US Trade Deal with India | ட்ரம்ப் விரித்த வலை ரஷ்யா நட்பை முறிக்கும் இந்தியா? மோடி முடிவின் பின்னணி
இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை குறைத்ததற்காக, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்து பாராட்டு மழையை பொழிந்துள்ளார்.
பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இடையேயான தொலைபேசி உரையாடையலை தொடர்ந்து, இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை அமெரிக்கா குறைத்துள்ளது. வரிக்குறைப்பு உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இதற்கு ஈடாக அமெரிக்க பொருட்கள் மீதான வரிக்குறைப்பு மற்றும் வரி அல்லாத தடைகளை பிரதமர் மோடியின் அரசு குறைக்கும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், அமெரிக்காவின் வரிக்குறைப்பு நடவடிக்கைக்கு இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் நன்றி என தெரிவித்துள்ளார்.
ட்ரம்ப் உடனான தொலைபேசி உரையாடல் தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், “எனது அன்புக்குரிய நண்பர் டொனால்ட் ட்ரம்ப் உடனான இன்றைய பேச்சுவார்த்தை சிறப்பானதாக அமைந்தது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மீது இனி 18 சதவிகித வரியை மட்டுமே பெறும் என்பதில் பெரு மகிழ்ச்சி. இந்தவொரு அழகான அறிவிப்பிற்கு இந்தியாவின் 140 கோடி மக்கள் சார்பில் அதிபர் ட்ரம்பிற்கு மிகப்பெரிய நன்றி. இரண்டு பெரிய பொருளாதார நாடுகளும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து பணியாற்றுவது, நமது மக்களுக்கும் பயனளிக்கும் மற்றும் இரண்டு தரப்பிலும் பலனளிக்கக் கூடிய கூட்டாண்மைக்கான மிகப்பெரிய அளவிலான வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும்.
சர்வதேச அமைதி, நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சிக்கு அதிபர் ட்ரம்பின் தலைமைத்துவம் மிகவும் முக்கியமானது. இதுவரை இல்லாத புதிய உச்சத்திற்கு இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவை கொண்டு செல்ல, ட்ரம்புடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்பாத்து கொண்டிருக்கிறேன்” என பிரதமர் மோடி தனது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.






















