மேலும் அறிய

சுதந்திர தின கொண்டாட்டம்: தஞ்சாவூர், திருச்சி, அரியலூரில் உற்சாகம்!

தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தேசிய கொடி ஏற்றினார்.

நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கலெக்டர் பிரியங்காபங்கஜம் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூவர்ண பலூன்களையும், வெண் புறாக்களையும் பறக்க விட்டார் . இதையடுத்து அவர் திறந்தவெளி ஜீப்பில் சென்று அணிவகுப்பை பார்வையிட்டு போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 


சுதந்திர தின கொண்டாட்டம்: தஞ்சாவூர், திருச்சி, அரியலூரில் உற்சாகம்!

அப்போது மாவட்ட எஸ்பி ராஜாராம் உடன் இருந்தார். தொடர்ந்து கலெக்டர் சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகளுக்கு கதர் ஆடை அணிவித்து கௌரவித்தார்.  பின்னர் முன்னாள் படைவீரர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் துறை, வருவாய் பேரிடர் மேலாண்மை துறை   உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 32 பயனாளிகளுக்கு ரூ 2.03 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

தொடர்ந்து  மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 364 அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

திருச்சியில்...

சுதந்திர தினத்தை ஒட்டி திருச்சியின் முக்கிய அரசு கட்டிடங்கள் அனைத்தும் தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் மின் விளக்குகளால் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டன.

மாவட்ட கலெக்டர் அலுவலகம், தலைமை தபால் நிலையம், திருச்சி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய அடையாளக் கட்டிடங்கள், மாலையிலிருந்து  மின்னும் மூவண்ண ஒளியால் கண்கவர் தோற்றமளித்தன. பொதுமக்கள், பண்டிகை போல் மிளிரும் இந்த ஒளி அலங்காரங்களை ரசித்து, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர்.

தேசப்பற்று உணர்வையும் தேசிய ஒற்றுமையையும் ஊட்டும் இந்த வண்ணமயமான அலங்காரங்கள், திருச்சியின் சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு சிறப்பூட்டின.

அரியலூரில்...

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செய்தார்.

பின்னர் திறந்த ஜீப்பில் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சென்று காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு, காவலர்கள் அளித்த அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர். பின்னர் உலகெங்கும் சமாதானம் நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்த வகையில் வெள்ளை புறாக்களை பறக்க விட்டும் இந்திய தேசிய கொடியின் மூவர்ண நிறத்தைக் குறிக்கும் வகையில் பலூன்களை மாவட்ட கலெக்டர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் பறக்க விட்டனர்.

இதனையடுத்து சிறப்பாக பணிபுரிந்த 200  அரசு அலுவலர்கள், காவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் இரத்தினசாமி வழங்கினார். இதன் பின்னர் 53 பயனாளிகளுக்கு 2 கோடியே 63 லட்சத்து 69 ஆயிரத்து 733 ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி வழங்கினார். விழாவில் தேசியப்பற்றை விளக்கும் வகையில் பள்ளி மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும் சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில் அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முழுதும், மூவர்ண கொடியினை குறிக்கும் வகையில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது பொதுமக்களை மிகவும் கவர்ந்தது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
TVK Sengottaiyan: நாடே அஞ்சப்போகிறது.. தவெக சின்னத்திற்கு பில்டப்பை எகிற வைத்த செங்கோட்டையன் - என்னவா இருக்கும்?
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
டிசம்பர் 9, 11, 16... அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வு- தமிழகத்திற்கு அலர்ட் விடுத்த வெதர்மேன்
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
Indigo Flight: ரூ.610 கோடி கொடுத்தாச்சு.. இனியும் விமானங்கள் லேட்டாதான் புறப்படும் - இண்டிகோவால் தொடரும் அவதி
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
காதலியை உறைய வைத்து கொலை செய்த கொடூர காதலன்? நம்பிச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Hyundai Venue: ரூபாய் 10 லட்சம்தான் ஆரம்ப விலை.. Hyundai Venue கார் தரமும், மைலேஜும் எப்படி?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
Tata Sierra Rivals: ஆன் - ரோட் வராத காருக்கு இவ்ளோ போட்டியா? சந்தைக்கு வரும் 3 புதிய SUVக்கள்- சமாளிக்குமா டாடா?
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
Embed widget