மேலும் அறிய

மக்களை தேடி மருத்துவம் திட்டம்; தஞ்சையில் எத்தனை பேர் பயன் அடைந்தார்கள்?

தற்போது நலமுடன் உள்ளேன். இன்னுயிர் காப்போம் திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு மிக்க நன்றி.

தஞ்சாவூர்: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 521,281 நபர்களும், இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 8032 நபர்களும் பயன் பெற்றுள்ளனர் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன் காக்கும் அரசு

இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: மக்கள் நல்வாழ்வுக்காக அக்கறையுடன் செயல்படுகிற தமிழக அரசு சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் நலனில் பெரிதும் கவனம் செலுத்தி காத்து வருகிறது. ஏராளமான நலத் திட்டங்களின் வரிசையில் மக்களைத்தேடி மருத்துவம்", "இன்னுயிர் காப்போம்" போன்ற மகத்தான திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக செயல்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டின் இந்த திட்டங்கள் பிற மாநில அரசுகளால் பெருமையுடன் பேசப்படுகிறது என்றால் அது மிகையல்ல.

இல்லம் தேடி மருத்துவ சிகிச்சை

இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஏழை, எளியோரின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தினால் 1.70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 5,21,281 நபர்கள் பயன் பெற்றுள்ளனர்.

உயிர்காக்கும் உன்னதத் திட்டம்

இன்னுயிர் காப்போம் நம்மைக்காக்கும் 48 திட்டத்தின் கீழ் சாலை விபத்துகளில் ஏற்படும் உயிர் இழப்புகளை குறைப்பதோடு அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் மருத்துவச் செலவினங்களை குறைக்கும் உயிர் காக்கும் உன்னதத் திட்டத்தின் கீழ் விபத்து நிகழும் பகுதிகளுக்கு அருகாமையிலுள்ள 683 மருத்துவமனைகளில் ரூ.213.47 கோடி செலவில் 2.45 இலட்சம் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் இத்திட்டத்தின் வாயிலாக 8032 நபர்களுக்கு ரூ.6,23,04,160 மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

முதல்வருக்கு நன்றி

மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தில் பயனடைந்த பருத்திக்குடி ஊராட்சி படைத்தலைவன்குடி கிராமத்தைச் சேர்ந்த நாகையன் என்பவர் தெரிவித்தாவது:  எனக்கு இரத்த அழுத்தம் பக்கவாதம் நோய் உள்ளதால், என்னால் நடக்க முடியாது. 1 1/2 வருடத்துக்கு முன்னாடி ஒரு நாள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் டாக்டர் நர்சுகள், என் வீட்டில எனக்கு சர்க்கரை நோய், பிரஷர் பரிசோதனை செய்தார்கள்.

எனக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை என் வீட்டுக்கே வந்து தருகிறார்கள். மேலும் தேவையான பயிற்சியையும் சொல்லி தந்திருக்காங்க. எனது உடல் நலம் தற்போது தேறிவந்துள்ளது. நான் நல்லபடியாக குணமடைவதற்கு உதவி செய்த முதலமைச்சருக்கு நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் பயன்பெற்றவர் கருத்து

இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் பயன்பெற்ற கோவிந்தன் என்பவர் தெரிவித்ததாவது: நான் எனது பைக்கில் செல்லும் போது கோவிலாச்சேரி அருகே பின்னால் வந்த நான்கு சக்கர வாகனம் மோதியதில் விபத்து ஏற்பட்டது. என்னை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். எனது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் இன்னுயிர் காப்போம் 48 மருத்துவ காப்பீட்டு முறையில் நன்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது. 

தற்போது நலமுடன் உள்ளேன். இன்னுயிர் காப்போம் திட்டத்தை நடைமுறைப்படுத்திய தமிழக முதலமைச்சருக்கு மிக்க நன்றி. இவ்வாறு அவர் தெரிவித்தார். இவ்வாறு மக்களைத்தேடி மருத்துவம் திட்டம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற திட்டங்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மாவட்ட நிர்வாகம் சார்பில் தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Professors Ban: 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- அதிரடி அறிவிப்பு
Professors Ban: 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- அதிரடி அறிவிப்பு
Watch Video:
Watch Video: "சாதி, மத சான்றிதழ் கேட்டாங்க" மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன? வீடியோ வெளியிட்ட நமீதா
Breaking News LIVE: மான் இறைச்சியுடன் பிடிபட்ட வனவேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது
Breaking News LIVE: மான் இறைச்சியுடன் பிடிபட்ட வனவேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது
தவெக... தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து
தவெக... தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Varunkumar IPS  Profile  | திருச்சியின் எல்லைச்சாமி!சம்பவக்காரன் வருண் IPS..REAL சிங்கம் சூர்யா!Annnamalai slams DMK | ”அன்றும்... இன்றும்முருகன் பார்க்குறாரு” விளாசும் அண்ணாமலைDMDK Cadre | விஜயகாந்த் பிறந்தநாளில் உயிரிழந்த தேமுதிக நிர்வாகி.. கடலூரில் சோகம்Rahul Gandhi on caste census | ”MISS INDIA-ல் அதிர்ச்சி! ஒரு தலித் கூட இல்ல” ராகுல் வேதனை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Professors Ban: 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- அதிரடி அறிவிப்பு
Professors Ban: 353 பேராசிரியர்களுக்கு வாழ்நாள் தடை; கல்லூரிகள் மீது குற்றவியல் நடவடிக்கை- அதிரடி அறிவிப்பு
Watch Video:
Watch Video: "சாதி, மத சான்றிதழ் கேட்டாங்க" மீனாட்சி அம்மன் கோயிலில் நடந்தது என்ன? வீடியோ வெளியிட்ட நமீதா
Breaking News LIVE: மான் இறைச்சியுடன் பிடிபட்ட வனவேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது
Breaking News LIVE: மான் இறைச்சியுடன் பிடிபட்ட வனவேட்டை தடுப்பு காவலர் பொம்மன் கைது
தவெக... தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து
தவெக... தமிழகத்திலேயே முதல்முறையாக 50 அடி உயர கொடி ஏற்றி வைத்து 1000 பேருக்கு சமபந்தி அசைவ விருந்து
கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - கடத்தி வந்தது யார்?
கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் - கடத்தி வந்தது யார்?
“மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க என்னிடம் மத சான்று கேட்டனர்” - நடிகை நமீதா வேதனை
“மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க என்னிடம் மத சான்று கேட்டனர்” - நடிகை நமீதா வேதனை
சிறையில் ஜாலியான சலுகை? வைரலான தர்ஷன் புகைப்படம்.. அதிகாரிகள் சஸ்பெண்ட்
சிறையில் ஜாலியான சலுகை? வைரலான தர்ஷன் புகைப்படம்.. அதிகாரிகள் சஸ்பெண்ட்
VCK Ravikumar : ”பாஜகவின் திட்டத்தை செயல்படுத்தும் முருகன் மாநாடு” விசிக எம்.பி. ரவிக்குமார் கடும் எதிர்ப்பு – கூட்டணியில் சலசலப்பு..?
VCK Ravikumar : ”பாஜகவின் திட்டத்தை செயல்படுத்தும் முருகன் மாநாடு” விசிக எம்.பி. ரவிக்குமார் கடும் எதிர்ப்பு – கூட்டணியில் சலசலப்பு..?
Embed widget