மேலும் அறிய

குறைதீர் நாளில் குவிந்த மனுக்கள்... தஞ்சை கலெக்டர் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் 648 மனுக்களை பெற்றுக் கொண்டார் கலெக்டர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது. இதில் 648 மனுக்களை பெற்ற கலெக்டர் அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குறைதீர் கூட்டத்தில் 648 மனுக்கள் குவிந்தன

இதில் இலவச வீட்டுமனைப் பட்டா. முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 648 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் உரிய சம்பந்தப்பட்ட அவர்களிடம் வழங்கினார்கள். நடவடிக்கைகள் அலுவலர்களுக்கு உடனடியாக மாவட்ட இம்மனுக்கள் மீது மேற்கொள்ளுமாறு கலெக்டர் பிரியங்கா பங்கஜம் உத்தரவிட்டார்கள்.

மேலும், குவைத் நாட்டில் பணியில் உள்ள போது இறந்த, தஞ்சாவூர் மாவட்டம், பூதலுர் வட்டம், பாதிரக்குடி கிராமத்தைச் சேர்ந்த (லேட்) இளங்கோவன் கந்தசாமி என்பவருக்கு சேர வேண்டிய சட்டப்படியான நிலுவைத்தொகையான 20,84,491 மதிப்பிலான காசோலையை அவரது குடும்ப உறுப்பினர்களிடம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் வழங்கினார்.

இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், உதவி ஆட்சியர் (பயிற்சி) உத்கர்ஷ் குமார், அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தலைமை நிர்வாக மற்றும் இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி ஆணையர் (கலால்) ரவிச்சந்திரன்  மற்றும் அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

குத்தகை சாகுபடியில் மோசடி செய்தவர்கள் மீது புகார்

இந்த குறைதீர் கூட்டத்தில் குத்தகை சாகுபடி தொடர்பாக மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புள்ளமாங்குடி பகுதியை சேர்ந்த மூன்று பேர் மனு அளித்தனர். 

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா ஒன்பத்துவேலி அஞ்சல் புள்ளமாங்குடி பகுதியைச் சேர்ந்த சங்கர், ரவிச்சந்திரன் திரவியம் ஆகியோர் அளித்த மனுவில் கூறியதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, பண்டாரவடை, தெற்குத்தெரு பகுதியில் வசித்துவரும் அப்துல் ஜாப்பருக்கு சொந்தமான மேலசெம்மங்குடி பகுதியில் விவசாய நிலம் உள்ளது.  கடந்த 1976ம் ஆண்டிலிருந்து நாங்களும், எங்களது அப்பா கோவிந்தசாமியும், அவர் இறந்த பிறகு அவரது மகன்களாகிய பன்னீர்செல்வம், ரவிச்சந்திரன், திரவியம் நாங்கள் மூவரும் சேர்ந்து குத்தகை சாகுபடி செய்து வருகிறோம். 

இந்நிலையில் எங்களுக்கு தெரியாமல் அப்துல் ஜாப்பர் என்பவரின் வாரிசுகள், நாங்கள் குத்தகை சாகுபடி செய்து வந்த அப்துல் ஜப்பாருக்கு சொந்தமான  தஞ்சாவூர் மாவட்டம் மகர்நோம்புச்சாவடி, மிஷன் 3வது தெரு முகவரியில் வசித்து வரும், பாலஸ் அவர்களின் மகன் தங்ககுமார் என்பவர் எங்களுக்கு தெரியாமல் கிரயம் செய்து செய்துள்ளார். நாங்கள் நில உரிமையாளரின் வாரிசுகளான பீஜான்பீவி, நூர்ஜகான், சபுராஷீரின் ஆகிய மூவரிடமும், கேட்டபோது நீங்கள் குத்தகை சாகுபடி செய்த நிலத்தை யாரிடமும் விற்கவில்லை என்று கூறினார்கள்.

தங்ககுமார் என்பவர் நிலத்தை வாங்கும்போது நாங்கள் குத்தகை செய்த நிலத்தின் சர்வே நம்பருடன் சேர்த்து போலியாக பத்திரம் பதிவு செய்துள்ளனர். இது போன்ற நிலத்தினை மோசடி செய்த தங்ககுமார் மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்படும் நில உரிமையாளர்கள் மற்றும் அவருக்கு உதவியாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

“என் பையனை காப்பாத்துங்க”ரஷ்யாவில் கைதான மாணவன் கதறி அழும் கடலூர் பெற்றோர் Russia Ukraine War
Annamalai vs EPS |
Congress DMK Alliance | ”2026-ல் கூட்டணி ஆட்சிதான்”புயலை கிளப்பும் காங்கிரஸ் மீண்டும் வெடித்த மோதல்?
Spicejet Flight Women Fight : ’’சீட் பெல்ட் போட முடியாது’’PILOT அறைக்குள் சென்ற பெண்கள்அவசரமாக தரையிறங்கிய விமானம்
NDA Alliance | வெளியேற்றப்படும் OPS, TTV? எடப்பாடியை நம்பும் அமித்ஷா! வெளுத்து வாங்கிய புகழேந்தி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Anbumani: ஸ்டாலினுக்கு வன்னியர்கள் ஓட்டுதான் வேணும்.. சுயமரியாதையுடன் வாழக்கூடாது - அன்புமணி ஆவேசம்
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
Family Suicide: 5 வயசு பாப்பா, 3 குழந்தைகள்.. வீட்டில் அருகருகே கிடந்த 5 பிணங்கள் - குடும்பமாக தற்கொலை
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
கவலைக்கிடத்தில் கல்வி! இந்தியாவில் 90 ஆயிரம் அரசுப்பள்ளிகள் மூடல் - தமிழ்நாட்டில் மட்டும் இவ்வளவா?
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
ஊரே பார்க்க, சிஆர்பிஎஃப் வீரரை சரமாரியாக தாக்கிய பக்தர்கள் - சின்ன பையன் உதைக்கும் வீடியோ
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
பெண்களே வெட்கப்படும் அழகு.. இணையத்தை தெறிக்கவிட்ட லாலேட்டன்.. மெய்சிலிர்த்து போன ரசிகர்கள்
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
Kia Best Car: கியா பிராண்ட்னாலே இந்த கார் தான்.. ஒவ்வொரு மாசமும் குவியும் விற்பனை, அப்படி என்ன இருக்கு?
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
இளைய தளபதி பட்டம் என்னுடையது.. ஆனால் இப்போ அவர் தளபதி.. விஜய் அப்பா சொன்ன வார்த்தை
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
மோசடி புகாரில் சிக்கிய கணவர்.. நடிகை மஹாலட்சுமி என்ன சொல்றாங்க தெரியுமா?
Embed widget