மேலும் அறிய

கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது - மயிலாடுதுறை ஆட்சியர் திட்டவட்டம்

’’அசல் சான்றினையோ அல்லது கைபேசியில் வரப்பெற்ற குறுஞ்செய்தியையோ காண்பித்தால் மட்டுமே மதுபானங்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம்’’

நாடு முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று பரவி மக்களுக்கு பல்வேறு இன்னல்களை கொடுத்து வருகிறது. வைரஸ் தொற்றை கட்டுபடுத்த பல்வேறு நாடுகளும் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு தொற்று பரவுவதை குறைத்து வருகிறது. மேலும் கொரோனோ பரவுவதை தடுக்க தடுப்பூசி ஒன்றே தீர்வு என சுகாதார அமைப்புகள் கூறுகின்றன. அதன் காரணமாக கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகிறது. கொரோனா  தடுப்பூசி செலுத்திக் கொண்டால் மட்டுமே பல நாடுகளுக்கு வர அனுமதி வழங்கப்படுகிறது. மேலும் பல இடங்களில் தடுப்பு ஊசியை கட்டாயம் என்ற சூழல் நிலவுகிறது.


கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது - மயிலாடுதுறை ஆட்சியர் திட்டவட்டம்

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் இதுவரை 23107 பேருக்கு  தொற்று உறுதி செய்யப்பட்டு, 22 ஆயிரத்து 566 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். மேலும் மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்கள் என பல்வேறு இடங்களில் 229 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 312 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  கொரோனா வைரஸ் தொற்று பரவ கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு வகையான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.


கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே மது - மயிலாடுதுறை ஆட்சியர் திட்டவட்டம்

அந்த வகையில் தற்போது பல்வேறு மாவட்டங்களை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட மதுப்பிரியர்களுக்கு மட்டுமே மதுபானம் விற்பனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து, வெளியிட்ட செய்திக்குறிப்பில் அவர் கூறியதாவது: ஆரோக்கியமான தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் தற்போது நம்மை தாக்கிக் கொண்டிருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை முற்றிலுமாக ஒழிக்கும் முயற்சியாகவும், விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் அரசு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்களை அமைத்து செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கும் விதமாக மயிலாடுதுறை மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மதுபான பிரியர்களாகிய நுகர்வோர்கள் மதுபானங்களை தமிழ்நாடு அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் டாஸ்மாக் கடைகளில் வாங்கும்போது, கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றினை டாஸ்மாக் கடையின் பணியாளர்கள் பதிவு செய்யும் வகையில் அசல் சான்றினையோ அல்லது கைபேசியில் வரப்பெற்ற குறுஞ்செய்தியையோ காண்பித்தால் மட்டுமே மதுபானங்களை நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம். இந்த செயற்கரிய செயலுக்கு வாடிக்கையாளர்களாகிய உங்களது முழு ஒத்துழைப்பை அளித்து ஆரோக்கியமான கோவிட்-19 தொற்றில்லா மாவட்டமாக உருவாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று அச்செய்திக்குறிப்பில் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இதுநாள் வரை கொரோனா தடுப்பூசி செலுத்தாத மதுபான பிரியர்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் சில தினங்களுக்கு மது பானம் அருந்த கூடாது என்பதால் தடுப்பூசியை தவித்து வந்த மது பிரியர்கள் தற்போது வேறுவழியின்றி செய்வதறியாது தவித்து வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget