மேலும் அறிய

மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் போலீசார் குவிப்பு - காரணம் என்ன..?

வாரணாசி ரயிலை மயிலாடுதுறையில் இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மறிக்க முயல்வதாக வந்த செய்தியை தொடர்ந்து ஏராளமான போலீசார் ரயில்வே நிலையத்தில் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்காக ராமேஸ்வரத்தில் இருந்து பனாரஸ் செல்லும் ரயில் மயிலாடுதுறை வழியே வியாழக்கிழமைகள் தோறும் இயக்கப்பட்டு வருகிறது. காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஆர்எஸ்எஸ் சிந்தனையுடன் நடைபெறுவதாக கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக, இந்திய மாணவர் சங்கம் அமைப்பினர் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட போவதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. 


மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் போலீசார் குவிப்பு - காரணம் என்ன..?

இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் நான்கு காவல்துறை ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் காலை குவிக்கப்பட்டனர். ரயில்வே நிலைய நுழைவாயில் பகுதி, பார்சல் ஆபீஸ் பகுதி, மறையூர் ரயில்வே கேட் பகுதி, மாப்படுகை ரயில்வே கேட் பகுதி மற்றும் இருப்பு பாதையிலும்  பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் போலீசார் குவிப்பு - காரணம் என்ன..?

மேலும், ரயில்வே காவல்துறையினர் மற்றும் இருப்பு பாதை காவல்துறையினர் ஆகியோர் ரயில் நிலைய வளாகத்திற்குள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதேபோன்று ரயில் பெட்டிகளிலும் ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் பாதுகாப்பு அளித்தனர். மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் இரண்டு புறங்களிலும் காவல்துறையினர் நிற்கவைக்கப்பட்டு வேறு யாரும் உள்ளே நுழையாதபடி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. இதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்  புறப்பட்டுச் சென்ற பின்னரும் காவல்துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


மாற்றுத்திறனாளிகளின் 2016 புதிய சட்டத்தை வரையறை செய்து இதுவரை அமல்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மக்கள் மன்றம் என்ற நிகழ்வை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் மக்கள் மன்றம் நடத்தி மத்திய அரசு மீது குற்றப்பத்திரிக்கை  தாக்கல் செய்தனர். மாற்றுத்திறனாளிகளின் 2016 புதிய சட்டத்தை வரையறு செய்து இதுவரை அமல்படுத்தாமல் இருப்பதையும், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை வழங்காமல் ஐ.நா உடன்படிக்கைகளை மதிக்காமலும் மாற்றுத் திறனாளிகளுக்கான நிதியை குறைத்துக் கொண்டே வருவதையும், 


மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் போலீசார் குவிப்பு - காரணம் என்ன..?

இவர்களுக்கான  இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்தாமல் இருப்பதை கண்டித்து  நடைபெற்ற மக்கள் மன்ற நடுவர்கள் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் உட்பட்ட தலைவர் கணேசன் ஆகியோரிடம் சிஐடியு மாவட்ட செயலாளர் மாரியப்பன் உள்ளிட்ட 5 பேர் மத்திய அரசு மீது வழக்கு தொடுத்து  வாதங்களை முன் வைத்தனர். வழக்கை மறுத்து வாதங்கள் வழக்காடினர். உடனடியாக மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். இந்த நிகழ்வில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர்.

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget