மேலும் அறிய

வந்திடுச்சு பொங்கல்... கரும்பு, மஞ்சள் பொருள்கள் விற்பனை அமோகம்

Pongal 2025: ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது பொதுமக்கள் பொங்கல் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர்.

தஞ்சாவூர்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தஞ்சாவூரில் பொங்கல் கரும்பு உட்பட பொருள்கள் விற்பனை மும்முரம் அடைந்துள்ளது.

தமிழர்களின் முக்கிய பண்டிகைகளுள் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும். இந்த பண்டிகையில் தான் தமிழர்களின் பாரம்பரியம் ஒவ்வொன்றாக வெளிவரும். தமிழ்நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையில் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். போகிப் பண்டிகை, பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சிறப்புடன் இந்த பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழாவின் போது பொதுமக்கள் பொங்கல் பொருட்களை மூன்று நாட்களுக்கு முன்பே வாங்க தொடங்குவர். அதில் கோலமாவு, மண் பானைகள், கரும்பு, மஞ்சள் கொத்துகள், வெல்லம், மளிகைப் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றை வாங்கி மகிழ்ச்சியாக பொங்கல் பண்டிகையை கொண்டாடுவார்கள்.

பெரும்பாலும் நகரங்களை விட கிராமங்களில் பொங்கல் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவதும் வழக்கம். தஞ்சையிலும் பொங்கல் பொருட்களை  வியாபாரிகள் விற்கத் தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வத்தோடு வாங்கி வருகின்றனர்.


வந்திடுச்சு பொங்கல்... கரும்பு, மஞ்சள் பொருள்கள் விற்பனை அமோகம்

தஞ்சை சிவகங்கை பூங்கா, கீழவாசல் நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் கரும்புகள் மஞ்சள் கொத்து இஞ்சி கொத்து சவுக்கு கட்டு போன்றவை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கரும்பு ஒரு கட்டு ரூ. 350 முதல் 400 வரையிலும், மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து ஜோடி ரூ.50 முதல் ரூ.100 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் ஒரு கட்டு சவுக்கு ரூ. 50க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.

அதில் முக்கியமாக தஞ்சை நகரத்தில் கீழவாசல் பகுதியில் பொங்கலுக்கு தேவையான பொருட்களை வியாபாரிகள்  விற்பனை செய்து வருகின்றனர். இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொதுமக்களின் வரத்து அதிகமாக உள்ளது. பானைகள், கரும்புகளின் விலை சற்று உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் குறைந்த அளவிலே வாங்குகின்றனர்.

கோலமாவு, மஞ்சள் கொத்து ஆகிய பொருட்களையும் அதிக அளவில் ஆர்வத்துடன் பொதுமக்கள் வாங்க தொடங்கி தொடங்கி உள்ளனர். நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் இன்னும் அதிகம் விற்பனை இருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலை மையப்பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தைக்கு தஞ்சையை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து தோட்ட சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் காய்கறிகளை தினசரி அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். உழவர் சந்தைக்கு திருவையாறு, கீழதிருப்பந்துருத்தி, நடுக்காவேரி, வளம்பக்குடி, மேல உத்தமநல்லூர், ஈச்சங்குடி, பொன்னாவரை, நாயக்கர் பட்டி, வேங்கராயன் குடிகாடு உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் வாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் தாங்கள் உற்பத்தி செய்யும் வாழை இலை, வாழைத்தார்களை மினி வேனில் ஏற்றி வந்து உழவர் சந்தையில் விற்பனைக்காக குவிந்து வைத்துள்ளனர்.

தற்போது விவசாயிகள் கொண்டு வந்துள்ள வாழைத்தார்கள் நன்றாக முற்றிய நிலையில் உள்ளதால் இன்னும் ஒருசில தினங்களில் பழுத்துவிடும். வாழைத்தார் அதிக அளவில் இந்த ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளதால் விலை குறைவாக விற்கப்படலாம் என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Train Attack | “அய்யோ அடிக்காதீங்கம்மா” மூதாட்டியை தாக்கிய பெண்கள்! ரயிலில் நடந்த கொடூரம்!
Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: “நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
“நானும் ஒரு விவசாயி தான்“ தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைப் போல் அடித்துவிட்ட ட்ரம்ப் - எதற்காக தெரியுமா.?
Iran on Nuclear Talks: “எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
“எங்கள அடிக்க மாட்டோம்னு சென்னாதான்...“ - அந்த விஷயத்துக்கும் அனுமதி வேணும்; ஈரான் சொல்வது என்ன.?
Trump on Tariff Deadline: வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
வரி விதிப்பு; கால அவகாசத்த நீட்டிக்கிற எண்ணம் இல்ல, ஆனா இத செய்வேன் - ட்ரம்ப் கூறியது என்ன.?
Nainar Questions CM: காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
காவல்நிலைய மரணங்களை வேடிக்கை பார்ப்பதுதான் முதல்வரின் வேலையா.? நயினார் நாகேந்திரன் சரமாரி கேள்வி
Sivaganga Ajith Death Case: சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
சிவகங்கை காவலாளி அஜித்குமார் லாக்-அப் மரண வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றம்; டிஜிபி உத்தரவு
Velachery MRTS Update: அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்.!! நவம்பர்ல பறக்கும் ரயில் சேவை தொடங்குது, எங்க தெரியுமா.?
Aadhav Arjuna : ‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
‘புதுச்சேரி சென்ற ஆதவ் அர்ஜூனா’ போப்பா தம்பி என்று திருப்பி அனுப்பிய ரங்கசாமி..!
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Anbumani vs Ramadoss: அன்புமணி - ராமதாஸ் மல்லுகட்டு; சமாதான புறாவாக மாறும் அதிமுக, பாஜக! பாமக பஞ்சாயத்து முடியுமா?
Embed widget