மேலும் அறிய

திருவாரூரில் பெய்த தொடர் கனமழையால் 60,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!

’’சம்பா சாகுபடிக்காக ஏக்கர் ஒன்றிற்கு 30,000 வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தற்போது 40 நாட்களில் இருந்து 50 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் அனைத்தும் ஒரு அடி தூரம் வளர்ந்து வந்துள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் பெய்த தொடர் கனமழையால் 60,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!
 
திருவாரூர் கொரடாச்சேரி மன்னார்குடி வடுவூர் கோட்டூர் திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் அம்மையப்பன் கானூர் பின்னவாசல், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. உடனடியாக மழை நீரை வடிய வைத்து அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி பாதிப்படைந்த பகுதிகளை வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இந்த மழை பெய்தால் சம்பா பயிர்கள் முழுவதுமாக அழுக கூடிய நிலை உருவாகும், இதுவரை ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம் ஏற்கனவே மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த இழப்பை விவசாயிகளால் தாங்க முடியாத நிலை உருவாகும், ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூரில் பெய்த தொடர் கனமழையால் 60,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!
 
தற்பொழுது வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைத்தவுடன் உடனடியாக உரம் கொடுக்க வேண்டும், ஆகையால் தமிழ்நாடு அரசு அனைத்து வேளாண் கிடங்குகளிலும் தட்டுப்பாடின்றி உரம் யூரியா உள்ளிட்ட இடுபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆகையால் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். முழுவதுமாக பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை வேளாண்மை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் எந்தெந்த இடங்களில் ஆற்றின் கரை பலவீனமாக உள்ளதோ அந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget