மேலும் அறிய

பொதுத் தொகுப்பு முறையில் ஊதியம் வழங்குங்கள்... குருங்குளம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொது தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி பொதுத் தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. இது தமிழ்நாடு சர்க்கரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது, 1977-ல் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அற்புதாபுரத்தில் இருந்து இந்த சர்க்கரை ஆலைக்கு செல்ல வேண்டும். இது இப்பகுதியின் முக்கிய சர்க்கரை உற்பத்தி நிலையமாகும். இந்த ஆலை கரும்பு அரவை, சர்க்கரை உற்பத்தி மற்றும் உபபொருட்களான பாகஸ், மொலாசஸ் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது,


பொதுத் தொகுப்பு முறையில் ஊதியம் வழங்குங்கள்... குருங்குளம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த சர்க்கரை ஆலைக்கு தஞ்சாவூர், ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் கரும்புகளை உற்பத்தி செய்து அரவைக்காக அனுப்புகின்றனர். இந்த சர்க்கரை ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ராஜூரஞ்சன் தலைமையில் 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு அறிக்கை படி உயர் நீதிமன்றம் வழங்கிய பொது தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

கூட்டுக் குழு தலைவர் ராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், பணியாளர் சங்க செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பொதுத்தொகுப்பு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொதுத் தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும். 25 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த தீர்ப்பை அமல்படுத்தி முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராஜன் கூறுகையில், சர்க்கரை ஆலையில் நடைமுறையில் இருந்து வரும் இரட்டை முறை ஊதியத்தை களைக்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தி இன்று வரை எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

சர்க்கரைத் துறை ஆணையகமும் தமிழக அரசும் கருணை உள்ளத்தோடு எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பொதுத் தொகுப்பு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சர்க்கரைத் துறை ஆணையகமும், தமிழக அரசும் சீராய்வு மனுவை வாபஸ் பெற்று, எங்களது நியாயமான கோரிக்கையான இரட்டை முறை ஊதியத்தை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
ஈ சாலா கப் நமதே! RCB-யின் ஹாட்ரிக் சாதனை: WPL இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி - கடைசி நிமிட வீடியோ
ஈ சாலா கப் நமதே! RCB-யின் ஹாட்ரிக் சாதனை: WPL இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி - கடைசி நிமிட வீடியோ
WPL Final 2026: மரணக் காட்டு காட்டிய ஜெமிமா படை! ஆர்சிபி 204 ரன்கள் இலக்கு... மீண்டும் கோப்பையை தொடுவாரா ஸ்மிருதி
WPL Final 2026: மரணக் காட்டு காட்டிய ஜெமிமா படை! ஆர்சிபி 204 ரன்கள் இலக்கு... மீண்டும் கோப்பையை தொடுவாரா ஸ்மிருதி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Gold Price Drop Reason | மீண்டும் ஏறும் தங்கம் தலைகீழாய் மாற வாய்ப்பு பிப்ரவரியில் TWIST |Trump
US India | இந்தியா - அமெரிக்கா டீல்
Tirunelveli News | சமபந்தி விருந்தில் தீண்டாமை விரட்டப்பட்ட நரிக்குறவர் சிறுவர்கள் வெடித்த சர்ச்சை
US Trade Deal with India |
US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
WPL Final 2026: சரித்திரம் படைத்து RCB சாம்பியன், DC-க்கு நேர்ந்த சோகம்.. யாருக்கு என்ன விருது? எவ்வளவு பரிசு?
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
IND Vs Pak Ban: ”தேங்க்ஸ், பாகிஸ்தான்” வங்கதேசம் போட்ட போஸ்ட், கிரிக்கெட் இல்லை, மொத்தமும் அரசியல் தான்..
ஈ சாலா கப் நமதே! RCB-யின் ஹாட்ரிக் சாதனை: WPL இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி - கடைசி நிமிட வீடியோ
ஈ சாலா கப் நமதே! RCB-யின் ஹாட்ரிக் சாதனை: WPL இறுதிப்போட்டியில் த்ரில் வெற்றி - கடைசி நிமிட வீடியோ
WPL Final 2026: மரணக் காட்டு காட்டிய ஜெமிமா படை! ஆர்சிபி 204 ரன்கள் இலக்கு... மீண்டும் கோப்பையை தொடுவாரா ஸ்மிருதி
WPL Final 2026: மரணக் காட்டு காட்டிய ஜெமிமா படை! ஆர்சிபி 204 ரன்கள் இலக்கு... மீண்டும் கோப்பையை தொடுவாரா ஸ்மிருதி
பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
பிரதமர் மோடி பதிலுரை: நேற்று பேசாமல் போனவர் இன்று என்ன பேசினார்? - இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் குறித்து பரபரப்பு பேச்சு
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
அரசு கல்லூரிகளில் 426 விரிவுரையாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி? தகுதி, தேதி- முழு விவரம்!
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த திட்டம்; காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் சதி? அதிர்ச்சி குற்றச்சாட்டை முன்வைத்த சபாநாயகர்!
’’வெட்கக்கேடு; இதனால்தான் பிரதமருக்கு பயம்- நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?’’ ஜோதிமணி பரபரப்பு பதில்!
’’வெட்கக்கேடு; இதனால்தான் பிரதமருக்கு பயம்- நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?’’ ஜோதிமணி பரபரப்பு பதில்!
Embed widget