![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட யானைகள் - நடந்தது என்ன?
மயிலாடுதுறையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோயில் விழாவில் மீண்டும் சந்தித்துக்கொண்ட யானைகள் ஒன்றோடு ஒன்று முகத்தை உரசிக் கொண்டும் துதிக்கையால் ஆரத்தழுவியும் முத்தமிட்டு உற்சாகமடைந்தது.
![இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட யானைகள் - நடந்தது என்ன? Mayiladuthurai temple elephants exchanged love TNN இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட யானைகள் - நடந்தது என்ன?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/22/0e1c5bad55712b6edb6662b3adc133391679476397398186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாயூரநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி சன்னதி அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் கும்பாபிஷேக விழா கடந்த 19 -ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு யாகசாலையில் வைத்து பூஜிப்பதற்காக மயிலாடுதுறை காவிரி கரையில் இருந்து கங்கை முதலான பல்வேறு ஆறுகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கடங்கள் மூன்று யானைகளின் மீது கொண்டுவரப்பட்டது.
மாயூரநாதர் அபயாம்பிகை யானை, திருவையாறு ஐயாரப்பர் கோயில் தர்மாம்பாள் யானை, திருக்கடையூர் அபிராமி யானை ஆகிய யானைகள் மீது புனித கடங்கள் ஊர்வலமாக மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை வந்தடைந்தது. புனித கடங்கள் யானை மீது இருந்து இறக்கப்பட்ட பின்னர் அருகருகே நின்ற மயிலாடுதுறை அபயாம்பிகை யானை திருவையாறு தர்மாம்பாள் யானை இரண்டும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சந்தித்துக் கொண்டதால் உற்சாகமடைந்தன.
Madras University Result: சென்னை பல்கலைக்கழகத் தேர்வு முடிவுகள் வெளியீடு - பார்ப்பது எப்படி?
யானைகள் புத்துணர்வு மறுவாழ்வு முகாம் நடைபெற்ற போது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்துக் கொண்ட இந்த இரண்டு யானைகளும் இன்று மீண்டும் சந்தித்துக் கொண்டதால் ஒன்றோடு ஒன்று முகத்தை உரசியும் துதிக்கையால் பிணைந்தும் ஆரத்தழுவி முத்தமிட்டு மகிழ்ச்சி அடைந்து குதூகலமிட்டனர். மகிழ்ச்சியின் உச்சமாக திருவையாறு யானை கர்ஜித்து முழக்கமிட்டது. யானை பாகன்கள் இரண்டு யானைகளை பிரிக்க முயற்சித்தும் தொடர்ந்து யானைகள் கொஞ்சி குலாவியது.
தொடர்ந்து இரண்டு யானைகளை யானை பாகன்கள் பைப்பில் இருந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து யானைகளுக்கு வெயிலின் தாக்கத்தை குறைத்தனர். அப்போதும் உற்சாகத்துடன் யானைகள் கொஞ்சி குழாவி உற்சாக குளியல் இட்டது பக்தர்களிடையே வியப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியது. ஏராளமான பக்தர்கள் யானைகளின் பாசப்பிணைப்பை செல்போனில் படம் பிடித்து மகிழ்ச்சியுடன் பார்த்து ரசித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)