மேலும் அறிய

மார்க்கர் பேனாக்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் - சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் சாக்பீஸை மட்டும் பயன்படுத்த வேண்டும், சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாக்பீசை கும்பகோணத்தை அடுத்த திருப்புறம்பியம் கிராமத்தில் ஜரூராக  தயாரிக்கும் பணி நடைபெற்று வருகின்றது.  இந்த சாக்பீஸ் தயாரிக்கும் பணி திருப்புறம்பியம் மற்றும் உக்கரை கிராமம், அய்யம்பேட்டை, தாராசுரம், நாச்சியார் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து  சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா்கள் தயாரித்து வருகின்றார்கள். ஆனால் பல பள்ளிகளில் கரும்பலகை பதிலாக ஸ்கெட்ச் வைத்து எழுதும் பிளாஸ்டிக் பலகையை வைத்துள்ளார்கள். கொரோனா தொற்றால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படாததால், சாக்பீஸ் தொழில் மிகவும் முடங்கி விட்டது. இதனால் சுமார் நேரிடையாக 100க்கும் மேற்பட்டோரும், மறை முகமாக 300 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர்.


மார்க்கர் பேனாக்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் - சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

இந்நிலையில் தற்போது, கொரோனா தொற்றுக்கு பிறகு பள்ளி, கல்லுாரிகள் தொடர்ந்து இயங்குவதால், சாக்பீஸ் விற்பனை சூடு பிடித்துள்ளது. சாக்பீஸ் தயாரிக்கப்படும் மூலப்பொருட்களின் விலை ஜிஎஸ்டி போன்ற காரணத்தால் உயர்ந்துள்ளதால், சாக்பீஸ் பெட்டியின் விலையும் அதிகரித்துள்ளது. எனவே, தமிழக அரசு அனைத்து பள்ளிகளிலும் சாக்பீஸை மட்டும் பயன்படுத்த வேண்டும், சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலுக்கு நிதியுதவி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மார்க்கர் பேனாக்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் - சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

இது குறித்து திருப்புறம்பியத்தை சோ்ந்த நடராஜன் கூறுகையில், சாக்பீசின் தாயகம் கும்பகோணம் தான் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். கடலில் உருவாகம் ஒரு வகை உப்பை வைத்து சாக்பீஸ் தயாரிக்கப்படுகிறது. முதலாவதாக கும்பகோணத்தை அடுத்த கொட்டையூர் கிராமத்தில் தான் சாக்பீஸ் தயாரித்தார்கள். அதன் பின் அருகில் உள்ள ஊர்கள், கிராமங்கள் பரவியது. இப்போது திருப்புறம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் தயாரித்து வருகின்றார்கள். ஆனால் சாக்பீஸின் தேவை குறைந்ததால் பல குடும்பத்தினா்கள் இந்த தொழிலை விட்டு வேறு தொழில் செய்யது வருகின்றார்கள்.


மார்க்கர் பேனாக்களுக்கு அரசு தடை விதிக்க வேண்டும் - சாக்பீஸ் தயாரிக்கும் தொழிலாளர்கள் கோரிக்கை

ஒரு காலத்தில் கும்பகோணம் பகுதியில் தயாரிக்கப்படும் சாக்பீஸ் ராஜஸ்தான், கேரளா, ஆந்திரா, பெங்களூர், குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் கொரோனா தொற்றுக்க பிறகு சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து மற்ற மாநிலத்திற்கும், மாவட்டத்திற்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.   ஒரு டப்பாவில் 144 எண்ணிக்கை இருக்கும், அதன் விலை ரூ 30 மட்டும். இந்த சாக்பீசில் சிகப்பு, பச்சை, ஊதா, காவி, பான்டா உள்ளிட்ட பல கலர்களில் தயாரிக்கின்றோம்.

மேலும் பிளாஸ்டிக் போர்டில் எழுதும் மார்க்கர் உள்ள கெமிக்கல் உடல நலத்திற்கு கேடு விளைப்பதால் மாணவா்கள் தெரியாமல் மூக்கில் முகா்ந்தால் பலவிதமான உடல்உபாதைகள் ஏற்படவாய்ப்புள்ளது. எனவே, தமிழக அரசு ஸ்கெட்ச்சில் எழுதுவதை தடை செய்ய வேண்டும்,  பள்ளி மற்றும் கல்லுாரிகளில் கரும்பலகை வைத்த சாக்பீஸ் உபயோகப்படுத்த வேண்டும் என்று உத்திரவிட வேண்டும், சாக்பீஸ் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் பற்றாகுறையாக இருப்பதால், அதனை உரிய முறையில் கிடைப்பதற்கும், சாக்பீஸ் தொழிலை ஊக்கும் விதமாக  சிறு தொழில் ஆக அறிவித்து வங்கி கடன் வழங்க வேண்டும் என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடிVikravandi PMK Candidate | விக்கிரவாண்டியில் அன்புமணி போட்டி!பரபரக்கும் தேர்தல் களம்Modi Meloni | மீண்டும் #MELODI! மெலோனியுடன் மோடி! வைரல் PHOTOS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
Breaking News LIVE: ஜூன் 22 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
“நான் இறந்துவிட்டேன்” - சமூக வலைதளத்தில் பதிவிட்ட திமுக எம்.எல்.ஏ! அமைச்சர் நேருவுடன் மோதலா?
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் மனசு புகார் பெட்டி: மாநில மகளிர் ஆணையத் தலைவர்
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Crime: வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே ஜாக்கிரதை! பட்டப்பகலில் மிளகாய்ப்பொடி தூவி நகை பறிப்பு!
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
Vikaravandi by election 2024: அதிமுக இடைத்தேர்தல் புறக்கணிப்பு... களத்தில் தீவிரம் காட்டும் பாமக...
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
வார விடுமுறை: தாம்பரம் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் குறித்து தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் !
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
TN 12th Revaluation 2024: நாளை மறுநாள் வெளியாகும் பிளஸ் 2 பொதுத்தேர்வு மறுகூட்டல்‌, மறுமதிப்பீடு முடிவுகள்‌; காண்பது எப்படி?
Embed widget