மேலும் அறிய

தஞ்சாவூரில் தடையை மீறி 7 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்...!

’’கொரோனாவில் இருந்து காப்பாற்றி கொள்வது எப்படி என்பது குறித்து விநாயகர் கையில் மாஸ்க்குடன் ஆசி வழங்கினார். இந்த விநாயகரை தரிசனம் செய்யும் பொது மக்கள், கண்டிப்பாக மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குவார்கள்’’

விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. கொரோனா தொற்று பாதிப்பை தடுக்கும் வகையில், பொது இடங்களில் சிலை வைக்கவோ மற்றும் ஊர்வலமாக எடுத்து செல்லக்கூடாது என தமிழக அரது தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை மீறி சிலை வைத்தாலோ, ஊர்வலமாக எடுத்து சென்றாலோ கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்திருந்தனர். அதே சமயம் பொதுமக்கள் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபடலாம், அந்த விநாயகர் சிலையை தனி நபர் எடுத்து சென்று நீர் நிலைகளில் கரைக்கலாம் என தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.


தஞ்சாவூரில் தடையை மீறி 7 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்...!

இந்நிலையில் தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் இந்து முன்னனி அமைப்பினர், திடீரென சீனிவாசபுரம், விளார், பர்மா காலனி, ஒத்தக்கடை, ரயிலடி, வல்லம் ஆகிய பகுதிகளில் சுமார் 5 அடி உயரம் கொண்ட 7 விநாயகர் சிலையை வைத்தனர். பின்னர் அந்த விநாயகருக்கு, அவல் பொரி, கடலை, வழைப்பழம், தேங்காய் உடைத்து, தீபதூபம் காண்பித்தனர். இது குறித்து தகவலறிந்த வருவாய்த்துறை, காவல் துறை, அறநிலையத்துறை ஆகியோர், விநாயகர் சிலைகள் உள்ள பகுதிக்கு வந்து, சிலை அருகிலுள்ள கோயிலில் வைத்தனர். ஆனால் சீனிவாசபுரத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை மட்டும், வாகனத்தில் ஏற்றி கொண்டு பலத்த போலீசார் பாதுகாப்புடன், எடுத்து சென்று, தஞ்சாவூர், மேலவீதியுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்குள் வைத்தனர்.


தஞ்சாவூரில் தடையை மீறி 7 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்...!

அந்த சிலையின் அருகில் அறநிலையத்துறை அலுவலர்கள் இருவரும், கோயிலுக்கு வெளியில் 4 போலீசாரும் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். சீனிவாசபுரம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகரை மட்டும் வாகனத்தில் ஏற்றி கொண்டு கோயிலுக்குள்ளே வைத்து, போலீசார் பாதுகாப்பு அளித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் 19 இடங்களில் அனுமதியின்றி, தடையை மீறி விநாயகர் சிலையை வைத்தனர். தொடர்ந்து ஒரு அடி உயரமுள்ள களிமண்ணாலான 1008  விநாயகர் சிலையை, 5 வது ஆண்டு கும்பகோணம் பகுதியிலுள்ள வீடுகளில் வழங்கினர்.


தஞ்சாவூரில் தடையை மீறி 7 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்...!

மாநில இளைஞர் அணி பொதுச் செயலாளர் குருமூர்த்தி செய்தியாளர்களிடம் கூறுகையில், கும்பகோணத்தில் வைக்கப்பட்டுள்ள விநாயகர், கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றி கொள்வது எப்படி என, விநாயகர் கையில் மாஸ்க்குடன் ஆசி வழங்கினார். இந்த விநாயகரை தரிசனம் செய்யும் பொது மக்கள், கண்டிப்பாக மாஸ்க் அணிவதை கட்டாயமாக்குவார்கள். தமிழக அரசு வீடுகளில் வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. தெய்வ பக்தி நிறைந்த நகரமாக கும்பகோணத்தில் இல்லத்தில் வைத்து வழிபட கூடிய வகையில் விநாயகர் சிலைகள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.


தஞ்சாவூரில் தடையை மீறி 7 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்...!

இதனால் நாத்திக கொள்கைகள் முறியடிக்கப்பட்டு இல்லந்தோறும் தெய்வபக்தி தழைத்தோங்க செய்யும். விடுதலைப் போராட்டத்திற்கு விநாயகர் வழிபாடு பெரும் பங்காற்றியது நினைவு கூறும் வகையில் உள்ளம் தோறும் தேசபக்தி என்ற கோட்பாட்டோடு வீடு தோறும் விநாயகர்,. இல்லந்தோறும் தெய்வபக்தி,  உள்ளம் தோறும் தேசபக்தி என்ற தலைப்பில் விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களை ஒற்றுமை படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. கும்பகோணம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள 19 சிலைகள், வரும் 11ஆம் தேதி மாலை 6 காவிரியாறு பகவத்படித்துறையில் கரைக்கப்படுகிறது என்றார்.


தஞ்சாவூரில் தடையை மீறி 7 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்...!

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அமைப்பாளர் விஜய் பிரபு. மாவட்டச் செயலாளர் அநபாயன். நகர இளைஞரணி தலைவர் நாகராஜ். உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். விநாயகர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில் எனும் பெரியகோயிலில் பிரகாரத்திலுள்ள விநாயகர் கோயிலுள்ள விநாயகருக்கு,  சுமார் 25 கிலோ எடையில் சந்தானத்தாலான அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. விநாயகதர் சதுர்த்தி விழாவினை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்திலுள்ள அனைத்து விநாயகர் கோயில்களில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
ஜெயலலிதாவின் வலதுகரம் டிடிவி தினகரன்.! அதிமுகவினரை ஒரே டுவிட்டில் வெறுப்பேற்றிய அண்ணாமலை
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Rajini Vijay: ரஜினிக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்.. என்ன காரணம்? அடித்துக் கொள்ளும் ரசிகர்கள்!
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
வட மாநிலங்களில் இருந்து பெண்கள் ஏன் தமிழகத்திற்கு ஓடோடி வருகிறார்கள்..? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்..
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
’’தெருவுக்கு வந்து போராடும் அரசு ஊழியர்கள்’’ முனிவர் - விஷப்பாம்பு கதை சொன்ன அன்புமணி!
Student Scholarship: மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! வெளியான சூப்பர் வாய்ப்பு- விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
சர்க்கரை நோயாளிகளும் ரத்த தானம் செய்யலாம்.. ஆனா இவங்களுக்கெல்லாம் நோ- மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம்
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
TN TRB Exam: உதவிப் பேராசிரியர் தேர்வு எப்போது? ஹால் டிக்கெட் பெறுவது எப்படி? டிஆர்பி அறிவிப்பு
Embed widget