மேலும் அறிய

அரிவாளால் மிரட்டி போதை மாத்திரைகளை எடுத்து சென்ற இளைஞர்கள்- சிக்கும் போது கால் உடைந்த பரிதாபம்

’’பாலத்தில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயன்ற பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (20) வலது கை முறிந்தது. பட்டுக்கோட்டை தச்சுத் தெருவைச் சேர்ந்த  ராஜேஷ் (19) வலது கால் உடைந்தது’’

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை சின்னையா தெரு மைனர் பங்களா எதிரில், தனியார்  மருத்துவமனை மற்றும் அதனுடன் இணைந்த மருந்தகம் உள்ளது.  அங்கு வந்த இரண்டு இளைஞர்கள் மருந்துச் சீட்டு இல்லாமல், மருத்துவரின் பரிந்துதை இல்லாமல் வழங்ககூடாத போதை மாத்திரைகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல்  குறிப்பிட்ட மாத்திரைகளை தரமுடியாது என்று கடையில் இருந்த பெண் கூறியுள்ளார். பல முறை அப்பெண்ணிடம் போதை மாத்திரைகளை கேட்டுள்ளார். ஆனால் அப்பெண் மாத்திரைகளை வழங்காமல், மருத்துவ பரிந்துரை சீட்டு கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஒரு வாலிபர் தன் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த மூன்றடி நீள அரிவாளை காட்டி மிரட்டினார்.


அரிவாளால் மிரட்டி போதை மாத்திரைகளை எடுத்து சென்ற இளைஞர்கள்- சிக்கும் போது கால் உடைந்த பரிதாபம்

இதனால் உயிருக்கு பயந்த போன அப்பெண், கடைக்குள் ஒடினார். இதனை பயன்படுத்தி கொண்டு போதை இளைஞர்கள், போதை  மாத்திரைகள் மற்றும் அங்கிருந்த துாக்க மாத்திரைகளை அள்ளிச் சென்றனர். இதில் போதை மாத்திரைகள் கிடைக்காத பட்சத்தில்,  தூக்க மாத்திரையை சில இளைஞர்கள் போதை மாத்திரையாக பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து  மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலகிருஷ்ணன், பட்டுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார். புகாரையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் செங்கமலக்கண்ணன் மற்றும் காவல்துறையினர் மருந்தகத்திற்கு வந்து, அங்கிருந்த சிசிடிவி பதிவு  காட்சிகளை ஆய்வு செய்தனர். குற்றவாளிகளான போதை இளைஞர்களை உடனடியாக தேடிப்பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி பிரியா காந்த புனேனி உத்தரவிட்டார்.


அரிவாளால் மிரட்டி போதை மாத்திரைகளை எடுத்து சென்ற இளைஞர்கள்- சிக்கும் போது கால் உடைந்த பரிதாபம்

சிசிடிவி காட்சியில் தெரிந்த உருவத்தை அடையாளம் வைத்து, காவல்துறையினர் தேடி வந்த நிலையில், குற்றவாளிகள்  பட்டுக்கோட்டை, மகாராஜா சமுத்திரம் காட்டாற்று பகுதியில் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. தகவலையடுத்து, பட்டுக்கோட்டை காவல் ஆய்வாளர் ராஜேஷ், உதவி ஆய்வாளர்கள் முத்துக்குமார், பாஸ்கர் உள்ளிட்ட காவல்துறையினர் அங்கு சென்றபோது, காவல் துறையினரை கண்டதும்  பாலத்தில் இருந்து குதித்து தப்பிச் செல்ல முயன்ற பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்த ஹரிஹரன் (20) வலது கை முறிந்தது. பட்டுக்கோட்டை தச்சுத் தெருவைச் சேர்ந்த  ராஜேஷ் (19) வலது கால் உடைந்தது.

இதையடுத்து இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்த அரிவாளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.  இதையடுத்து  பட்டுக்கோட்டை வந்த, தஞ்சாவூர் காவல் கண்காணிப்பாளர் ரவளிப்ரியா கந்தபுனேனி, குற்றவாளிகளை துரிதமாக பிடித்த காவல்துறையினரை நேரில் பாராட்டினார். இதேபோல் பட்டுக்கோட்டை கிளை, இந்திய மருத்துவ சங்க நிர்வாகிகள் டாக்டர்கள் அன்பழகன், நியூட்டன், ராஜா ராமலிங்கம் ஆகியோர் உடனடியாக குற்றவாளிகளை பிடித்த காவல்துறையினருக்கு பாராட்டி நன்றி தெரிவித்துள்ளனர். தூக்க மாத்திரையை போதைக்கு பயன்படுத்திவரும் இளைஞர்களின் செயல் சமூக ஆர்வலர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget