மேலும் அறிய

ஒரே கொள்கை கொண்ட எங்களை யாராலும் பிரிக்க முடியாது: திருமாவளவன் உறுதி

எங்களுக்குள் எந்த ஒரு பிரிவினையும் ஏற்படாது. நீங்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும், எங்களை பிரித்தாலும் எண்ணம் தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது. 

தஞ்சாவூர்: திமுகவும், விசிகவும் ஒரே கொள்கை கொண்ட கட்சிகள் எங்களை யாராலும் பிரிக்க முடியாது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில் கட்சி நிர்வாகி இல்ல படத்திறப்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற திருமாவளவன் பேசியதாவது: திமுகவுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் ஒரு இணக்கமான உறவு உள்ளது. இதுதான் பல பேருக்கு வயித்தெரிச்சல், எவ்வளவு சொன்னாலும் திமுகவையும் விடுதலை சிறுத்தையையும் பிரிக்க முடியலையே என்கின்ற  மனக்குமுறல் சிலருக்கு உள்ளது.

இதற்காக விடுதலை சிறுத்தை கட்சியை  இழிவாக விமர்சிப்பது, இரண்டு சீட்டுக்கும், மூன்று சீட்டுக்கும் முட்டுக் கொடுக்கும் கட்சி என்று, கேவலமாக பேசுவது. அதிலே அவர்களுக்கு ஒரு ஆனந்தம். திருமாவளவனுக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு எதிராக விமர்சனம் செய்தால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆத்திரப்படுவார்கள், ஆகவே இரண்டு கட்சிகளுக்கு இடையிலான உறவே நாம் சிதைத்து விடலாம் என்று பல பேர் எண்ணுகிறார்கள் அது ஒருபோதும் நடக்காது.

ஏனென்றால், நாங்கள் தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், காரல் மார்க்ஸ் கொள்கையை பின்பற்றி வருகின்றோம். அதே கொள்கைதான் தான் திமுகவும் பின்பற்றி வருவதால், எங்களுக்குள் எந்த ஒரு பிரிவினையும் ஏற்படாது. நீங்கள் எவ்வளவு சூழ்ச்சி செய்தாலும், எங்களை பிரித்தாலும் எண்ணம் தமிழகத்தில் ஒருபோதும் நடக்காது. 

இன்னும் ஆறு மாதங்கள் மட்டுமே உள்ளது தேர்தல் நடைபெற, இதற்கு எதிர்க்கட்சியில் உள்ளவர்கள் மிகத் கடுமையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் உள்ள உறவினை பிரித்தாக வேண்டும் என்று பல முயற்சியை மேற்கொள்வார்கள். திட்டமிட்டு அவதூறுகளை பரப்புவார்கள், நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நமது கூட்டணியை பற்றி யார் வேண்டுமானாலும் எதைப்பற்றினாலும் பேசிட்டு போகட்டும் அதற்கு எதிர்வினை ஆற்றுகிறோம் என்ற பெயரில், நாம் அவர்கள் விரிக்கும் வலையில் சிக்க கூடாது. நம்முடைய குறிக்கோள் எல்லாம்  எத்தனை அவதூறுகளை பரப்பினாலும், சிறுத்தைகள் கூட்டணியில் தருமத்தை விட்டு என்றும் மாறக்கூடாது. இந்தக் கூட்டணியில் எத்தகைய கட்சி விலகினாலும் எந்த பாதிப்பும் ஏற்படாது.

நாம் பேசும் அரசியலும், திமுக பேசும் அரசியல் ஒன்று.  பாஜகவின் எண்ணங்கள் தமிழகத்தில் கழகங்கள் இல்லாத கட்சியை உருவாக்க வேண்டும் என்பது.  திமுக, அதிமுக இரண்டு கழகங்களையும் பாஜகவுக்கு பிடிக்காது, முதலில் அதிமுகவை கைப்பற்றி பிறகு திமுக கட்சியை நாம் வென்று விடலாம் என்று எண்ணுகிறது. ஆகையால் நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வரும் தேர்தலில் நாம் கூட்டணி வெற்றி பெற அயராது பாடுபட வேண்டும் என்றார்.

தலைப்பு செய்திகள்

பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
பயணிகள் கவனத்திற்கு... நெல்லை - சென்னை சூப்பர் ஃபாஸ்ட் சிறப்பு ரயில்: இன்று முதல் முன்பதிவு தொடக்கம்!
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
சேதமான பாசன வாய்க்கால் படித்துறையால் சோகம்: உடன் சீரமைக்க ஆலக்குடி பொதுமக்கள் வலியுறுத்தல்
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை: கும்பகோணம் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி சோதனை
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?
பம்பர் ஆஃபர்! 'உத்யமி மித்ரா' திட்டத்தில் ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம்... யாரெல்லாம் பெறலாம்?

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
தமிழகத்தின் எந்தெந்த மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
அயோத்தியை தொடர்ந்து அதிர்ச்சி... பத்ரிநாத், கேதர்நாத் கோயில்களில் பணம் கையாடல்.. விசாரணை தீவிரம்!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த திடீர் எச்சரிக்கை!
இன்று இரவு 10 மணி வரை ரொம்ப உஷார்..! தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
​
​"நீயா, நானா?" மது வாங்குவதில் வந்த சண்டை.. நண்பனை சேற்றில் அமுக்கிக் கொன்ற வாலிபர்..!
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
திமுக - அதிமுக கூட்டணி பேச்சு உண்மை தான்.. EX MLA சத்யபாமா மீண்டும் குற்றச்சாட்டு.. நடந்தது என்ன?
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
Senthil Balaji: செந்தில் பாலாஜி கைது உறுதி.. வீட்டுக்கே சென்ற போலீஸ்.. லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
CM Vijay: பனையூர் அலுவலகத்தில் விஜய்.. தவெகவில் இணைந்த திமுக எம்.பி. மகன்.. தொண்டர்கள் அதிர்ச்சி!
Embed widget