மேலும் அறிய

சர்வதேச கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் - விரைந்த இந்திய கடற்படை

மீன் பிடிக்க சென்ற போது எஞ்சின் பழுது அடைந்ததால் காற்றின் வேகத்தில் திசை மாறிய விசைப்படகு மற்றும் 12  மீனவர்களை மீட்க மீனவர்களுடன் இந்திய கடற்படையினர் சர்வதேச கடல் எல்லை பகுதிக்கு விரைந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா பூம்புகார் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 25 -ஆம் தேதி பூம்புகாரை சேர்ந்த விஜயரங்கன் என்பவரின் 38 வயதான மகன் ஜெயச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பைரவகாளி என்ற பெயருடைய விசைப்படகில் அதே ஊரைச் சேர்ந்த 25 வயதான சந்திரகுமார், 45 வயதான அஞ்சப்பன், 45 வயதான தமிழ்ச்செல்வன், 25 வயதான நிலவரசன், 40 வயதான கண்ணன், 65 வயதான மாசிலாமணி, 34 வயதான பிரகாஷ், மற்றும் மடத்துகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த 35 வயதான சித்திரவேல், 40 வயதான சங்கர்,  திருமுல்லைவாசல் கிராமத்தை  சேர்ந்த 23 வயதான கார்த்திக், தரங்கம்பாடி கிராமத்தை சேர்ந்த 65 வயதான மாசிலாமணி, 23 வயதான தேவேந்திரன் உள்ளிட்ட 16 க்கும் மேற்பட்டோர் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். 


சர்வதேச கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் - விரைந்த இந்திய கடற்படை

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கோடியக்கரைக்கு தென்கிழக்கே  மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது ஜெயச்சந்திரனின் விசைப்படகு எஞ்சின் பழுதடைந்துள்ளது. இதனை அடுத்து தகவல் தெரிவிப்பதற்காக அந்த படகில் இருந்து நான்கு பேர் அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சக மீனவர்களின் படகு மூலம் நாகைக்கு வந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் பூம்புகார் கடற்கரை  காவல்நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் இச்சம்பவம் குறித்து மாவட்ட கடல்சார் மீன்பிடி சட்ட அமலாக்க பிரிவு போலீசார் அளித்த தகவலின் பெயரில் கடலோர காவல் படையினர் பழுதடைந்த  பூம்புகார் விசைப்படகு மற்றும் மீனவர்களை  தேடும் பணியில் ஈடுபட்டனர். 


சர்வதேச கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் - விரைந்த இந்திய கடற்படை

ஆனால் குறிப்பிட்ட இடத்தில் படகு இல்லாததால் விசைப்படகு மற்றும் அதிலிருந்து மீனவர்கள் காற்றின் வேகத்தை வேகத்தில் திசை மாறி சர்வதேச கடல் எல்லைக்குள் சென்றிருக்கலாம் என கருதி  இந்திய மற்றும் இலங்கை கடற்படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதனை தொடர்ந்து இந்திய கடற்படை சர்வதேச கடல் எல்லையில் படகு இருப்பதை உறுதி செய்துள்ளனர்.  இதனை அடுத்து பழுதான படகு மற்றும் மீனவர்களை  மீட்டு அழைத்து வர இந்திய கடற்படை உதவியுடன் பூம்புகாரை சேர்ந்த எட்டு மீனவர்கள் விசை படகில் சென்றுள்ளனர். அவர் நடுக்கடலில் சிக்கி தவிக்கும் மீனவர்கள் 12 பேரை நாளை காலை மீட்டு வர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நடுக்கடலில் மீனவர்கள் சிக்கி தவித்து வருவதால் மயிலாடுதுறை மாவட்ட மீனவ கிராமங்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது.


உலக வெறிநோய் தடுப்பு தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 கால்நடை நிலையங்களில் செல்லப்பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 

இந்தியாவில் ஆண்டுதோறும் ரேபிஸ் நோய் தாக்கிய நாய்கள் கடிப்பதால் குழந்தைகள் உள்பட சுமார் 20,000 பேர் உயிரிழக்கின்றனர். இதைத் தடுக்க வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளுக்கு (நாய்களுக்கு) ஆண்டுதோறும் தவறாமல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்த வேண்டும். உலக வெறிநோய் தினத்தையொட்டி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 41 கால்நடை நிலையங்களிலும் செல்லப்பிராணிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.


சர்வதேச கடல் எல்லையில் சிக்கி தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் - விரைந்த இந்திய கடற்படை

மயிலாடுதுறை கால்நடை மருந்தக மருத்துவமனையில் நடைபெற்ற முகாமை, மயிலாடுதுறை கோட்டாட்சியர் யுரேகா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இந்த முகாமில், மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் ஏராளமான பொதுமக்கள் தங்கள் செல்லப் பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்திச் சென்றனர். கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் முத்துக்குமாரசாமி தலைமையில் கால்நடை மருத்துவக்குழுவினர் தடுப்பூசி செலுத்தினர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கண்டுகொள்ளாத EPS? விழாவுக்கு வராத தங்கமணி! அதிமுகவில் மீண்டும் சிக்கல்Selvaperunthagai | ”செ.பெருந்தகைய மாத்துங்க... காங். கட்டப்பஞ்சாயத்து கமிட்டியா?” டெல்லிக்கு படையெடுத்த நிர்வாகிகள்! | Congress”ரூ.12,000 வச்சுக்கோங்க” கையில் கொடுத்த மாணவி! பூரித்து போன அமைச்சர்Amman Arjunan MLA: வருமானத்திற்கு அதிகமாக சொத்து!  எம்எல்ஏ வீட்டில் ரெய்டு! எஸ்.பி.வேலுமணிக்கு செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
MK Stalin : “அழிக்க நினைக்கின்றீர்களா? நாம் தமிழர்! – முதல்வர் ஸ்டாலின் பரபரப்பு அறிவிப்பு..!
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
களைகட்டும் தவெக 2ம் ஆண்டு விழா; பாஜக, திமுக-விற்கு எதிராக பேனர்கள்! என்ன பேசுவார் விஜய்?
Seeman About Kaliammal: காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
காளியம்மாள் தவெகவில் சேர உள்ளது தனக்கு முன்கூட்டியே தெரியும், தங்கைக்கு வாழ்த்துக்கள் - சீமான்
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Tamilnadu Roundup: விஜய்க்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு! இன்று மகாசிவராத்தரி - பரபரக்கும் தமிழ்நாடு
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம்   ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...”  எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Su Venkatesan : 500 ரூபாய் விவகாரம் ”காலில் குத்தும் முள்ளைதான் பிடுங்குவோம்...” எச்.ராஜாவுக்கு சு.வெங்கடேசன் பதிலடி
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Maha Shivratri 2025: ஓம் சிவ ஓம்.. இன்று மகா சிவராத்திரி! சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்!
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
Bus Accident : அடுத்தடுத்து மோதிய ஆம்னி பேருந்துகள்.. அதிகாலையில் நிகழ்ந்த பயங்கர விபத்து! பயணிகள் நிலை என்ன?
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
அமித்ஷாவுடன் ஒரே மேடையில் ஏறும் துணை முதலமைச்சர்.. பாதுகாப்பு வளையத்தில் கோயம்புத்தூர்
Embed widget