மேலும் அறிய

இறப்பிலும் ஒன்றிணைந்த கணவன், மனைவி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

மயிலாடுதுறையில் மனைவி இறந்த இரண்டு தினங்களில் கணவரும் உயிரிழந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் திருஇந்தளூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன். 1915ஆம் ஆண்டு பிறந்தவர் இவருக்கு தற்போது 108 வயது ஆகிறது. இந்தநிலையில் கண்ணன் நேற்று இரவு திடீரென உயிரிழந்தார். இவரது மனைவி பழனியம்மாள், 85 வயதான இவர் கடந்த புதன்கிழமை இரவு உடல் நலக்குறைவால் காலமான நிலையில், கண்ணன் இரண்டு தினங்களாக படுக்கையில் படுத்தபடி சோகமாக உணவு சரியாக அருந்தாமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு மனைவியை தொடர்ந்து இவரும் இயற்கை எய்தினார். 


இறப்பிலும் ஒன்றிணைந்த கணவன், மனைவி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

1953 -ஆம் ஆண்டு கண்ணன்- பழனியம்மாள் தம்பதிக்கு திருமணம் நடைபெற்று நான்கு பெண் பிள்ளை, இரு ஆண் மகன் என்று ஆறு பிள்ளைகளும், 15 பேரக்குழந்தைகள் 8 கொள்ளு பேரன்கள் என்று ஆலமர விருட்சமாய் இவர்களது குடும்பம் வளர்ந்தது. அறுபதாம் திருமணம், 80 ஆம் திருமணம் என்று விமரிசையாக கொண்டாடி வந்த இந்த ஜோடி மிகவும் அன்னியோன்யமாக இருந்து வந்ததாகவும், இருவருக்கும் மன வருத்தங்கள் இன்றி ஜோடி புறா போன்று வாழ்ந்து வந்ததாகவும் இவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். 

Baby With Tail : விசித்திரம்.. 6 செ.மீ வாலுடன் பிறந்த குழந்தை... அரிய நிகழ்வு என மருத்துவர்கள் வியப்பு...!


இறப்பிலும் ஒன்றிணைந்த கணவன், மனைவி - மயிலாடுதுறையில் நெகிழ்ச்சி

கணவன், மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்புடனும், அதீத பாசத்துடனும் இருந்து வந்துள்ளனர். திருமண ஆன நாள் முதல் இதுவரை 65 ஆண்டுகளாக இருவருக்கும் இடையே பெரிய அளவில் சண்டை சச்சரவுகள் ஏதும்  வந்தது கிடையாது என அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர். அந்த அளவுக்கு இணைபிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வந்துள்ளனர். தன்னுடன் குடும்பம் நடத்தி வந்த தனது மனைவி பிரிந்த துக்கம் தாங்காமல் அவரது கணவர் கண்ணன் தற்போது உயிரிழந்துள்ளார்.  மனைவி இறந்த துக்கத்தில் இரண்டே நாட்களில் 108 வயது முதியவரும் மரணமடைந்த செய்தி கேட்டு உறவினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Virat Kohli Records: 'கிங்' கோலிடா..! அதிவேக 25 ஆயிரம் ரன்கள்..! புதிய வரலாறு படைத்த ரன்மெஷின் விராட்...!

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்பதே சத்தியமான உண்மை - நடிகர் விஜய் ஆவேசம்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Breaking News LIVE: நீட் விலக்கு கேட்கும் தமிழ்நாடு அரசின் தீர்மானத்தை முழுமனதுடன் ஏற்கிறேன் - விஜய்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
Annamalai : ’சர்வதேச அரசியல் குறித்து படிக்க லண்டன் செல்கிறேனா?’ - அண்ணாமலை விளக்கம்
EPS Pressmeet:
EPS Pressmeet: "கள்ளக்குறிச்சி மரணத்திற்கு முதல்வர் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்" - எடப்பாடி பழனிசாமி.
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
பெரும் சோகம்! மைதானத்திலே சுருண்டு விழுந்து உயிரிழந்த 17 வயதான பேட்மிண்டன் வீரர்!
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
வரும் 16ம் தேதி முற்றுகை போராட்டம்: காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் திட்டவட்டம்
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
இந்து மதம் குறித்து சர்ச்சை பேச்சு ; பாதிரியார் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Embed widget