மேலும் அறிய

மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

ஜூன் 12-இல் மேட்டூரில் நீர் திறப்பை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர், காரைக்கால், திருச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட பகுதிகளில், மூன்று போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், போதிய மழையின்மை, உரிய நேரத்தில் மேட்டூர் அணை திறக்காத காரணம் என விவசாயம்  இரண்டு போகமாக மாறிய நிலையில் கடந்த சில ஆண்டுகளாக குறுவை சாகுபடி பொய்த்துப்போனதால், தற்போது ஒரு போக சாகுபடி மட்டுமே செய்து வருகின்றனர். 


மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

குறுவை சாகுபடிக்காக ஆண்டு தோறும் ஜீன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், தற்போது அணையின் நீர்மட்டம் சுமார் 100 அடியை நெருங்கியுள்ளது. நிலத்தடி நீர் வசதி உள்ள மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, உள்ளிட்ட தாலுகாக்களில், மின் மோட்டார் மூலம் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். உழவடித்தல், நாற்றங்கால் அமைத்தல், அண்டை வெட்டுதல், நிலத்தை சமன்படுத்துதல் போன்ற முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகின்றது. நிலத்தடி நீர் இன்றி, காவிரி நீரை நம்பியுள்ள பகுதிகளில், புழுதி உழவு செய்து, நேரடி விதைப்பில் விவசாயிகள் கவனம் செலுத்திவருகின்றனர். 


மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

தற்போது சுமார் 96 அடியாக மேட்டூர் நீர்மட்டம் உள்ள நிலையில், ஜீன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையை திறக்க  தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக மயிலாடுதுறை மாவட்டத்தில் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமடைந்துள்ளது. பாய் நாற்றங்கால் அமைத்து மிஷின் மூலம் விவசாயிகள் நடவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். 


மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

இதனிடையே தமிழக அரசு டெல்டா மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்கால்களில் 65 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கவும், இப்பணிகள் முழுமையாகவும் வேகமாகவும் நடைபெறுவதற்காகவும், 8 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகளாக நியமனம் செய்து தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். 


மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் மற்றும் வடிகால்கள் ஆகியன 431 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலமைச்சரின் சிறப்பு தூர்வாரும் திட்டத்தின்கீழ் தற்போது தூர்வாரப்படுகிறது. இதற்காக 5 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த மே மாதம் 28 ஆம் தேதி கனரக வாகனங்களைக் கொண்டு தூர்வாரும் பணிகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 


மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

 


மயிலாடுதுறை : தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை.!

இப்பணிகளை வரும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் பாசனத்திற்காக திறக்கப்படும் காவிரி நீர் கடைமடை பகுதியான மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்தடைவதற்கு முன்னதாக முடிக்க திட்டமிடப்பட்டு துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் குறுவை சாகுபடி மேற்கொள்ள வசதியாக விவசாயக்கடன் தள்ளுபடி, சிறப்புத்தொகுப்புத் திட்டங்களை அறிவித்து, தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்று மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Watch video : கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
Breaking Tamil LIVE: 2019-ஆம் ஆண்டை விட 25 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Breaking Tamil LIVE: 2019-ஆம் ஆண்டை விட 25 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
PM Modi :
"எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Modi  : மோடியின் வெறுப்பு பேச்சுSchool Re-Union : நிஜத்தில் 96 RE-UNIONMiss Koovagam 2024 :  திருநங்கைகள் RAMP WALK கண் கவர் உடையில் அசத்தல் மிஸ் கூவாகம் 2024 யார்?Kallazhagar Madurai  : குலுங்கிய மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் வாராரு வாராரு அழகர் வாராரு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Watch video : கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
கள்ளழகரை பார்த்தேன்.. சாதி, மதம் பார்க்காம ஒன்னா இணையுறாங்க.. பூரிப்புடன் சூரி பகிர்ந்த வீடியோ
Breaking Tamil LIVE: 2019-ஆம் ஆண்டை விட 25 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
Breaking Tamil LIVE: 2019-ஆம் ஆண்டை விட 25 சீட்டுகள் கூடுதலாக கிடைக்கும்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை
PM Modi :
"எஸ்சி/எஸ்டி இட ஒதுக்கீட்டை குறைச்சு..முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறாங்க" பிரதமர் மோடி மீண்டும் சர்ச்சை!
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Crime: பவாரியா கும்பல் வழக்கில் திடீர் திருப்பம் : குற்றவாளிகள் தரப்பில் நீதிமன்றத்தில் புதிய மனு.
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Richest Candidate: ஆந்திரா டிடிபி கட்சி வேட்பாளரின் சொத்து ரூ.5,785 கோடி; மிரண்டுபோன கட்சிகள்; யார் இவர்?
Guru Peyarchi 2024: குருபார்க்க கோடி நன்மை! ஏன் அவ்வாறு சொல்லப்படுகிறது? புராணம் சொல்வது இதுதான்!
குரு பார்க்க கோடி நன்மை! ஏன் அவ்வாறு சொல்லப்படுகிறது? புராணம் சொல்வது இதுதான்!
Edappadi Palaniswami : 'மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கருத்து’ பாஜக எதிர்ப்பை கைவிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?
Edappadi Palaniswami : 'மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்காமல் கருத்து’ பாஜக எதிர்ப்பை கைவிடுகிறாரா எடப்பாடி பழனிசாமி..?
Guru Peyarchi 2024 : ’வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா?’ ஆலங்குடி செல்லுங்கள் குருபகவான் ஆசி பெறுங்கள்..!
Guru Peyarchi 2024 : ’வாழ்க்கையில் முன்னேற்றம் வேண்டுமா?’ ஆலங்குடி செல்லுங்கள் குருபகவான் ஆசி பெறுங்கள்..!
Embed widget