மேலும் அறிய

நெல்லை ஆன்லைனில் கொள்முதல் செய்ய கூடாது - முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

’’அது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றல்ல நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயத்தை விவசாயிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள்’’

தமிழ்நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 105வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. திருவாரூர் நகர பகுதிக்கு உட்பட்ட புதுத் தெருவில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு முன்னால் அமைச்சர் காமராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, தமிழ்நாடு முழுவதும் கொரோனா தொற்று கூடுதலாக உள்ளது. அதனை அரசு விழிப்புணர்வோடு செயலாற்றி மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையாக உள்ளது.


நெல்லை ஆன்லைனில் கொள்முதல் செய்ய கூடாது - முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தற்போது சந்தித்து வரும் மிகப்பெரிய பிரச்சினை விவசாயிகள் தங்களுக்கு உரிய நிவாரணம் இதுவரை வழங்கப்படவில்லை என்ற வேதனையுடன் உள்ளார்கள். எப்படி என்று சொன்னால் தென்மேற்கு பருவ மழையால் நெல் பயிர்கள் பாதிப்பு, வடகிழக்கு பருவ மழையால் பாதிப்பு, அதுமட்டுமன்றி பருவம் தப்பி பெய்த மழையால் நெல் பயிர்கள் பாதிப்பு இந்த மூன்று மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை. முழுமையாக விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.


நெல்லை ஆன்லைனில் கொள்முதல் செய்ய கூடாது - முன்னாள் அமைச்சர் காமராஜ் பேட்டி

அதுமட்டுமன்றி இன்று சம்பா சாகுபடி தயாராகி கொண்டிருக்கிறது. 15 நாட்களாக அறுவடை பணிகள் நடைபெற்று வருகிறது. 15 நாட்களாக சம்பா சாகுபடி அறுவடை பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் இந்த வேளையில் இதுவரை நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட வில்லை. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கப்பட வேண்டும் என தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்த பொழுது அதற்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பதற்கு உத்தரவு ஆகிவிட்டது என தெரிவித்தார்.

வெறும் உத்தரவு மட்டும் நெல்லை கொள்முதல் செய்து விடமுடியாது நெல்லை கொள்முதல் செய்வதற்கு உத்தரவிட வேண்டும் மற்றும் தராசு அனுப்பி வைக்க வேண்டும், சணல் வேண்டும், சாக்கு அனுப்பி வைக்க வேண்டும் அதற்கான பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட வேண்டும் இவை எல்லாம் செய்து முடித்த பின்னரே விவசாயிகளிடமிருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய முடியும். 15 நாட்களாக டெல்டா மாவட்டங்கள் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது எனவே உடனடியாக நெல்லை கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டுமின்றி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து விவசாயிகள் நெல் மூட்டைகளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் நிச்சயமாக முடியாது. அது நடைமுறைக்கு சாத்தியமான ஒன்றல்ல நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயத்தை விவசாயிகள் ஒருபோதும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் எனவே ஆன்லைன் முறையை ரத்து செய்து எல்லா காலங்களிலும் போல நடைமுறை சிக்கல் இல்லாமல் விவசாயிகளிடம் இருந்து முழுமையாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என முன்னாள் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
ஸ்விஃப்ட், பலேனோவை முந்தி முதலிடம்; ரூ.4.99 லட்சம் மதிப்பில் கார்- ஹேட்ச்பேக் கார்களின் வரலாற்று கம்பேக்!
Embed widget