மேலும் அறிய

மயிலாடுதுறை: காஸ்ட்லி மொபைல் வாங்கிய கணவன்.. தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி மனைவி!

குத்தாலம் அருகே கணவன் அதிக விலைக்கு செல்போன் வாங்கியதால் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து நிறைமாத கர்ப்பிணியான மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா அரையபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிலம்பரசன். 32 வயதான இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.  இவருக்கும், மல்லியம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான சூர்யா என்பவருக்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. மேலும் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமடைந்த சூர்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.

Odisha Tree Teacher: ஒரு மனிதன் 30000 மரங்கள் : 11 வயதுச் சிறுவனின் கனவு நனவான கதை!


மயிலாடுதுறை: காஸ்ட்லி மொபைல் வாங்கிய கணவன்.. தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி மனைவி!

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சிலம்பரசன் ரூபாய் 16 ஆயிரத்திற்கு புதிதாக ஆன்ட்ராய்டு செல்போன் ஒன்றை வாங்கியுள்ளார். இதனை அறிந்த சூரியா வருமானத்திற்கு மீறி செல்போன் தேவையா என கேட்டதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து கோபித்துக்கொண்டு சூர்யா தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அவரை அவரது தாயார் அம்சவல்லி சமாதானம் செய்து கணவர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் அதிகாலை 3 மணிக்கு வீட்டில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் சூர்யாவை மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொத்தமல்லி இலை மாதக்கணக்கில் கெடாமல் இருக்க வேண்டுமா? இதை ட்ரை பண்ணுங்க!


மயிலாடுதுறை: காஸ்ட்லி மொபைல் வாங்கிய கணவன்.. தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி மனைவி!

மேலும், அவரது வயிற்றில் இருந்த குழந்தையும் உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் குத்தாலம் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்குப்பதிவு செய்து சூர்யா தற்கொலை செய்து கொண்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிலம்பரசன் சூர்யா தம்பதியினருக்கு திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் மட்டுமே ஆவதால் ஆர்டிஓ விசாரணைக்கு குத்தாலம் காவல்துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். சூர்யா தற்கொலைக்கு செல்போன் பிரச்னை தான் காரணமா அல்லது வேறு ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென சூர்யா குடும்பத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். குடும்பத் தகராறில் நிறைமாத கர்ப்பிணி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மயிலாடுதுறை: காஸ்ட்லி மொபைல் வாங்கிய கணவன்.. தற்கொலை செய்துகொண்ட கர்ப்பிணி மனைவி!

எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 

SBI Accidental Coverage: விபத்து காப்பீடு ரூ.2 லட்சம்.. எஸ்பிஐ புதிய அறிவிப்பு - விவரம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Breaking News LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி
Breaking News LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Akash Chopra on Rohit Sharma | வெளியேறும் ரோஹித்? இப்படி பண்ணிட்டீங்களே மும்பை! சோகத்தில் ரசிகர்கள்Fire Accident | மகளிர் விடுதியில் தீ விபத்து!பரிதாபமாக பிரிந்த உயிர்கள்..FRIDGE வெடித்து பயங்கரம்Jayam Ravi Divorce | Jeeva Car Accident | விபத்தில் சிக்கிய கார்!  டென்ஷன் ஆன ஜீவா! ஷாக் சம்பவம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Sitaram Yechury: மறைந்த சீதாராம் யெச்சூரி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!
Breaking News LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி
Breaking News LIVE: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் - பேச்சுவார்த்தை தோல்வி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
சென்னை விமானநிலையத்தில் வழிப்பறி செய்வதே குறிக்கோள் - கொதித்து எழுந்த மயிலாடுதுறை எம்பி..
டாப்செட்கோ, டாம்கோ கடன் திட்டங்களின் கீழ்  லோன் மேளா... தேனி மக்களே நாளை மறக்காதீங்க
டாப்செட்கோ, டாம்கோ கடன் திட்டங்களின் கீழ் லோன் மேளா... தேனி மக்களே நாளை மறக்காதீங்க
PM Modi - Tamilnadu: அக்.2 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.? எதற்காக தெரியுமா.?
PM Modi - Tamilnadu: அக்.2 ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி.? எதற்காக தெரியுமா.?
Virat Kohli: சென்னை மண்ணில்! 147 ஆண்டுகால கிரிக்கெட்டில் புது சகாப்தம் படைக்கப்போகும் கிங் கோலி!
Virat Kohli: சென்னை மண்ணில்! 147 ஆண்டுகால கிரிக்கெட்டில் புது சகாப்தம் படைக்கப்போகும் கிங் கோலி!
IND vs BAN Test Series: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி..அதே முனைப்பில் களமிறங்கும் வங்கதேசம்! முக்கிய வீரர் மிஸ்ஸிங்
IND vs BAN Test Series: பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி..அதே முனைப்பில் களமிறங்கும் வங்கதேசம்! முக்கிய வீரர் மிஸ்ஸிங்
Embed widget