மேலும் அறிய

பொதுத் தொகுப்பு முறையில் ஊதியம் வழங்குங்கள்... குருங்குளம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொது தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர்: சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி பொதுத் தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் குருங்குளத்தில் அமைந்துள்ளது அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை. இது தமிழ்நாடு சர்க்கரை கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது, 1977-ல் தொடங்கப்பட்டது. தஞ்சாவூர்-புதுக்கோட்டை சாலையில் அற்புதாபுரத்தில் இருந்து இந்த சர்க்கரை ஆலைக்கு செல்ல வேண்டும். இது இப்பகுதியின் முக்கிய சர்க்கரை உற்பத்தி நிலையமாகும். இந்த ஆலை கரும்பு அரவை, சர்க்கரை உற்பத்தி மற்றும் உபபொருட்களான பாகஸ், மொலாசஸ் தயாரிப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது,


பொதுத் தொகுப்பு முறையில் ஊதியம் வழங்குங்கள்... குருங்குளம் சர்க்கரை ஆலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

இந்த சர்க்கரை ஆலைக்கு தஞ்சாவூர், ஒரத்தநாடு, வல்லம், கந்தர்வக்கோட்டை, பட்டுக்கோட்டை போன்ற பகுதிகளில் இருந்து விவசாயிகள் கரும்புகளை உற்பத்தி செய்து அரவைக்காக அனுப்புகின்றனர். இந்த சர்க்கரை ஆலையில் ஏராளமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ராஜூரஞ்சன் தலைமையில் 2011ம் ஆண்டு அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு அறிக்கை படி உயர் நீதிமன்றம் வழங்கிய பொது தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் குருங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலை முன்பு ஆர்பாட்டம் நடந்தது.

கூட்டுக் குழு தலைவர் ராஜன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமை வகித்தனர். அண்ணா தொழிற்சங்க செயலாளர் ரமேஷ், பணியாளர் சங்க செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின்படி பொதுத்தொகுப்பு ஊழியர்களுக்கு வழங்குவது போல் ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பொதுத் தொகுப்பு ஊதிய முறையில் ஊதியம் வழங்க வேண்டும். 25 ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் இந்த தீர்ப்பை அமல்படுத்தி முறையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தோஷங்கள் எழுப்பப்பட்டன.

இதில் சர்க்கரை ஆலையில் பணியாற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். பின்னர் கூட்டு நடவடிக்கை குழு தலைவர் ராஜன் கூறுகையில், சர்க்கரை ஆலையில் நடைமுறையில் இருந்து வரும் இரட்டை முறை ஊதியத்தை களைக்க வேண்டும் என்று பல கட்ட போராட்டங்கள் நடத்தி இன்று வரை எங்களுக்கு தீர்வு கிடைக்கவில்லை.

சர்க்கரைத் துறை ஆணையகமும் தமிழக அரசும் கருணை உள்ளத்தோடு எங்களது நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். பல ஆண்டுகளாக குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு பொதுத் தொகுப்பு ஊதியத்தை அமல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சர்க்கரைத் துறை ஆணையகமும், தமிழக அரசும் சீராய்வு மனுவை வாபஸ் பெற்று, எங்களது நியாயமான கோரிக்கையான இரட்டை முறை ஊதியத்தை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்களின் குடும்பங்களின் நலனை கருத்தில் கொண்டு எங்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

வெல்ல ஆலைகள் மூடல்... கரும்பு விவசாயம் இனிக்குமா? அய்யம்பேட்டை விவசாயிகள் கவலை
வெல்ல ஆலைகள் மூடல்... கரும்பு விவசாயம் இனிக்குமா? அய்யம்பேட்டை விவசாயிகள் கவலை
602 மனுக்கள்... யார் யாருக்கு என்ன உதவி? மக்கள் குறைதீர் கூட்டத்தில் தஞ்சை கலெக்டர் அதிரடி
602 மனுக்கள்... யார் யாருக்கு என்ன உதவி? மக்கள் குறைதீர் கூட்டத்தில் தஞ்சை கலெக்டர் அதிரடி
மிலாடி நபி நாளில் டாஸ்மாக் கடைகள் மூடல்: தஞ்சையில் மதுபான விற்பனைக்கு தடை
மிலாடி நபி நாளில் டாஸ்மாக் கடைகள் மூடல்: தஞ்சையில் மதுபான விற்பனைக்கு தடை
“ஓவியம் முதல் மணல் சிற்பம் வரை... மாணவர்களின் திறமையை பார்த்து அசந்த கலெக்டர்”
“ஓவியம் முதல் மணல் சிற்பம் வரை... மாணவர்களின் திறமையை பார்த்து அசந்த கலெக்டர்”

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
அமெரிக்கா-ஈரான் சண்டையால் வந்த வினை.! 4 இந்திய நிறுவனங்களுக்கு ஆப்பு வைத்த ட்ரம்ப்; நடந்தது என்ன.?
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
Parandur Airport: கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம்; பறந்து போனதா பல்லாயிரம் கோடி? திமுக-வுக்கு தவெக கேள்வி
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
TET விலக்கு தீர்மானம்: நிரந்தர பாதுகாப்புக்கு நாடாளுமன்ற சட்டத் திருத்தமே அவசியம்- ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை
Mojtaba Khamenei Video: ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ட்ரம்ப்பை அலற வைத்த ஈரான்.! மொஜ்தபா கமேனியின் முதல் பரபரப்பு வீடியோ; ஈரானியர்கள் குஷி
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
ஜி ஸ்கொயர் மாப்பிள்ளை.. லாட்டரி மருமகன்.! யாருக்காக விமான நிலையம்.? திமுக- தவெக காரசார மோதல்
Property Registration : பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
பத்திரப் பதிவு செய்யப் போறீங்களா.? ஆகஸ்ட் 27-ல் பொதுமக்களுக்கு சூப்பர் வசதி- என்ன தெரியுமா.?
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
விவசாயிகளுக்கு வந்தது செம குட் நியூஸ்! 85% நிறைவடைந்த திருக்கோவிலூர் அணைக்கட்டு!
Minister Keerthana: பரந்தூர் சரி, மீனம்பாக்கத்தை DMK 5 வருடம் கிடப்பில் போட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா நறுக் கேள்வி
பரந்தூர் சரி, மீனம்பாக்கத்தை DMK 5 வருடம் கிடப்பில் போட்டது ஏன்? அமைச்சர் கீர்த்தனா நறுக் கேள்வி
Embed widget