மேலும் அறிய

பொதுத் தொகுப்பு முறையில் ஊதியம் வழங்குங்கள்... குருங்குளம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொது தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி பொதுத் தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. இது தமிழ்நாடு சர்க்கரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது, 1977-ல் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அற்புதாபுரத்தில் இருந்து இந்த சர்க்கரை ஆலைக்கு செல்ல வேண்டும். இது இப்பகுதியின் முக்கிய சர்க்கரை உற்பத்தி நிலையமாகும். இந்த ஆலை கரும்பு அரவை, சர்க்கரை உற்பத்தி மற்றும் உபபொருட்களான பாகஸ், மொலாசஸ் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது,


பொதுத் தொகுப்பு முறையில் ஊதியம் வழங்குங்கள்... குருங்குளம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த சர்க்கரை ஆலைக்கு தஞ்சாவூர், ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் கரும்புகளை உற்பத்தி செய்து அரவைக்காக அனுப்புகின்றனர். இந்த சர்க்கரை ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ராஜூரஞ்சன் தலைமையில் 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு அறிக்கை படி உயர் நீதிமன்றம் வழங்கிய பொது தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

கூட்டுக் குழு தலைவர் ராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், பணியாளர் சங்க செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பொதுத்தொகுப்பு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொதுத் தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும். 25 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த தீர்ப்பை அமல்படுத்தி முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராஜன் கூறுகையில், சர்க்கரை ஆலையில் நடைமுறையில் இருந்து வரும் இரட்டை முறை ஊதியத்தை களைக்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தி இன்று வரை எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

சர்க்கரைத் துறை ஆணையகமும் தமிழக அரசும் கருணை உள்ளத்தோடு எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பொதுத் தொகுப்பு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சர்க்கரைத் துறை ஆணையகமும், தமிழக அரசும் சீராய்வு மனுவை வாபஸ் பெற்று, எங்களது நியாயமான கோரிக்கையான இரட்டை முறை ஊதியத்தை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
பல சுவைகள் சேர்ந்த சங்கமம்… தஞ்சை மணம் வீசும் கதம்ப சாதம்!
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
தஞ்சை பெரிய கோயிலில் மீண்டும் யானை பவனி வருமா? எதிர்பார்ப்பு நிறைவேறுமா?
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
அன்று முதல் இன்று வரை: தவாலா அடையின் சுவையான வரலாறு!
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
தஞ்சாவூர் உணவகத்தில் ஏ.சி. காஸ் சிலிண்டர் வெடித்த விபத்து... மெக்கானிக்கும் பலி
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

MK Stalin Phone call |திருவாரூர் பேருந்து விபத்து..MLA-வுக்கு ஸ்டாலின் PHONE CALL
Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
PMK: மத்திய அமைச்சர் பதவி வேணும்.. பாஜக-விடம் டிமாண்ட் செய்யும் அன்புமணி?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
Petrol Diesel Taxes: காஷ்மீர் முதல் தமிழ்நாடு வரை! பெட்ரோலுக்கு எந்த மாநிலம் எவ்வளவு வரி போடுது?
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
அரசு மருத்துவமனையில் சிகிச்சை.. அம்மா உணவகத்தில் மதிய உணவு - தவெக அமைச்சர் காட்டிய எளிமை
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
புழல் சிறையில் 3 மணி நேர ஆய்வு !! போதைப் பொருள் , செல்போன் பயன்பாட்டுக்கு அரசு முற்றுப் புள்ளி
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
IPL 2026: எலிமினேட்டருக்கு செல்லுமா ராஜஸ்தான்? முட்டுக்கட்டை போடுமா மும்பை?
Minister Keerthana : வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
வாய்கிழியே பேசிட்டு இப்போ இப்படி சிரிக்கிறீங்களே.! அமைச்சர் கீர்த்தனாவை ரவுண்டு கட்டும் நெட்டிசன்கள்
DMK ADMK ED: லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
லாக்கான கழகங்கள்..! 22 மாஜி அமைச்சர்களை குறிவைத்த ED,சொத்து டூ ஊழல் - லிஸ்டில் யார் யார் தெரியுமா?
DMK Cong: ”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
”மாட்டிக்கிட்ட பங்கு” மாஸ்க் போட்டுட்டு நாடகமா போடுறீங்க- திமுகவை லெஃப்ட் ரைட் வாங்கிய மாணிக்கம் தாக்கூர்
Embed widget