மேலும் அறிய

சர்வதேச கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் - விரைந்த இந்திய கடற்படை

மீன் பிடிக்க சென்ற போது எஞ்சின் பழுது அடைந்ததால் காற்றின் வேகத்தில் திசை மாறிய விசைப்படகு மற்றும் 12  மீனவர்களை மீட்க மீனவர்களுடன் இந்திய கடற்படையினர் சர்வதேச கடல் எல்லை பகுதிக்கு விரைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 25 -ஆம் தேதி பூம்புகாரை சேர்ந்த விஜயரங்கன் என்பவரின் 38 வயதான மகன் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பைரவகாளி என்ற பெயருடைய விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான சந்திரகுமார், 45 வயதான அஞ்சப்பன், 45 வயதான தமிழ்ச்செல்வன், 25 வயதான நிலவரசன், 40 வயதான கண்ணன், 65 வயதான மாசிலாமணி, 34 வயதான பிரகாஷ், மற்றும் மடத்துகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சித்திரவேல், 40 வயதான சங்கர்,  திருமுல்லைவாசல் கிராமத்தை  சேர்ந்த 23 வயதான கார்த்திக், தரங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த 65 வயதான மாசிலாமணி, 23 வயதான தேவேந்திரன் உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். 


சர்வதேச கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் - விரைந்த இந்திய கடற்படை

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஜெயச்சந்திரனின் விசைப்படகு எஞ்சின் பழுதடைந்துள்ளது. இதனை அடுத்து தகவல் தெரிவிப்பதற்காக அந்த படகில் இருந்து நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களின் படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் கடற்கரை  காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு போலீசார் அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் பழுதடைந்த  பூம்புகார் விசைப்படகு மற்றும் மீனவர்களை  தேடும் பணியில் ஈடுபட்டனர். 


சர்வதேச கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் - விரைந்த இந்திய கடற்படை

ஆனால் குறிப்பிட்ட இடத்தில் படகு இல்லாததால் விசைப்படகு மற்றும் அதிலிருந்து மீனவர்கள் காற்றின் வேகத்தை வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றிருக்கலாம் என கருதி  இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து இந்திய கடற்படை சர்வதேச கடல் எல்லையில் படகு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.  இதனை அடுத்து பழுதான படகு மற்றும் மீனவர்களை  மீட்டு அழைத்து வர இந்திய கடற்படை உதவியுடன் பூம்புகாரை சேர்ந்த எட்டு மீனவர்கள் விசை படகில் சென்றுள்ளனர். அவர் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 12 பேரை நாளை காலை மீட்டு வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுக்கடலில் மீனவர்கள் சிக்கி தவித்து வருவதால் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 கால்நடை நிலையங்களில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இந்தியாவில் ஆண்டுதோறும் ரேபிஸ் நோய் தாக்கிய நாய்கள் கடிப்பதால் குழந்தைகள் உள்பட சுமார் 20,000 பேர் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு (நாய்களுக்கு) ஆண்டுதோறும் தவறாமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். உலக வெறிநோய் தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 41 கால்நடை நிலையங்களிலும் செல்லப்பிராணிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


சர்வதேச கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் - விரைந்த இந்திய கடற்படை

மயிலாடுதுறை கால்நடை மருந்தக மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில், மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திச் சென்றனர். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி தலைமையில் கால்நடை மருத்துவக்குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Embed widget