மேலும் அறிய

நிலுவையில் உள்ள திட்டங்களை விரைந்து, தரமாக முடிக்கணும்... அனைத்து துறை அலுவலர்களுக்கு அமைச்சர் அட்வைஸ்

நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக, தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவுரை.

தஞ்சாவூர்: நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக, தரமாகவும் முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் அறிவுரை வழங்கினார்.

அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் தலைமையில், அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி, சட்டமன்ற உறுப்பினர்கள் துரை,சந்திரசேகரன் (திருவையாறு). டி.கே.ஜி.நீலமேகம், (தஞ்சாவூர்), அண்ணாதுரை  (பட்டுக்கோட்டை). மாநகராட்சி மேயர்கள் தஞ்சாவூர் சண்.இராமநாதன், கும்பகோணம் சரவணன் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் பாலகணேஷ், மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் மரு.அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்

கூட்டத்தில்  உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்ததாவது:  தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஆகியோரின் அறிவுறுத்தலுக்கிணங்க, அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

இக்கூட்டத்தில் வருவாய்த் துறை. சமூக பாதுகாப்புத் திட்டம், உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தாட்கோ, சமூக நலத்துறை. மாவட்ட குழந்தைகள் நல அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, வேளாண்மைத் துறை, தோட்டக் கலைத் துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித் துறை, நகராட்சி நிர்வாகம், ஓருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், மகளிர் திட்டம், சத்துணவுத் திட்டம், கூட்டுறவுத் துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தொழிலாளர் நலத்துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை, நபார்டு, தமிழ்நாடு மின்சார வாரியம். தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரியம், மீன்வளத்துறை, சுற்றுலா, பண்பாடு மற்றும் இந்து சமய நலத்துறை. நூலகத் துறை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் போன்ற பல்வேறு துறை சார்ந்த நடைபெற்று வரும் பணிகள், முடிவுற்றப் பணிகள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் போன்ற பல்வேறு பொருள் குறித்து இக்கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.

பணிகளையும் விரைவாக தரமாக முடிக்கணும்

கூட்டத்தில் ஒன்றியக் குழுத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள் தங்களின் பகுதிகளுக்கு ஏற்ப கோரிக்கைகளை வைத்தார்கள். அதுமட்டுமின்றி அரசு அலுவலர்களும் தங்களின் திட்டப் பணிகளை விளக்கியதோடு துறைச் சார்ந்த கோரிக்கைகளையும் வைத்தார்கள். இன்றைய கூட்டத்தின் கோரிக்கைகள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அடுத்த ஆய்வுக் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். மேலும் நிலுவையில் உள்ள அனைத்து திட்டப் பணிகளையும் விரைவாக தரமாகவும் முடித்திட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

இதில் கும்பகோணம் சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன், வருவாய் கோட்டாட்சியர்கள் இலக்கியா (தஞ்சாவூர்), ஜெயஸ்ரீ (பட்டுக்கோட்டை) ஒன்றியக் குழுத் தலைவர்கள், பேரூராட்சித் தலைவர்கள் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Air show in Marina | கொடூர வெயில்! Traffic-ல் சிக்கிய ஆம்புலன்ஸ்கள்! அடுத்தடுத்து மயங்கிய மக்கள்Chennai Councillor Stalin | லஞ்சம் கேட்டாரா கவுன்சிலர்? திமுக தலைமை அதிரடி ஆக்‌ஷன்! நடந்தது என்ன?Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
Lalu Prasad Yadav: பண மோசடி வழக்கு - லாலு பிரசாத் யாதவ், மகன்களுக்கு ஜாமின் வழங்கிய நீதிமன்றம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
'மக்களைக் காக்க வேண்டியது அரசின் கடமை; உளவுத்துறை தோல்வி; கையலாகாத்தனம்'- ஈபிஎஸ் கடும் கண்டனம்
Chennai Air Show:
Chennai Air Show: "வெயில் கொடூரமாக இருந்தது! உயிரிழப்பில் அரசியல் வேண்டாம்" அமைச்சர் மா.சுப்பிரமணியன்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
Breaking News LIVE 7 Oct : சென்னை மெரினாவில் மட்டும் 18.5 டன் குப்பைகள் அகற்றம்
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
“டாஸ்மாக் மதுக் கடைகளை குறைக்கத் திட்டம்?” நாளைய அமைச்சரவை கூட்டத்தில் முக்கிய முடிவுகள்..!
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Chennai Airshow: சென்னை விமான சாகச உயிரிழப்பு; கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்! கனிமொழி அட்வைஸ்
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
Tamilnadu Round Up: அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்! மீண்டும் திறக்கப்பட்ட பள்ளிகள் - தமிழ்நாட்டில் இதுவரை!
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
சென்னை விமான சாகச நிகழ்ச்சி; உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு
Embed widget