மேலும் அறிய

சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உண்ணாவிரத போராட்டம்!

Ganesh Chaturthi: விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கோரி இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் தனிநபராக உண்ணாவிரத தொடர் போராட்டத்தை தொடங்கியுள்ளார். 

தமிழகத்தில் வரும் பத்தாம் தேதி இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி(Ganesh Chaturthi) விழா கொண்டாடப்படவுள்ளது. ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தியின் போது கோயில்களிலும் பொது இடங்களிலும் பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பின்னர் அவற்றை நீர்நிலைகளில் கரைத்து இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக விநாயகர் சதுர்த்திக்கு கோயில்கள் மற்றும் பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபடவும், ஊர்வலமாக கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கவும் தமிழ்நாடு அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு இந்துக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 


சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உண்ணாவிரத போராட்டம்!

அதனைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யவும், ஊர்வலங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த சட்டநாதர் கோயில் ஆலயத்தின் வாயிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஆபத்து காத்த விநாயகர் கோயில் எதிரே இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் மாநில செயலாளர் கொள்ளிடம் சுவாமிநாதன்  தொடர் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியுள்ளார். அக்கட்சியைச் நிர்வாகிகள், திருக்கோயில் திருமடங்கள் பாதுகாப்பு பேரவை மாநில செயலாளர் அழகிரிசாமி  ஆகியோர் முன்னிலையில் சுவாமிநாதன் தனிநபராக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனையொட்டி அப்பகுதியில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு அனுமதி கோரி உண்ணாவிரத போராட்டம்!

‛‛தியேட்டர்களை திறக்க அனுமதிக்கும் அரசு, விநாயகர் சிலை வழிபாட்டுக்கு தடை விதிப்பது நியாயமில்லை ஒன்று. கட்டுப்பாட்டுடன் சிலை வைத்து, பூஜை செய்து, கடலில் கரைக்க அனுமதிக்க வேண்டும். சிலையுடன், பொதுமக்கள் செல்லும் எண்ணிக்கையை காவல்துறையினர் தீர்மானிக்கலாம். பஜனை பாட, அன்னதானம், சுண்டல் வழங்க தடை விதிக்கலாம். கூட்டம் கூட அனுமதிக்க மாட்டோம் என, சிலை வைப்பவர்களிடம் எழுதி வாங்கலாம். காவல்துறையினர் கண்காணிப்பை அதிகரித்து, சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்,’’ என்ற கருத்தை அவருக்க ஆதரவாக அங்கு திரண்டு வருவோர் கருத்து தெரிவிக்கின்றனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

மேலும் சிலர் கூறுகையில், ‛‛கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமிழ்நாடு அரசு விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும், கோயில்கள் பொது இடங்களில் பிரதிஷ்டை செய்ய தடை விதித்திருப்பது இந்த இக்கட்டான சூழலில் மக்கள் ஏற்றுக்கொள்ள கூடியது ஆகும். பொது இடங்களில் பிரதிஷ்டை செய்து ஊர்வலமாக எடுத்துச் செல்லும் விநாயகர் ஊர்வலத்தில் நாம் எப்போதும் கூட்டத்தை காண முடிகிறது. இதனால் கொரோனா வைரஸ் பரவும் அச்சுறுத்தல் இருப்பதால் இதனை புரிந்து கொண்டு பொதுமக்கள் தங்கள் வீடுகளிலேயே விநாயகரை பிரதிஷ்டை செய்து அதனை நீர்நிலைகளில் கரைத்து வழிபட வேண்டுமென்றும்,’’ மற்றொரு தரப்பு கருத்து தெரிவித்தனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

ஒரு நாள் உழைப்பு... ஒரே நொடியில் ஏமாற்றம்! கும்பகோணத்தில் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய மர்மநபர்
ஒரு நாள் உழைப்பு... ஒரே நொடியில் ஏமாற்றம்! கும்பகோணத்தில் போலி ரூபாய் நோட்டை கொடுத்து மூதாட்டியை ஏமாற்றிய மர்மநபர்
தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய திடீர் மழை: நனைந்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள்
தஞ்சாவூர், கும்பகோணம் சுற்றுவட்டாரங்களில் வெளுத்து வாங்கிய திடீர் மழை: நனைந்து கும்மாளமிட்ட பள்ளி மாணவிகள்
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
20 ஆண்டுகளாக தூர்வாரப்படாத தாமரைக்குளம்! ஆக்கிரமிப்பால் 2 ஏக்கராக சுருங்கியது: விவசாயிகள் விடுத்த எச்சரிக்கை என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?
குட்பை சொன்ன ராமதாஸ்? அன்புமணிக்கு எதிராக சவுண்ட் விட்ட ஆதரவாளர்கள் கதி என்ன?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai letter to Vijay : 500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! CM விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
500 மீட்டர் சுற்றளவில் 129 டாஸ்மாக் கடைகள்.! சிஎம் விஜய்க்கு ஆதாரத்தோடு லிஸ்ட்- அண்ணாமலை அதிரடி
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
கர்நாடகம் போனால் காவிரியை கையோடு கொண்டுவந்திடலாம் என நினைச்சுட்டாரோ.! சிஎம் விஜய்யை விளாசிய ஸ்டாலின்
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
ரூ. 11 கோடியில் சிஎம் விஜய்க்கான புதிய அலுவலகம்.! என்னென்ன வசதிகள் .?
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Narendra Modi: மன்னிச்சு விடுறேன்.. கெட்ட வார்த்தை பேசிய போராட்டக்காரர்கள்.. வீடியோ வெளியிட்ட மோடி!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Rahul Gandhi: தமிழ்நாடு வரும் ராகுல்காந்தி.. விஜயை சந்திக்காதது ஏன்? .. இதுதான் பிளான்!
Thoppu venkatachalam : மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
மாஜி அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் பதவியை பறித்த ஸ்டாலின்.! இது தான் காரணமா.?
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
ஸ்கார்பியோ கார், கறி விருந்து, எம்எல்ஏ சீட்டுக்கு 10 கோடி வசூல் ? விஜயபாஸ்கரை ரவுண்டு கட்டும் அதிமுக
TASMAC shops : 717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப் தொடங்க அனுமதி.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
717 டாஸ்மாக் கடைகளுக்கு பதிலாக FL-2 மதுபான கிளப்.? விஜய் அரசை வெளுத்தெடுக்கும் நயினார்
Embed widget