல்முறையீடு செய்ய 30 நாள் அவகாசம் வழங்குகிறது. ஆனால் தீர்ப்பு வழங்கிய 24 மணிநேரத்தில் ராகுல்காந்தி எம்.பி.பதவி பறிக்கப்பட்டு வீடு காலிசெய்யப்படுகிறது. பழிவாங்க வேண்டும் என்பதை காட்டுகிறது.

Karnataka Exclusive Opinion Poll: கர்நாடகாவை வெல்லப்போவது யார்? இன்று மாலை 5.15-க்கு ஏபிபியுடன் இணைந்திருங்கள்..

என்னை எதிர்த்து பேசினால் தீர்த்து கட்டிவிடுவேன் என்பதைதான் மோடி அரசு செயல்படுத்திகொண்டிருக்கிறது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள அனைத்து கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் அதனை அகற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இந்திராகாந்தி பிரதமராக இருந்த காலங்களில் 66 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது.  வாஜ்பாய்காலத்தில் 17 பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் மோடி ஆட்சிக்காலத்தில் 23 பொதுத்துறை நிறுவனங்களை அதானிபோன்ற நிறுவனங்களுக்கு விற்பனை செய்துள்ளார் என்றார்.

Label Curd as Dahi: தமிழ்நாட்டில் தயிருக்கு நஹியா? தாஹியை தயார் படுத்தும் FSSAI: இந்தி திணிப்புக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Armstrong Murder : சாமானியன் To தலைவன்!படுகொலை - பகீர் தகவல்! யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?BSP Armstrong death | ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலைBSP Armstrong death | ஆம்ஸ்ட்ராங் படுகொலை ஆற்காடு பாலு  கும்பல் சரண்! பின்னணியை துருவும் போலீஸ்Athulya Ravi News | நடிகை அதுல்யா ரவி வீட்டில் நடந்த சம்பவம்!  CCTV-ல் பதிவான பகீர் காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
IND vs ZIM T20 Innings Highlights: பந்து வீச்சில் மிரட்டிய ரவி பிஷ்னோய்.. இந்திய அணிக்கு 116 ரன்கள் இலக்கு!
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
Breaking News LIVE : குஜராத்தில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து - 15 பேர் காயம்
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
மத்திய அரசின் 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு: திமுக உண்ணாவிரத போராட்டம் நிறைவு!
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
Olympics 2024: தூத்துக்குடி நீளம் தாண்டுதல் வீரர் பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி - குவியும் வாழ்த்து
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
TNPL 2024: DD vs TGC: விக்கெட்டுகளை குவித்த ஈஸ்வரன்! திருச்சி அணிக்கு 161 ரன்கள் இலக்கு வைத்த திண்டுக்கல் டிராகன்ஸ்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Cuddalore PMK Siva Shankar:மீண்டும் ஒரு கொடூரம்:கடலூரில் பாமக பிரமுகருக்கு அரிவாள் வெட்டு; தப்பியோடிய மர்ம கும்பல்!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Samantha: சமந்தாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. நீங்க பொறுப்பு ஏற்பீங்களா என விஷ்ணு விஷால் மனைவி ஜூவாலா கட்டா கேள்வி!
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Union Budget: புதிய நாடாளுமன்றத்தில் முதல் முழு பட்ஜெட் தாக்கல் - தேதியை அறிவித்த மத்திய அரசு
Embed widget