மேலும் அறிய

சீர்காழி ஒன்றியங்களில் தரமற்ற வளர்ச்சி திட்ட பணிகள் - ஆட்சியர்  கேள்விக்கு பதில் இன்றி விழித்த அலுவலர்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஏ‌.பி‌.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்திற்கு உட்பட்ட வைத்தீஸ்வரன் கோயில், புங்கனூர், மருதங்குடி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை  மாவட்ட ஆட்சியர் ஏ‌.பி‌.மகாபாரதி இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் உள்ள நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் நியாயவிலை கடையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பித்தவர்களில் வங்கி கணக்கு  தொடங்காதவர்களுக்கு வங்கி கணக்கு தொடங்குவதற்கான முகாம் நடைபெறுவதை பார்வையிட்டு, விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். 


சீர்காழி ஒன்றியங்களில் தரமற்ற வளர்ச்சி திட்ட பணிகள் - ஆட்சியர்  கேள்விக்கு பதில் இன்றி விழித்த அலுவலர்கள்

தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, குழந்தைகளுடன் கலந்துரையாடினார். பின்னர், வைத்தீஸ்வரன்கோயில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார். 


சீர்காழி ஒன்றியங்களில் தரமற்ற வளர்ச்சி திட்ட பணிகள் - ஆட்சியர்  கேள்விக்கு பதில் இன்றி விழித்த அலுவலர்கள்

அதனைத் தொடர்ந்து, வைத்தீஸ்வரன்கோயில் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டு புறநோயாளிகளுக்கான பதிவு செய்யும் மையம், மருந்தகம், இரத்த பரிசோதனை பிரிவு, சித்த மருத்துவ பிரிவு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, தினசரி மருத்துவ சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை, மருந்தகத்தில் மருந்துகள் கையாளும் விவரங்கள் உள்ளிட்டவைகளை கேட்டறிந்தார். பின்னர், புங்கனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 27 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளின் தரத்தினை ஆய்வு செய்தார்.


சீர்காழி ஒன்றியங்களில் தரமற்ற வளர்ச்சி திட்ட பணிகள் - ஆட்சியர்  கேள்விக்கு பதில் இன்றி விழித்த அலுவலர்கள்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 11 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் மருதங்குடியில் பூசக்குளம் தூர்வாருதல், தடுப்பு சுவர் அமைத்தல், படித்துறை கட்டுதல் போன்ற பணிகள் நடைபெறுவதையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 9 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கதிரடிக்கும் களம் கட்டப்பட்டுள்ளதையும், மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டு பணிகளின் தரம் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்தார்.

அப்போது கதிரடிக்கும் களம் மிகவும் தரம் குறைவாக உள்ளதாகவும், அதனை சரி செய்யுமாறு ஒப்பந்ததாரரை வலியுத்த அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். அதேபோன்று பூசக்குளம் தூர்வாருதல், தடுப்பு சுவர் அமைத்தல், படித்துறை கட்டுதல் போன்ற பணிகள் முறையாக செயல்படுத்தப்படவில்லை எனவும், குளத்திற்கு தண்ணீர் வந்து செல்லும் வகையில் வழிவகை செய்யவில்லை என அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். இதனை அடுத்து அதனை சரி செய்வதாக அதிகாரிகள் ஆட்சியரிடம் தெரிவித்தனர். மேலும் இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இளங்கோவன் மக்கள் வளர்ச்சி திட்ட பணிகளை நடைபெறுவதை கண்டு கொள்வதே இல்லை. அவருக்கு உரிய கமிஷன் தொகை சரியான வருகிறதா என்பதை கவனிக்கவும் அளவிற்கு பணிகள் சரியாக நடைபெறுகிறதா என கண்டுகொள்வதில்லை என குற்றச்சாட்டை தெரிவித்தனர்.


சீர்காழி ஒன்றியங்களில் தரமற்ற வளர்ச்சி திட்ட பணிகள் - ஆட்சியர்  கேள்விக்கு பதில் இன்றி விழித்த அலுவலர்கள்

தொடர்ந்து, மருதங்குடி கிராமத்தில் 2 இலட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் பயனாளி ஒருவர் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் குடியிருப்பு வீடு கட்டுவதற்கான முதற்கட்ட பணியினையும் மாவட்ட ஆட்சியர்  பார்வையிட்டார். பின்னர் சீர்காழி வட்டம், மணலகரம் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். பின்னர், சீர்காழி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சீர்காழி வட்டாரத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டங்களில் முடிவுற்ற பணிகள், தற்போது நடைபெற்று வரும் பணிகளின் விவரங்கள் மற்றும் ஒப்பந்த கால அளவு ஆகியவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விரிவாக ஆய்வு மேற்கொண்டு, வளர்ச்சி திட்ட பணிகளை ஒப்பந்த கால தேதிக்குள் முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


சீர்காழி ஒன்றியங்களில் தரமற்ற வளர்ச்சி திட்ட பணிகள் - ஆட்சியர்  கேள்விக்கு பதில் இன்றி விழித்த அலுவலர்கள்

மேலும் நடைபெற்று வரும் பணிகளில் திருப்தி இல்லாததால் அதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் உள்ளிட்ட அதிகாரிகளிடம் ஆட்சியர் எழுப்பிய கேள்விக்கு பதில் இன்றி விழித்தனர். இவ்வாய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், முதன்மை கல்வி அலுவலர் அம்பிகாபதி, சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, செயற்பொறியாளர் செந்தில்குமார், ஆகியோர் உடன் இருந்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
தாய்ப்பால் தானம் செய்வோம்... உயிரை பகிர்வோம்! தஞ்சையில் விழிப்புணர்வு பேரணி
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
21 நவீன அரிசி ஆலைகளை கூட்டுறவுக்கு மாற்ற எதிர்ப்பு: கோரிக்கைகளை நிறைவேற்றாவிடில் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்
நடுக்கடலில் விரிசலால் கடலில் மூழ்கிய படகு... தத்தளித்த 4 மீனவர்கள்: விரைந்து வந்து மீட்ட சக மீனவர்கள்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Embed widget