மேலும் அறிய

திருவாரூரில் பெய்த தொடர் கனமழையால் 60,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!

’’சம்பா சாகுபடிக்காக ஏக்கர் ஒன்றிற்கு 30,000 வரை விவசாயிகள் செலவு செய்துள்ளனர்’’

காவிரி டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருச்சி, கடலூர், உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு இதுவரை 10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 3.25 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர். தற்போது 40 நாட்களில் இருந்து 50 நாட்கள் ஆன சம்பா பயிர்கள் அனைத்தும் ஒரு அடி தூரம் வளர்ந்து வந்துள்ளன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த 10 தினங்களுக்கும் மேலாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. இதனால் திருவாரூர் மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர்.

திருவாரூரில் பெய்த தொடர் கனமழையால் 60,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!
 
திருவாரூர் கொரடாச்சேரி மன்னார்குடி வடுவூர் கோட்டூர் திருத்துறைப்பூண்டி நன்னிலம் குடவாசல் அம்மையப்பன் கானூர் பின்னவாசல், உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா நெல் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. உடனடியாக மழை நீரை வடிய வைத்து அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும், அதுமட்டுமின்றி பாதிப்படைந்த பகுதிகளை வேளாண்துறை அதிகாரிகள் நேரடியாக வந்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இந்த மழை பெய்தால் சம்பா பயிர்கள் முழுவதுமாக அழுக கூடிய நிலை உருவாகும், இதுவரை ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம் ஏற்கனவே மிகப்பெரிய பொருளாதார இழப்பை சந்தித்து அதிலிருந்து மீண்டு வருவதற்குள் அடுத்த இழப்பை விவசாயிகளால் தாங்க முடியாத நிலை உருவாகும், ஆகையால் தமிழ்நாடு அரசு விவசாயிகளுக்கு உதவுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூரில் பெய்த தொடர் கனமழையால் 60,000 ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின...!
 
தற்பொழுது வயல்களில் தேங்கியுள்ள மழை நீரை வடிய வைத்தவுடன் உடனடியாக உரம் கொடுக்க வேண்டும், ஆகையால் தமிழ்நாடு அரசு அனைத்து வேளாண் கிடங்குகளிலும் தட்டுப்பாடின்றி உரம் யூரியா உள்ளிட்ட இடுபொருட்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஏற்கனவே திருவாரூர் மாவட்டத்தில் கடுமையான உரத் தட்டுப்பாடு நிலவுவதால் தனியார் கடைகளில் அதிக விலைக்கு உரங்களை விற்பனை செய்து வருகின்றனர். ஆகையால் தட்டுப்பாடின்றி உரங்கள் கிடைப்பதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். முழுவதுமாக பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை வேளாண்மை துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் சென்று கொண்டிருப்பதால் எந்தெந்த இடங்களில் ஆற்றின் கரை பலவீனமாக உள்ளதோ அந்த இடத்தில் மணல் மூட்டைகளை கொண்டு பாதுகாப்பதற்கான நடவடிக்கை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என டெல்டா மாவட்ட விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Breaking News LIVE 29th SEP 2024:  அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Breaking News LIVE 29th SEP 2024: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மின்சாரத்துறை ஒதுக்கீடு
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
மு.க.ஸ்டாலின் VS உதயநிதி! இளைஞரணிச் செயலாளர் முதல் துணை முதல்வர் வரை - ஓர் அலசல்
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Lubber Pandu: ப்ளாக்பஸ்டர் ஹிட் லப்பர் பந்து! தினேஷின் கெத்து கேரக்டரில் நடிக்க வேண்டியது இவரா?
Sri Lanka Vs New Zealand:
Sri Lanka Vs New Zealand:"ஒரு சூறாவளி கிளம்பியதே" - நியூசிலாந்தை ஓட விட்ட இலங்கை! 15 வருடங்களுக்குப் பிறகு சாதனை
Embed widget