மேலும் அறிய

கொரோனாவால் தடைபட்ட அரசு விழாக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும் - அமைச்சர் சாமிநாதன்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் சாமிநாதன் கொரோனா கட்டுப்பாடுகளால் தடைபட்ட விழாக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மற்றும் சீர்காழி பகுதிகளில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக மயிலாடுதுறை நகராட்சிக்கு உள்பட்ட வரதாச்சாரியார் பூங்காவில் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு சிலை வைக்க பீடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை அமைச்சர் ஆய்வுசெய்தார். தொடர்ந்து, மாயூரம் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை அமையவுள்ள இடம், சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் பராமரிப்பு பணி ஆகியவற்றையும் நேரில் ஆய்வு செய்தார்.


கொரோனாவால் தடைபட்ட அரசு விழாக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும் - அமைச்சர் சாமிநாதன்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறுகையில், “மயிலாடுதுறையில் வரதாச்சாரியார் பூங்காவில் நடைபெற்றுவரும் மூவலூர் ராமாமிர்தம் அம்மையாருக்கு உருவச்சிலை அமைக்கும் பணி ஆய்வு செய்யப்பட்டது.  தொடர்ந்து,  மயிலாடுதுறை மாவட்ட நூலகம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணிமண்டபம் பராமரிப்பதற்கு ரூபாய் 24 லட்சத்தில்  திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்வர் ஒப்புதல் அளித்தவுடன் பணி தொடங்கப்படும். மாவட்ட நூலகம் அமைப்பதற்கு 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. சீர்காழி தமிழ் இசை மூவர் மணிமண்டபம் பராமறிப்புக்கு 47 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்க உள்ளது.


கொரோனாவால் தடைபட்ட அரசு விழாக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும் - அமைச்சர் சாமிநாதன்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பிறந்து வளர்ந்த தமிழிசை மூவர்களான மாரிமுத்தா பிள்ளை, அருணாச்சல கவிராயர், முத்து தாண்டவர் ஆகிய மூவரும் உலக அளவில் முதன் முதலில் இசையை வளர்த்தவர்கள், இவர்களுக்கு கடந்த 2010 - ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களால் மணிமண்டபம் கட்டப்பட்டது. அதன் பிறகு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழிசை மூவர் மணிமண்டபத்தை பராமரிக்காமல் பழுதடைந்து விட்டது, திமுக ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதால் அதனை பராமரிக்காமல் கிடப்பில் போடப்பட்டதால் கட்டிடம் முழுவதும் பழுதடைந்து காணப்படுகிறது, தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழையும் தமிழுக்காக போராடியர்களுக்கும் மணிமண்டபம் மற்றும் சிலைகள் அமைத்தும், அவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்” என்றார்.


கொரோனாவால் தடைபட்ட அரசு விழாக்கள் இனிவரும் காலங்களில் நடைபெறும் - அமைச்சர் சாமிநாதன்

உலக அளவில் தமிழிசையை வளர்த்த மூவர்களின் மணி மண்டபம் பழுதடைந்து கிடப்பதால், அதனை பராமரிப்பு செய்து புதுப்பிக்க ரூபாய் 47 லட்சம் நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து பணி தொடங்க உள்ள நிலையில் தற்போது தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் வந்து ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பணி குறித்து எடுத்துரைத்தார். மேலும்  கொரோனா காலக்கட்டத்தில் தடைப்பட்ட தமிழிசை மூவர் விழா உள்ளிட்ட பல விழாக்கள் இனி வரும் காலங்களில் நடைபெற வழிவகை செய்யப்படும் என்றார். அப்பொழுது பூம்புகார், சீர்காழி ,மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதாமுருகன், பன்னீர்செல்வம், ராஜ்குமார், சீர்காழி நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் மற்றும் அதிகாரிகள் உடனே இருந்தனர்

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchipuram Lady : ’’வீடு கட்ட விடமாட்றாங்க’’பெட்ரோலுடன் வந்த பெண்!Rajinikanth Hospitalized : மருத்துவமனையில் ரஜினிகாந்த்! நள்ளிரவில் திடீர் அட்மிட்!Udhayanidhi stalin Secretary | உதயநிதியின் செயலாளர் யார்? ரேஸில் முந்தும் Amudha! ஸ்டாலின் ஸ்கெட்ச்Vijay bussy anand |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
Rajinikanth : தலைவரு நிரந்தரம்...ரஜினி இரண்டு நாளில் வீடு திரும்புவார்..மருத்துவமனை அறிக்கை
LPG Cylinder Price Hike: எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
எரிவாயு சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: தீபாவளி வேற வருது.! உயரப்போகும் அத்தியாவசிய பொருட்கள்?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
WTC Final 2025: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி! இந்தியாவுக்கு இன்னும் எத்தனை வெற்றி தேவை?
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
அப்பா, நீங்கள் எப்போதும் என்னுடன் இருக்கிறீர்கள். நான் ஒருபோதும் தனியாக இல்லை : கனிமொழி கருணாநிதி எம்.பி.,
Tanushree Dutta : MeToo  குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
Tanushree Dutta : MeToo குற்றச்சாட்டில் சிக்கிய இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள்...பாலிவுட் நடிகை தனுஸ்ரீ தத்தா
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
வக்பு சட்ட திருத்த மசோதாவை கண்டித்து போராட்டம் - இஸ்லாமிய இயக்கங்கள் அறிவிப்பு
முதலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மதுஒழிப்பை நடைமுறைப்படுத்திவிட்டு  பின்னர் மதுஒழிப்பு மாநாட்டை நடத்துங்கள் -  அஸ்வத்தாமன் ஆவேசம்..!
குடும்பத்தோடு செல்பவரிடம் பிரச்சனை செய்ய திருமாவளவன் பயிற்சி கொடுத்து இருக்கிறாரா? - அஸ்வத்தாமன் 
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Udhayandhi Stalin : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து பூங்கொத்து வழங்கிய சிவகார்த்திகேயன்
Embed widget