மேலும் அறிய

மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு போட்டி: முதல் மூன்று இடங்களை பிடித்த நாடோடி சமூக மாணவர்கள்!

மயிலாடுதுறையில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட பள்ளி மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்து நாடோடி இன மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

பெரும்பாலும் நரிக்குறவர்கள் (ஆதியன்) மக்கள் கல்வியறிவு பெறாமல் நாடோடிகளாகவே தங்களின் வாழ்வை நடத்தி வருகின்றனர். இதனால் அவர்களின் குழந்தைகளும் பள்ளிக்குச் செல்லாமல் பொதுமக்களிடம் யாசகம் கேட்டு வாழ்ந்து வரும் சூழல் நிலவுகிறது. ஒரு சிலர் கல்வி கற்க விரும்பினாலும், இவர்களுக்கு அரசு சான்றிதழ்கள் கிடைப்பதில்லை சிக்கல் உள்ளதால் கல்வி என்பது இவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் திருவிழந்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பல்லவராயன்பேட்டையில் நரிக்குறவ சமுதாய மக்கள் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அங்குள்ள நரிக்குறவர் காலனியில் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.  


மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு போட்டி: முதல் மூன்று இடங்களை பிடித்த நாடோடி சமூக மாணவர்கள்!

நாடோடிகளாக சுற்றித்திரியும் இப்பகுதி நரிக்குறவர்கள் சமுதாய மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு கடந்த 2012-ஆம் ஆண்டு அக்சஸ் உண்டு உறைவிடப் பள்ளி அங்கு தொடங்கப்பட்டது. 10 மாணவர்களுடன் மட்டும் தொடங்கிய இப்பள்ளியில் தற்போது 120 க்கும் மேற்பட்ட நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு சேர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும்  இப்பள்ளியில் 2012- இல் படித்த மாணவர்கள் பலர் தற்போது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.  


மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு போட்டி: முதல் மூன்று இடங்களை பிடித்த நாடோடி சமூக மாணவர்கள்!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில்  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் 'இளைஞர் மற்றும் சூழல்சார் மன்றம்" சார்பில் பல்வேறு தலைப்புகளில் பள்ளிகளுக்கு இடையே கட்டுரை போட்டிகள் நடத்தப்பட்டன. அந்த கட்டுரைப் போட்டியில், உண்டு உறைவிட பள்ளியில் பயிலும் மாணவர்கள் சந்தோஷ், வெண்ணிலா, சக்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து சாதனை படைத்துள்ளனர். கல்வியில் மட்டுமின்றி, இப்பள்ளி மாணவர்கள் ஒவ்வொருவரும் ஓவியம், யோகா, சிலம்பம் போன்ற பல்வேறு துறைகளில் தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு பல போட்டிகளிலும் கலந்துக்கொண்டு இப்பள்ளி மாணவர்கள் ஏராளமான பரிசுகளை குவித்து வருகின்றனர். பின் தங்கியுள்ள நரிக்குறவ மாணவர்களுக்கு இப்பள்ளி அளித்து வரும் ஊக்கம் பலரது பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.


மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டு போட்டி: முதல் மூன்று இடங்களை பிடித்த நாடோடி சமூக மாணவர்கள்!

மேலும் நாடோடி இனமான இவர்களின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டுமெனில் கல்வி ஒன்றே அதற்கான ஒரே வழி என்பதால் தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டிலுள்ள நரிக்குறவர்கள் இன மக்கள் குறித்து ஆய்வு செய்து அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி, வருமானம், இருப்பிடம் உள்ளிட்ட சான்றிதழ்கள் வாங்கும் சிக்கல்களை போக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் எண்ணற்ற பழங்குடி மக்கள் கல்வி வெளிச்சம் கிடைக்காமல் இருந்து வருகின்றனர். இவர்களுக்கு தமிழ்நாடு அரசு எளிதில் கல்வி கற்க வழிவகை செய்தால் மயிலாடுதுறையில் மாணவர்கள் சாதித்தது போன்று தமிழ்நாடு முழுவதும் பல சாதனை மாணவர்களை உருவாக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
ஆசிரியர் தற்கொலை: 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் - இபிஎஸ் வலியுறுத்தல்
Video: சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
சபரிமலை மகரஜோதி தரிசன வீடியோ... விண்ணைப்பிளந்த ஐயப்ப பக்தர்களின் சரண கோஷம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை: அரசு பொறுப்பேற்க வேண்டும்! அன்புமணி ராமதாஸ் கண்டனம்
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
இந்தியா vs நியூசிலாந்து: ராகுலின் அதிரடி சதம்! 285 ரன்கள் இலக்குடன் நியூசிலாந்துக்கு சவால்!
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
பராசக்தி சர்ச்சை: காங்கிரஸின் எதிர்ப்பை பயன்படுத்திக்கொண்ட பாஜக? - திமுக செந்தில்குமார் பரபரப்பு குற்றச்சாட்டு
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Mattu Pongal Kolam: மாட்டுப் பொங்கலுக்கு என்ன கோலம் போடலாம்..? இந்த டிசைன் ட்ரை பண்ணுங்க
Iran Erfan Soltani: ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம்; விசாரணை இன்றி தூக்கு; தண்டனை பெற்ற எர்ஃபான் சோல்தானி யார்.?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
பொங்கலுக்கு Maruti Baleno வாங்கலாமா? ஆஃபரை அள்ளித் தந்த மாருதி சுசுகி - எவ்வளவு?
Embed widget